வெள்ளி, 12 மே, 2017

சங்கத்தமிழ் கவிப்பூங்கா

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி யே. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்
கவிஞர்கள் 24/3/17ம் நாள்
நடந்து முடிந்த சோகமெல்லாம் தூசாகும் தருணமிது
எனும் தலைப்பில் பாரதிதாசன் போட்டியில்
கவிதை எழுதி
தேர்வு பெற்றவர்கள்....
சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார்கள் கவிதை எழுதிய அனைத்து பாவலர்களுக்கும் வாழ்த்துக்கள்
சிறப்பான கவிதைகளை தேர்வு
செய்த நடுவர் வெ.தமிழரசி மற்றும் உடன்
பயணித்த நடுவர் குழு உறுப்பினர் ப.ஜெகதீஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
தலைமை நிர் வாகி ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில் முகம்மது
சோகங்கள் தூசாகும் தருணமிது
கால நேரம் கூடி வந்து
கல்யாணம் ஆனாலும்
கன்றாகத் தாயாக
நின்றால்தான் பெண்ணுக்கு
புகுந்த வீட்டில் மரியாதை
பிள்ள வர நாளானால்
தொல்லைதான் அவளுக்கு
சொந்த பந்தங்களும் ஊரும்
குந்தகமாய் குதர்க்கம் பேசி
மலடி பட்டம் கட்டும் அந்த
கல்லடியால் மனசு வலிக்கும்
விடியாப் பொழுதை
விடியவே வைக்கும்
விடிவெள்ளி ஒன்று
கருவாக உருவாகும் அவள் வயிற்றில்
பத்து மாதமும்
பிடித்ததைத் தவிர்த்து
பத்தியமாய் இருந்து
பகல் இரவாய் விழித்திருப்பாள்
மசக்கையால் அவள் படும் பாடு
அயற்சியைத்தான் தரும்
சாப்பிட்டது எல்லாம்
செரிமானம் இல்லாமல்போகும்
இடை நோகும் உடல் நோகும்
தொடையும் நடுங்கும்
மருத்துவரின் முயற்சியால்
மகனோ மகளோ மழலையின்
குவாகுவா சத்தமே
சோகங்கள் தூசாகும் தருணமிது
சொல்லொண்ணாத் துன்பங்கள் எல்லாம்
இல்லாமல் போயொழியும்
அல்லல் எல்லாம் நீங்கி
ஆனந்தம் தந்தருளும்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக