வெள்ளி, 12 மே, 2017

காதல் கவிதை

உன் இதயப்பக்கங்களைப்புரட்டுகிறேன் அதில் எங்கும் என் முகங்களே ஓவியங்களாய்.
உன் இதயப் பக்கங்களைப் புரட்டுகிறேன்
அதில் எங்கும் என் முகங்களே ஓவியங்களாய்
அழியாமல் விடாப் பிடியாய் நிற்கும்
செடியின் வித்துக்கள் போல் நான் இருக்கி்றேன்
உன் கனவுத் தெருக்களில் சதா
நான் நடமாடிக்கொண்டிருக்கிறேன்
உன் இதயத் துடிப்புஎப்பொழுதும்
என் இதயத்தில் பிரதிபலிக்கிறது
நீ என்னை ஓவியமாக தீட்டியிருக்கிறாய்
நான் உன்னை காவியமாக அல்லவா தீட்டியிருக்கிறேன்
நீயன்றி எனக்கு வேறு ஏது ஞாபகம்
நீ இல்லாமல் எனக்குஏது வாழ்க்கை
உன் மனத்தை நான் கண்டு கொண்டேன்
என் மனத்தை நீ கண்ட பின்னும் மெளனம் ஏனடி
உள்ளுக்குள்ளே வச்சு துடிச்ச ஊமை நாடகம் போதும்
உண்மையைச்சொல்லி சொந்தத்திலே மாலையும்கழுத்துமாவாழ்வோம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக