சனி, 31 டிசம்பர், 2016

24-12-2016 தமிழமுது கவிசாரல்

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
- பாவேந்தர்
வணக்கம் பாவலர்களே #கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்...
தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நேற்றைய 24-12--16 நாளாம் போட்டி கவிதையின் தலைப்பு #விழியில்_வடியும்_நெருப்புத்துளிகள்
வெற்றியாளர் #கவிஞர்_சரஸ்வதிராசேந்திரன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
#கவிதாயினி_கவிச்சிற்பி_உதயசகி நடுவராக பங்கேற்று சிறப்பான கவிதையை தேர்வு செய்தமைக்கு அவருர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கண்ணதாசன் சான்றிதழ்
---தலைப்பு----விழியில் வடியும் நெருப்புத்துளிகள்
விழியில் வடியும் நெருப்புத்துளிகள்
சுழன்றடிக்கும் சூறாவளியாய் தீயை கக்கட்டும்
விருப்பும் வெறுப்பும் வாழ்க்கையில் உண்டு
பொறுமையின் சின்னம் பொறுப்பான வாழ்க்கை
உண்மைதான் இருப்பினும் ஒரு உயிரை
எரித்துக்கொண்டே இருந்தால் எந்த உயிர்தான் உயிர்க்கும் ?
அன்பென்றால் அனைவருக்கும் நோயில்லை
வம்பென்றால் நாடி நரம்புகள் துடிக்கும்
பெண்ணே பொறுத்தது போதும் பொங்கி எழு
பிள்ளை பூச்சியாய் முடங்கியது போதும்
அவிழ்த்து விடு அடிமை கயிற்றை
அடுப்படியில் அமிழ்ந்து கிடந்தது போதும்
அறியட்டும் உன் படைப்பின் திறமையை உலகம்
ஞாலம் வளர்ச்சிப் பெறவேண்டுமாயின்
கால சுழற்சி கண்டிப்பாய் வேண்டும்
உன்னுள்ளிருக்கும் உயிர் மன ஓசைகள்
உசுப்பி விழிப்படைய வைக்கட்டும் உன்னை
விழிகளில் தீப்பொறி ஏந்தி உன்
விடுதலைக்காக வீறு கொண்டாயானால் மாறும் நிலைமை
சரஸ்வதிராசேந்திரன்
#தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகத்தினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக