வெள்ளி, 30 டிசம்பர், 2016

தமிழமுது கவிச்சாரல் -15-10-16



#தமிழமுது_கவிச்சாரல்_படப்போட்டி_வெற்றியாளர்
வணக்கம் பாவலர்களே 15--10--16 நாளாம் #படப்போட்டிக்_கவிதையின் வெற்றியாளர்
#கவிஞர்_சரஸ்வதி அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டும் போட்டியில் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்
#தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகி #கவிதாயினி_உஷாராணி பங்கேற்று சிறப்பான கவிதையை தேர்வு செய்த நடுவருக்கு வாழ்த்துக்களும் நன்றியும்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
#தமிழமுது_கவிச்சாரல்_படப்போட்டி_சன்றிதழ்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
 SaraswathiRajendran   எளிதாக இல்லயென்றாலும் வாழ்வை
பழுதாக்கிக் கொள்ளாமல்
அறநெறியின் வழியிலே நின்று
அனைத்துக் கடமைகளையும் நிறைவு செய்து
இன்பத்தின் எல்லையில் திழைத்தவள்
நேர்மை குறையாமல்
நிந்தனை செய்யாமல் பிள்ளைகளை
முதுமையிலும் தன் கையே தனக்குதவி என்று
தள்ளாடும் வயதிலும் தன் பாட்டை கவனித்து
மனக்கட்டுப்பாட்டில் வல்லவளாய்
மன்னிக்கும் மனத்தில் நல்லவளாய்
பொறுமைக்கு இலக்கணமாய்
போற்றும் குணத்தில் இலக்கியமாய்
பழுதில்லாமல் வாழ்கிறாள்
மற்றவருக்கு ஒரு பாடமாய் நறும்பூ மலராக நல் மனம் வீசுகிறாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக