மாசிலாமணிக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் பண்ணி யே ஆகணும்முனு டாக்டர் சொல்லிட்டார் . இரண்டிலிருந்து மூன்று இலச்ச்ங்கள் ஆகலாம் .
சிக்கனமா யிருந்து நே ர்மை யாய் சம்பாதித்து முன்னுக்கு வந்தவர் .கால்கு லேட்டட் பெர்சன் வயது எண்பது
அவருக்கு சம்மதமில்லா விட்டாலும் மனைவி தன் கணவருக்கு பைபாஸ் பண்ணியே ஆகவேண்டும் என
உறுதியாகஇருந்தாள் ,அன்பு கணவராயிற்றே மூன்றைஇலச்சங்களை விழுங்கி மாசிலாமணி உயிர்பெற்றார் வீட்டற்கு வந்ததும்
" பைத்தியக்காரியா இருக்கியே இந்த வயசிலே இவ்வளவு செலவு தேவையா ? போனால் போகட்டுமுன்னு விடாம காசை கரியாக்கிட்டே
" என்னங்க இப்படி சொல்லுறீங்க ? எனக்கு இந்த நிலைமை வந்திருந்தால் நீங்க சும்மா விட்டுருப்பீர்களா ? "
" நான் செலவு பண்ணியிருக்கமாட்டேன், உன்னைமாதிரி" என்றதும்தான் தாமதம் விசாலி ஹார்ட் அட்டாக்கில் போய்விட்டாள்.
குமுதம் 06 /04 /2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக