ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பலபத்திரிக்கைகளில் வந்த எனது ஜோக்குகள்

சாராய பொம்மன் 

எதற்கு கேட்கிறாய் மாமூல் ? யாரை கேட்கிறாய் மாமூல் ?
அடுப்பு எரிகிறது ,சாராயம் வடிகிறது ,உனக்கேன் கொடுக்க
வேண்டும் மாமூல் ?
எங்களுடன் ஊறல் போடவந்தாயா ?.காயிச்சி வடித்தாயா?
வாங்கி குடித்தாயா?இல்லை விற்கத்தான் வந்தாயா? ஓசியில்
குடிப்பவனே உனக்கேன் கொடுக்க வேண்டும் மாமூல் ?
நீ என்ன மாமனா ?மச்சானா ?
( மொபைல்போலிசை ,குடி போதையில் சாராய வியாபாரி
ஒருவன் பேசினால் எப்படி இருக்கும் ஒரு கற்பனை )  குமுதம்
'' அவர் போலி டாக்டருன்னு எப்படி சொல்றே ?''
''அடிக்கடி நியாபக மறதிஏற்படுதுன்னு சொன்னதுக்கு
மெமரி கார்டு யூஸ் பண்ணுங்கன்னுசொல்றாரே "
கல்கி ----
""குடியிருக்கிற ஓனர்வீட்டிலேயே திருடீருக்கியே
எ என்ன தைரியம் உனக்கு ?''
''வீட்டை காலி பண்ணு காலி பண்ணுன்னு அவர்தான்
எஜமான் ஒரு மாசமா சொல்லிகிட்டே இருந்தாரு "
மல்லிகை மகள் ---
''ஹார்டுவேர் ,சாப்டுவேர் படிப்பெல்லாம் முடிச்சுட்டு
அமெரிக்காபோனியே என்ன செய்யிறே?''
''சர்வரா இருக்கேன் "
அவள் விகடன் ----
''நம்ம கோபால் மூணாவது தடவையா வந்த ஹார்ட்
அட்டாக்கில் இறந்து விட்டானாமே ?''
''அவன் ஒரே அட்டம்டில் எதையுமே பாஸ் பண்ணியது
கிடையாதே "
குங்குமம் --------
''நம்ம கூட படித்த தாயுமானவன் இப்ப என்ன ஆனான் ?''
''தந்தையும் ஆனான் "
குமுதம் -------
''பத்திரிகை ஆசிரியர் உங்களை ஏன் வேலையே விட்டே
விரட்டி விட்டார் ?''
""ஆசிரயர் படத்தை போட்டு பதிலளிக்கிறார் என்று
போடுவற்கு பதில் பல்லிளிக்கிறார் என்று போட்டுவிட்டேன் ''
இதயம் பேசுகிறது ----
''ஏங்க,நான் நல்லா சமைப்பேன் ,நல்லா பாடுவேன்னு
உங்க நண்பர் கிட்ட பொய் சொன்னீங்க "?
'' உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு ஏதாவது
சமாதானம் சொல்லணுமே ,அதுக்காகத்தான் ''
பெண்கள் மலர் ----
''உனக்கு அடிக்கடி மயக்கம் வருதுன்னு சொன்னியே
பி .பி யா , பேபியா "
ஆனந்தவிகடன் ----
''டாக்டர் நீங்க ஏன் டாக்டர் தொழிலை விட்டுட்டு
ஜோக் எழுத வந்தீங்க ?''
''அங்கே அறுத்தா அழுவுறான் ,இங்கே அறுத்தா
சிரிக்கிறான் அதான் ''
ஆனந்தவிகடன் ----
''அவன் சம்பளத்திலே எப்படி சுவேகா வாங்கினான் ?''
''எல்லாம் ஆபீசிலே சுவாகா பண்ணித்தான் ''
ஆனந்தவிகடன் -------
''அந்த நடிகை படப்பிடிப்பை கனடாவில் தான் வைக்கணும்ன்னு
பிடிவாதம் பிடிக்கிராங்களே ஏன் ''
''அந்த நாடுதான் இன்னும் அவங்க பார்க்கலையாம் ''
கல்கி -----
'
'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக