ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

தினமலர் நாளிதழ்----25-2-2005

போலிகளை பாராட்டுவோம் 
இன்று கள்ளநோட்டு ,போலி ரெவின்யூ ஸ்டாம்பு ,போலி முத்திரைத்தாள் ,போலி டிரைவிங் லைசன்ஸ் 
போலி கல்வி ,/ஜாதி சான்றிதழ் ,போலி பாஸ்போர்ட் ,போலி ரேசன் கார்டு ,போலி தொலைபேசி இணைப்பகம் 
போலி அதிகாரி ,போலி குற்றவாளிகள் என போலித்தனங்கள் அதிகரித்துவிட்டன
இந்த போலி பிடிபட்டால் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர் இது நியாயமா ?இவர்கள் ஏன் இந்த போளித்தனகளில் ஈடுபடுகின்றனர் என்பதை குண்டக்க மண்டக்காவாக 
யோசித்துப்பார்த்தால் ,இவர்களை தண்டிப்பதை விட பாராட்டியே ஆகவேண்டும் என்ற ஞானோதயம்
ஏற்படும் எல்லோருக்கும் . வறுமையை ஒழிக்க முடியவில்லை ,எல்லோரிடமும் பணம்
ஏராளமாக இருந்தால் எல்லோரும் பணக்காரராகிவிடுவார்கள் என்ற நல்லெண்ணத்தில்
கள்ளநோட்டு அடிக்கின்றனர் .ரெவின்யூ ஸ்டாம்பு முத்திரைத்தாள் தட்டுப்பட்டால் மக்கள்
படும் அவஸ்தையை நீக்கும் நல்லெண்ணத்தில் ,போலியாக அவற்றை தயாரித்து தாராளமாக அளிக்கின்றனர் ,கல்வி/ஜாதி சான்றிதழ் ,ரேஷன் கார்டு ,டிரைவிங் லைசன்ஸ் .,தொலைபேசி இணைப்பு வாங்குவதற்குள் மக்கள் திக்குமுக்காடி அரை பைத்தியமாக மாறிவிடும் திணறலை நீக்குவோமே என்ற நல்லெண்ணத்தில் போலியாக அவற்றை தயாரித்ஹு சுலபமாக வாங்க வழி செய்கின்றனர் .அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை அல்லது புகார் அளி க்கவோ ,கையெழுத்து வாங்கவோ மாதக்கணக்கில் காத்துக்கிடக்கவேண்டியிருக்கிறதே ,இந்த த்தாமதத்தையும் ,வேதனையையும் நீக்க உதவுவோமே என்ற நல்லெண்ணத்தில் போலி அதிகாரியாக மாறிவிடுகின்றனர் உண்மைக்குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்குள் பல தலை முறை கடந்து விடுகின்றது
போலீஸ் திறமையின் மீது நம்பிக்கைஇழந்தால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து சமூக பதட்டம் வரும் அந்த சூழ் நிலையை தடுப்போமே என்ற நல்லெண்ணத்தில் போலி குற்றவாளிகளாக மாறிவிடுகின்றனர் .ஏழைகள் முன்னேறவும் தட்டுப்பாடுகளை நீக்கவும் துணை செய்யாத அரசை தண்டிக்கிறோமா ?சான்றிதழ்களை சுலபமாகப்பெற துணை செய்யாத நிவாகத்தை தண்டிக்கிறோமா? சரியாக செய்யல படாத அரசையும் ,அதிகாரிகளையும் கண்டுகொள்ளாமல் தண்டிக்காமல் விடுவது நியாயம்
என்றால் அரசும் அதிகாரிகளும் செய்யத்தவறிய வேலையை(போலித்தனமாகவாவது)
செய்யும் போலிகளை பாராட்டி கவுரவிப்பதுதானே நியாயம் .
தினமலர் ---25-2-2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக