ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

கன்னி அவளைக்காணவில்லை --வல்லமை இதழ்----ஏப்ரல் 20-4- 2015


மாலைமறை கதிரவனில் நிறமெடுத்துப்
பல்லவர் சிற்பமென உருவெடுத்துப்
பைங்கிளியின் அலகினில் இதழெடுத்துப்
பேச்சினியிலே அமுதச்சுவை படைத்தாள்
கண்ணை யுறுத்தும் மலை முகடெனவே
மார்பின்வளம் கொழிக்கவே நின்றாள்
ஒடிந்திடும் புது நாணலிலே
வளைந்திடும் இடை படைத்தாள்
வந்தென்மார் பினில்முகம் புதைத்தாள்
எழுந்தவளைத் தழுவச் சென்றேன்
கன்னி அவளைக் காணவில்லை!
கன்னி அவளெங்கே சென்றாள்?
கனவினிலே நான்கண்ட கன்னியவளைக்
கருத்தினிலே கொண்டு எழுத்தில் வடித்திட்டேன்!
வல்லமை இதழ்---ஏப்ரல் 20

2 கருத்துகள்: