புதன், 15 ஏப்ரல், 2015

இன்றைய உலகம்

இன்றைய உலகு
 அவசரமானது
சாவி கொடுத்த
இயந்திரங்களாய்
மக்கள்
கணவன் மனைவி
இருவருமே
இறக்கை கட்டி
பறக்கிறார்கள்
அலுவலகத்துக்கு '
கூட்டு குடும்பம்
குலைந்து போனதால்
குழந்தை பிறக்கவே
திட்டம் தீட்ட வேண்டிய
பின்னணி
குழந்தையே
பாரமாக இருக்கும்
பரிதாபம்
பள்ளியிலிருந்து
வரும் குழந்தை
தானே பாலையும்
பிரட்டையும்
எடுத்து சாப்பிடும்
கொடுமை
விளையாட இடமில்லாததால்
தொலைக்காட்சியோடும்
கணினியோடும்
ஐக்கியம் ஆகிவிடும்
அவலம்
அன்றைய காலத்தில்
இருந்த
உற்சாகமும்
இன்பமும்
இன்றைய
குழந்தை வளர்ப்பிலும்
குடும்ப வாழ்க்கையிலும்
கிடைக்கவில்லை என்பதுதான்
உண்மை\

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக