செவ்வாய், 23 செப்டம்பர், 2014

என் பார்வையில் கண்ணதாசன்

                                           என் பார்வையில் கண்ணதாசன்

    கண்ணதாசன்   படிப்பறிவு இல்லாவிட்டாலும் பட்டறிவால் வாழ்க்கை அவலங்களை  பாடல்களாக புனைந்தவர்.ஒரு நாத்திகனாக இருந்து  ஆத்திகமானவர் கதை ,கவிதை ,கட்டுரை,அர்சியல் என்று எல்லாத்துறையிலும் எழுதுவதில்வல்லவர் , வீரம் ,காதல் , நகைச்சுவை   முதலிய ஒன்பான் சுவைபடவும் பாடும் கவிஞர்.

தமிழ் திரைப்பட வரலாற்றில்  பல்லாயிரகணக்கான  பாடல்களை எழுதி  மக்கள்மனதிலே நீங்காத இடத்தை பிடித்து  சிம்மாசனமிட்டவர். ..பழைய தலைமுறையிலிருந்து,இன்றைய தலைமுறை வரை அவரது பாடல்களை  விரும்பி பாடுவதிலிருந்தே புலப்படும்  .வாழ்க்கையின் நிதர்சங்களையே பாடல்களாக புனைந்தவர் .அவருக்கு மட்டுமீலை  நம் ஒவ்வொருவருக்கும்கூட அதுபொருந்தியிருக்கிறன .என் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சிக்கலான நேரங்களில் அவர் பாட்டுகள் மன அமைதியையும் , தெளிவையும் தந்திருக்கின்றன.
‘’அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவிள்ளாத  வெள்ளம் வந்தால் ஆடும் ’’
இன்ப நிலை வந்து விட்டால்  துன்ப நிலை மாறிவிடும்.இது உண்மைதானே?
என்னதான் அண்ணன் தம்பியாக இருந்தாலும் ஒருகஷ்டம் வந்தால் ,எத்தனை பேருக்கு உதவ மனம் வரும் ?அதைத்தான்  பாட்டாக வரைந்து குமுறுகிறார்
எப்படி,,  ;;அண்ணன் என்னடா தம்பி என்னடா
                    அவசரமான  உலகத்திலே
                    ஆசை கொள்வதி ல்  அர்த்தமென்னடா
                    காசில்லாதவன் ‘’

  நெருங்கிய உறவினர் இறந்து விட்டால்  மனம் விட்டே போய்விடும்  ஆனால் உண்மை என்ன?
                                     போனால் போகட்டும் போடா  இந்த
                                     பூமியில் நிலையாய்  வாழ்ந்தவர் யாரடா

                                    வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த
                                    மண்ணில்  நமக்கே  இடமேது?
எத்துனை கருத்துச் செரிவான பாடல் இது
நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்க வில்லை
       பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு  கண்
        பார்வை   போடுதே    சுருக்கு

‘’ வாழைத்தண்டு  போல உடம்பு   அலேக்   நான்
  வாரி அணைச்சா  வழுக்குறீயே  அலேக் ‘’

அவர்  தனக்கு பிடிச்ச தத்துவப்பாடல் என்று குறிப்பிட்டது
  ‘பரமசிவன்  கழுத்திலிருந்து  பாம்பு   கேட்டது
   கருடா சவுக்கியமா   யாரும்
  இருக்கும் இடத்தில் இருந்து கொண்டாள் எல்லாம் சவுக்கியமே

இது மட்டுமா? கனி பிழிந்த சாரங்களினால்  காதல் கவிதைகளையும்  தேன் சொட்டச்சொட்ட பாடி உள்ளார்
             ‘’பார்த்தேன் ,சிரித்தேன் பக்கம் வரதுடித்தேன்
                உனைத்தேன் என   நான் நினைத்தேன் ’’

          நான் மலரோடு தனியாக ஏன் இங்கு  நின்றேன் ‘’
          என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன் ‘’  எத்தனை நாசுக்கான
பாடல் இது
மனிதனின் குண இயல்புகளையும்  படம் பிடித்து  காட்டுவதில் அவருக்கிணை அவரே

‘’ போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே அதில்
  பொய்யும் புரட்டும் கலந்து பூமியை கெடுத்தானே’’

கண்ணதாசன் தன் குறைகளை என்றுமே மறைத்ததில்லை.,மதுத் தண்ணிர் விட்டேதான்   தன்  கவிதைகளை வளர்த்திருக்கிறார் ,அதை கூட பாடலாக வடித்திருக்கிறார்   ‘’ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
                                          ஒரு கோலமயில் என் துணையிருப்பு

அர்த்தமுள்ள இந்து மதம் ‘’எழுதி தான் ஒரூ முழுமையான ஆன்மீக வாதின்னு நிரூபிச்சிட்டார் , யேசு  காவியம்  பாடி  எம்மதமும் சம்மதம் என்பதை காட்டியுள்ளார்

  ‘’ மண்ணிடை யேசு மறுபடி  வருவார் என்பது  சத்தியமே

     புண்கள்     இருக்கும் வரை மருந்து தேவை நித்தியமே’’

கண்ணதாசன்  சாக வில்லை அவர் பாடல்களாலே  நம்மிடை வாழ்ந்துகொண்டிருக்கிறார்  என்பதுதான்     நிஜம் .
என் சிற்றரிவுக்கு எட்டியது  கொஞ்சமே ,அவரப்பற்றி பேச  தாள்போதாது, நாள் போதாது ,,அவர் புகழ் ஒலித்துக்கொண்டெதான் இருக்கும் ,எங்கள் இதயம் இயங்கும் வரை அவர் பாடல்கள் ஒலித்துக்கொண்டெதான் இருக்கும்
அவரின் பாடல் நெஞ்சை அள்ளக்கூடியது ,அதே சமயம் ஆழ்ந்த இலக்கிய அழகு கொண்டது ,அவரின் பி டித்தமான  நடையும் ,சொல்லழகும்  எல்லோரையூம் மயக்குபவை ,காவிய ரசம் பொருந்தியவை ,கால்த்தையும் மீறி நிற்கக்கூடியவை  என்பது மிகையல்ல,.கண்ணதாசா  உன் புகழ் எண்ணதாசா..    

 சரஸ்வதி ராஜேந்திரன்











‘’







2 கருத்துகள்:

  1. நன்றி சே குமார்,இது வல்லமை இதழில் போட்டிக்காக எழுதப்பட்டது

    காவிரி மைந்தன் சார் கேட்டதால் திருத்தி எழுதியிருக்கிறேன் (சில தவறுகள் இருந்ததால்)

    சரஸ்வதி ராஜேந்திரன்

    பதிலளிநீக்கு