புதன், 24 செப்டம்பர், 2014

வல்லமை தாராயோ?

வல்லமைதாராயோ?
மாலினியின்வீட்டைப்பார்த்து,மாமியார்,மாமனார், நாத்தனார்,மைத்துனன்,அப்பா,அம்மா,தம்பி,தங்கைஏன் உறவினர்  அனைவருமேஅசந்துபோய்,பாராட்டினர்
மாலினிக்கு சிரிப்பு வந்தது.அன்று அவள் வேலைக்கு
கிளம்பியபோது,வெளியில்வேலைக்குப்போய் கஷ்டப்படனும்னுஅவ,சியமில்லே,என்பிள்ளைசம்பளம்  நடத்தினர்இன்றுபெண்கள்,,ஆள்,ஆளுக்குகருத்தை
 வீசினர்,கணவன்வசந்த்மட்டும்,ஆட்சேபிக்கவில்லை
அன்றுமாலினி,யோசித்திருந்தால்,,இன்றுஇந்தவீடு,வசதி,பிள்ளைகளின்படிப்பு,என்றெல்லாம் உச்சத்திற்குபோயிருக்கமுடியாதே,பொறுக்கமுடியாத
உறவினர்கள்வாய்க்கு வந்தபடியெல்லாம்வம்புபேசினர்,வீட்டின் அழகில்மயங்கிய மாமியார்,இரண்டுஇடத்திலும்வேலைபார்ப்பதுகஷ்டம்னுசொன்ன்னேன்என்னை தப்பாபுரிஞ்சுகிட்டீங்க,என்றுசொல்லிஅந்தர்பல்டிஅடித்தார்.மாலினிக்குசந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது அவ்ளது மானேஜர் கொடுத்த வெள்ளிகுத்துவிளக்குஎல்லோரையும்கவர்ந்ததுஅதுதான் மாலினிக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது அவர்,ஏன்,இவ்வளவு செலவு செய்து அன்பளிப்பு செய்யணும்னு குழம்பினாள்,,மாலினி குடும்பம்வாடகை வீட்டைவிட்டுபுது வீட்டிற்கு குடிபோனது,.. நாட்கள்.,ஓடியது ஊர்,கண்பட்டதுபோல்
மாலினிக்கு,சோதனை,வந்தது,
அலுவலகத்தில்,ஒருநாள்
‘’என்ன,மாலினி,போனவாரம்,கொடுத்த,தபால்களையெல்லாம்,சரி பார்த்துடெஸ்பாட்ச்,பண்ணிட்டீங்களா?’’கேட்டார்மானேஜர்,மதனகோபால்.
‘’சாரி,சார்போனவாரம்லீவு,போட்டதால்அதை ரெடி பண்ணமுடியவில்லை,இப்ப,பார்த்துடறேன்,’’என்றாள்மாலினி
‘’பரவாயில்லை,இன்னைக்கு,இருந்து,முடிச்சு,கொடுத்துட்டு,போங்க’’
அவர்,.  நோக்கம்புரியாமல்,மாலை மணி,ஆறரை ஆனதுகூட தெரியாமல்,வேலை பார்த்துக்கொண்டிருந்தாள் மாலினி அலுவலகமே காலியாகிவிட்டது.வாட்ச்மேன் வடிவேலுவந்து’’மேடம்
இன்னும் வேலை முடியலையா? நான்காஃபி குடிக்கப்போறேன் உங்களுக்கு வாங்கி வரவா?’’கேட்டான்
;;’ நோ தாங்க்ஸ் நான்வீட்டுக்குப்போய் குடிச்சுக்கிறேன்’’ அதற்குள்,அங்கு வந்த மேனஜர்’’வடிவேலு  ப்ளாஸ்க்கை எடுத்துகிட்டுபோய்
உடுப்பியிலே இரண்டு காஃபி வாங்கிட்டுவா’’?ஆணையிட்டார்
‘’  நீங்க,வீட்டுக்குப்போகலே, நான்முடிச்சுட்டுபோறேன்
பயப்படாதீங்க?’’
‘’இல்லே மாலினி  உங்கிட்டே இன்னொரு வேலை இருக்கு அதையும் முடிச்சுகொடுத்திட்டீங்கன்னா  நான் போயிடுவேன்’’
‘’என்ன வேலைசார்’’
வடிவேலு போனதை  நிச்சயித்துக்கொண்டுமாலினியின் அருகில் வந்தார்,
’’இதோ இந்த செல்லைப்பாருங்க’’என்று ஆன்செய்தார்
அந்த செல்கேமராவில்..சே  பார்க்கமுடியாமல் அவமானத்தால் கூனிக்குறுகிதலைகவிழ்ந்தாள்
மானேஜர்சிரித்தபடியே’’மாலினி ஏன் பேசாமடந்தையாய் ஆகிவிட்டாய் ?’’
மாலினி நற நறவென்று பல்லைகடித்தாள்
‘’இதிலே நீ அவமானப்பட ஒன்றுமில்லை,ஒரே நாள்
என் இச்சைக்கு அடி பணிந்துவிட்டால் உனக்கு இன்னும் பல சலுகைகள் அளித்து
பிரமோஷனும் வாங்கி கொடுப்பேன்  என்ன சொல்றே?’’
 ‘’சீ நீ ஒரு மனுஷனா? கல்யாணமான ஒரு பெண்கிட்டே இப்படி நடக்க வெட்கமாயில்லே?’’
‘’இதிலேவெட்கப்பட என்ன இருக்கிறதுஅநாவசியமா நாம ஒரு எல்லைக்குள் குறுக்கிக் கொண்டு வாழணும்?வாழ்க்கையை இஸ்டம்போல் வாழ்வதற்காகத்தான் நமக்கு தரப்பட்டிருக்கிறது பயப்படாதே’’
‘’அடப்பாவி,இன்னொருத்தன் மனைவியிடம்  நீதாறுமாறாபேசறதே தப்பு அதிலும் இப்படி என்னை கீழ்த்தரமா  போட்டோ வேறு எடுத்துட்டு..சே  இப்பபுரியுது
நீஏன் இவ்வளவு காஸ்ட்லியாபிரசண்ட்பண்ணேன்னு மரியாதையாசொல்றேன் வேண்டாம்
''எனக்கு  வேண்டுமே  பயப்படாதே இந்த விஷயம் நம்ம இரண்டு பேருக்குமட்டும்தானே தெரியும் , இதை விடுத்து நீயாக ஏதாவது செய்தாலும் இந்த அலுவலகத்தில் யாரும் என்னை தப்பாகவே யோசிக்கமாட்டார்கள் ,உன் பேச்சு  எடுபடாது ஏனெனில் இதுவரை உன்னை  நான் மரியாதையாகதான் நடத்திருக்கிறேன் இப்பவும் நமக்குள் நடப்பது நமக்குள்தான் இருக்கும் ,என்ன சரியா?'        இவன்  பசுத்தோல் போர்த்திய புலியாக இருந்திருக்கான் இத்தனை நாளும் சே இந்த ஆண்கள் பெண்களின் மென்மையை பலவீனமாக அல்லவா நினத்துக்கொள்ளுகி றார்கள் ,பெரியவர்கள் சொல்வதுபோல் வேலைக்கு வந்திருக்கக்  கூடாதோ?
''என்ன மாலினி யோசிக்கிறாய் ?எனக்கு இணங்காவிட்டால்  இந்த படம் நெட்டில் உலா வரும் பரவாயில்லையா ? நீ என்னை மாட்டிவிட நினைத்தால்....இப்பவே நெட்டில் போட்டுவிடுவேன் உன் கணவர் ,மாமனார் ,மாமியார் எல்லோரும் உன்னை கேவலமாக பார்ப்பார்கள் போதாதற்கு நான் கொடுத்த கிப்ட் வேறு எல்லோரையும் சந்தேகப்பட     வைக்கும் என்ன சொல்றே ?''
மூர்க்கனும் ,முதலையும் கொண்டது விடா   இவனை இப்போது ஏதாவது சொல்லி சமாளிப்போம்  என் எண்ணி ''சார் இந்த படத்தை அழித்து விடுங்கள் ,நான் யோசித்து சொல்கிறேன் ''
''ஏன் ஏதாவது குறுக்கு வழி யோசிக்கிறாயா? ஒரு நாள் அவகாசம் தருகிறேன் நல்ல பதிலை சொல்லு .''மானேஜர் சொல்லி முடிக்கவும் வடிவேலு வரவும் சரியாக இருந்தது ''.சரி மாலினி நாளைக்குள் முடித்து விடுங்கள் ,வீட்டிலே தேடப் போறாங்க நீங்க கிளம்புங்க ''நல்லவன் போல் பேசினான் மதனகோபால் ,
வீட்டிற்குப் போன மாலினிக்கு அழுகையாக வந்தது இரவு தூக்கம் வரவில்லை   நிறைய வருத்தப்பட்டாள்நிறைய வருத்தப்பட்டாள்வேலையை விட்டு விடலாமா?இல்லை தற்கொலை பண்ணிக் கொள்ளலாமா? வேலையை விட்டால் கடனை யார் அடைப்பதுதற்கொலை பண்ணிக்கொண்டால் மட்டும் அவப்பெயர் மறைந்து விடுமா? பெண்களின் இந்த மனோபாவத்தைகண்டுதான் ஆண்கள்துணிச்சலாக இப்படிப்பட்ட காரியங்களை செய்கிறார்கள்.இதற்கு இடம் தரக்கூடாது ,இல்லை என்றால் மறுபடிபெண்கள்குண்டு சட்டியில் குதிரை ஓட்டவேண்டியதுதான் ,காலம் காலமாக பெண்களைமுடக்கிப்போட  நினைக்கும் ஆண்களுக்கு  ஒரு பாடம் கற்பிக்கனும் ,பெண்னின் மென்மையேவலிமை என்பதற்கு   ராமயணமே சாட்சி  தேவர்களனைவரையும்
ஒடுக்கி மூவுலகையும் அடக்கி ஆண்ட வலிமைக்குச் சொந்தக்கரன் ராவணன் அவனது அழிவுக்கு காரணமானவள் சீதாபிராட்டி  ஏன் மகளிர் மட்டும் படத்தில்அந்தமூவரும்பாடிய மொத்து மொத்தனும் பாடல் நினைவுக்கு வந்தது  நெடுநேரம் யோசித்து ஒரு முடீவுக்கு வந்தாள்  கணவனையும் மற்றவர்களையும் கூட்டி விவரத்தைச் சொல்லஅவ்வளவுதான் ஆளாளுக்கு  இஷ்டம் போல் பேச ஆரம்பித்து விட்டனர் வேலைக்கு போனதே தப்பு என்பதுபோல் பேச-மாலினி வெகுண்டாள்
‘’இது மாதிரி ஒரு பிரச்சனை வெளியில்  நடந்தாலெல்லோரும் எப்படி பேசுவீர்களோஅப்படித்தான் பேசுகிரீர்கள்.யாராவது ஒருவரால் கூட தீர்வு சொல்ல முடியுதா?’  நீங்கள் நான்  சொல்றபடி கேட்டால் தீர்வு காண முடியும்  நேரடியாக மோத நினைத்தால் அவன் தப்பித்து விடுவான் என்ன சரியா?’’ எல்லோரும் ஒகே சொன்னதும்  மாலினி  தன் அறைக்குள்சென்றாள்  வல்லமை தாராயோ என்று வேண்டிக் கொண்டு  படுத்தாள்
காலையில் மதனகோபால்  பேசினார் ‘’சார்  நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன் ,என்னால என் குடும்ப கவுரவம் கெடக்கூடாது ,என் குடும்பத்திற்கும் இது தெரியக்கூடாதுநான் உடன் படுவதாக முடிவு செய்து விட்டேன் ,,அதனால
 நான் என் தோழியின் வீட்டிற்கு உங்களை அழைக்கிறேன் ‘’
‘’என்னை மாட்டிவிடவா யோசிக்கிறாயா  மாலினி ’’
‘’அயோ என்னை நம்புங்க சார் ,என் தோழி ஊரில் இல்லை வீட்டு சாவி என்னிடம்தான் இருக்கிறது நான் எப்படி வாக்கு தவறாமல் நடக்கிறேனோ அதேபோல் நீங்களும் அந்த செல்லில் உள்ளதை அழித்து விடணும் சரியா?’’
நீ புத்திசாலின்னு எனக்குத்தெரியும் மாலினி  இதோ புறப்பட்டு விட்டேன் இன்னும் ஐந்து நிமிடத்தில் அங்கேஇருப்பேன் ‘’
சொன்னபடியே வாயெல்லம் பல்லாக   உள்ளே வந்தான்
‘’வாங்க சார் ‘’வரவேற்ற மாலினி அவன் உள்ளே வந்ததும் கதவை சாத்தினாள்
‘’என்ன மாலினி கதவை சாத்தரே?’’மிரண்டான் மதனகோபால் ’’ஏன் சார் நாமே திருட்டுத்தனமாக வந்திருக்கோம் இதில் கதவை திறந்து வைத்தா அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டமுடியும் ?அதனால்தான் ‘’ உட்காருங்கள் சார் இதோ வறேன் ‘’என்று  கூறி உள்ளேபோய் சைகை காட்ட
அவள்வீட்டார் அத்தனை பேரும் கையில்ஆளுக்கொரு கட்டையுடன் நிற்க;அரண்டுபோன மதனகோபால் செவதறியாமல் எழுந்து நின்றான்
அடே உட்காருங்க மாப்பிள்ளை நாங்க எல்லோரும் சேர்ந்து
மாலினியை உங்களுக்குத் தாரை வார்த்து தர வேண்டாமா?’’
என்று கூறி அவனை துவட்டி எடுக்க அலறி மன்னிப்பு கேட்டான் அவன் கையிலுள்ள செல்லைப்பிடுங்கி சிம்மை எடுத்து விட்டு உடைத்து போட்டார்கள்,,வேற் ஏதாவது செய்ய நினைத்தால்  நீஉயிரோடு இருக்க முடியாது ‘’என்று மிரட்டி அடித்தனர்
‘’ ஏண்டா பொம்பளைங்கன்னா உங்களுக்கு கிள்ளுக் கீரையாபோயிட்டா  எத்தனை காலத்துக்குத்தான்  நீங்க இது மாதிரி அசிங்கமா போட்டோ எடுத்து பிளாக் மெயில் பண்ணுவீங்க >வெட்கமாயில்லெ நீஎன்ன க்ககூசில்    உள்ளதையா திங்கறே உன் புத்தி ஏன் இப்படி போச்சு நாங்க
மென்ன்மையானவங்கதான்  இன்முகமானவங்கதான் ஆனால் எங்களை சீண்டினால் எங்க உண்மை முகத்தைபார்ப்பீங்க ,இனிமேலாவது உன் மனைவிக்கு துரோகம் செய்யாமல் மற்ற எல்லா பெண்களையும் தாயா சகோதரியா பாரு பிழச்சுப்போ’’ விரட்டினர்
வாழ்வின் அடி தாங்க முடியாமல் தப்பித்து வந்தான் மதனகோபால்









9



/




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக