புதன், 24 செப்டம்பர், 2014

கடித போட்டி (வல்லமை இதழ் நடத்தியது ) பரிசு பெற்றது





வல்லமை இணைய இதழில் 
'அன்புள்ள மணிமொழிக்கு' 
என்ற தலைப்பில் நடைபெற்ற கடித இலக்கியப் போட்டியில் 
என்னுடைய இக்கடிதத்துக்கு ஆறுதல் பரிசு என்பதில் 
அளவிலாத மகிழ்ச்சி. 
போட்டியைத் திறம்பட நடத்திய 
வல்லமை இணைய இதழ் குழுவினருக்கும், 
போட்டியை அறிவித்த தேமொழி அவர்களுக்கும்,
நடுவர் இசைக்கவி திரு.ரமணன் அவர்களுக்கும் 
மனமார்ந்த நன்றிகள்.




 அன்புள்ள மணிமொழிக்கு
நலம், நாடுவது அதுவே, ,மணிமொழிஒரு இடத்தில் உள்ள செடியை பிடுங்கி வேறு இடத்தில் நடும்போது அது முதலில் சற்று வாடி பின் தான்
தழைக்கும் அதுதான் இயற்கை ,ஏனெனில் புதிய மனிதர்கள் புதிய சூழ் நிலை ,புதிய இடம் ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும் ,போக போக பழகிடும் ஏனெனில் , நீ வீட்டிலிருந்தபடியே பள்ளியில் இருக்கமுடியுமா?எல்லாஇடங்களிலும் வீட்டிலிருந்த படி சுதந்திரமாக இருக்க முடியாதே,இது உனக்கும் தெரியும்தானே? உனக்கு நான் அறிவுரை கூறுவதாக எண்ணாதே, அன்புரைஎன்று எடுத்துக் கொள்ளவும் நீபுதிய பொறுப்புகளை ஏற்றியிருக்கிறாய் அந்த பதவி மனைவி என்ற பதவி ,உனக்கு இப்போது பொறுப்புகள் அதிகம் நேரமும் இருக்காது ,அதனால், நான் சொல்ல வேண்டிய விஷயங்களை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன் மனித வாழ்வின் மகத்துவம் குடும்ப வாழ்வின் வெற்றியை பொறுத்த.துதான் எப்போதும் சுய நலமும் ,சுக வாழ்க்கையும் கெடுதியில்தான் முடியும் .
குடும்ப வாழ்க்கை என்பது ஒரு வேள்வி போன்றது ஒரேகுடும்பத்தில் பிறந்த
நம்மிடையே எத்தனையெத்தனை வேறுபாடாணகுணங்களிருக்கிறது அதே
போல்தான் புகுந்த வீட்டிலுள்ளவர்கள் குணமும் அப்படித்தானே இருக்கும்
அதனால் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் ,தேவைப்படும்போது தியாகமும் செய்யவேண்டும் . .உன் மாமனார் ,மாமியாரை பெற்றவர்போல் பாவிக்க வேண்டும் ,உன் நாத்தி .மைத்துனரை
தங்கை,தம்பி என்று நினைத்துக்கொண்டால் எந்த பிரச்சனையும் இருக்காது
இப்படியாக எண்ணி பொறுமையாகவும் ,சகிப்புத்தன்மையுடனும் இருந்து நீ
புகுந்த வீட்டில் எல்லோரையும் சரிக்கட்டிக்கொண்டு வழி நடத்துவாய் என்று எனக்கு தெரியும் ஏனெனில் நீபுத்திசாலியாற்றே, விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று நீயே சொல்வாயே ,
அதுதான் சிறந்த பண்பு .,வீடென்றால் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும் ,இதை பகுத்துணர்ந்து உன் புத்திசாலித்தனத்தால் எல்லவற்றையும்
வென்று கணவனும் ,மனைவியும் ஒற்றுமையாக வாழ்ந்து நன்மக்கட்பேறு பெற்று குடும்பத்தை மங்கலமாக ஆக்குவாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு குடும்ப பாரம்பரியத்தைகாப்பதுதானே பாரதப்பண்பாடு ,உன்னைப்போல் நானும் உன் பிரிவை தாங்கிக் கொள்ள என்னை தயார் படுத்திக்கொள்கிறேன் சேக்கிழார் சொன்னதை ஞாபகத்தில் வை பெண் மனையறத்தின் வேர் என்பதை .
குடும்பத்தை பற்றிஎன் நண்பர் எழுதிய பாடலுடன் என் கடித்த்தை முடிக்கிறேன்.
கூட்டாமல் கழிக்காமல் குடும்பம் இல்லை
கோணாமல் நாணாமல் இன்பம் இல்லை
நீட்டாமல் முடக்காமல் வாழ்க்கை இல்லை
நெளிவின்றிச் சுளிவின்றி நியதி இல்லை
ஊட்டாமல் ஆட்டாமல் குழந்தை இல்லை
ஓயாமல் சாயாமல் . முதுமை இல்லை
பூட்டாமல் திறக்காமல் கதவு இல்லை
புகழாமல் இகழாமல் வளர்ச்சி இல்லை
மகளே , குடும்ப வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டிய இந்த கவிதையைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன ?
உன் அன்பில் மகிழும் அம்மா அமுதா கணேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக