புதன், 24 செப்டம்பர், 2014

வம்சம்

வம்சம்
\
‘’இதோ பாருங்க , நான் எங்க குடும்பத்தை விட்டுட்டு,என் சொந்த பந்தங்களைவிட்டுட்டு,காதலுக்காக உங்களோடு வந்திருக்கேன் , நீங்க ஒத்த ரூபாய் சம்பாதித்தாலும் எனக்கு கவலையில்லை ,ஆனால் அந்த ஒத்த ரூபாய் நேர்மையாய் சம்பாதித்ததாக இருக்கணும் புரியுதா ?’’வள்ளி சொன்னாள் .
‘’புரியுது வள்ளி , நான் இதுவரை அப்படித்தான் ஆட்டோஓட்டி பிழைக்கிறேன் ,இனியும் அப்படியே இருப்பேன் ‘’ என்று சொன்னவன் தான் வேணு,ஆனால் வள்ளி முழுகாமல் இருக்கிறாள் என்று தெரிந்ததும் வேணு வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள படாத பாடு பட்டான் .பாவம் வ்சதியான குடும்பத்தை சேர்ந்த வள்ளி காதலுக்காக கஷ்ட படக்கூடாது என்று நினைத்தான் வேணு ,உள்ளூரில் ஷேர் ஆட்டோவந்ததிலிருந்து ஆட்டோவிற்கு வருமானம் குறைந்தது
வேறு யாரையும் தெரியாது வேணுவுக்கு ,ரொம்ப குழம்பிப் போய் இருந்தபொழுது தான் அவ்ன் கூட்டாளி கணேசன் வேணுவை ஒரு கட்த்தல் காரனிடம் அறிமுகப்படுத்தினான் .
கடத்தல் காரன் சொல்கிறபடி கேட்டால் பணம் கிடைக்கும் . வேணு அதற்கு முதலில் சம்மதிக்கவில்லை வள்ளிக்குத் தெரிந்தால் கோபப்படுவாளென்று .ஆனால் கூட்டாளி ஏதேதோ சொல்லி அவனை மடக்கிவிட்டான் .பணத்தைப் பார்த்ததும் வேணுவும் மாறிப்போனான்.
வள்ளிக்கும் தனக்கும் பிறக்கப்போகும் குழந்தையின் எதிகாலத்தை எண்ணி ,கணேசன் சொல்லுக்குக் கட்டுப்பட்டான்
இது வள்ளிக்குத்தெரிந்தால் ....அவள் ஏற்பாளா ? ஒரே மனப்போராட்டம் வேணுவுக்கு வெகு சீக்கிரமே கடத்தல் காரனிடமிருந்து தகவல் வர ,ஓடினான் வேணு .
‘’இதோ பார் வேணு , நான் சொல்ற இடத்திலே, நான் சொல்ற அடையாளத் திலே ஒர்வன் கையில் பெட்டியுடன் நிற்பான் . நீன் இரட்டை விரலை காட்டினால் அவ்ன் உன்னிடம் பெட்டியை சேர்ப்பான் .அதை போலீசில் மாட்டாமல் சாமர்த்தியமாக என்னிடம் சேர்த்தால் உடனே யே ஐயாயிரம் ரூபாய் கொடுப்பேன் என்ன சொல்றே?’’
‘’சரி கணேஷ் ,போலீசில் மாட்டிக்கொண்டால் ..?’’
‘’மாட்டிக்கொண்டாலும் என் பெயரை சொல்லக்கூடாது ,மாட்டாம வர்றதுதான் உன் சாமர்த்தியம் உ.ன் மனைவி
வேறு முழுகாமலிருப்பதாக கேள்வி பட்டேன் .இந்த சமயத்தில் நல்ல ஆரோக்கியமான உணவு தர வேண்டாமா ? நான் உனக்கு நிறைய பண உதவி செய்கிறேன் பயப்படாதே ‘’
வேணுவும் தயங்கி தயங்கி பின் ஒத்துக்கொண்டு பெட்டியை சேர வேண்டிய இடத்தில் சேர்த்து பணத்தையும் பெற்றுக்கொண்டான் . அவ்ன் மனம் எல்லையற்ற மகிழ்ச்சியில் மிதக்க ,வள்ளிக்காக ஹார்லிக்ஸ் ,பழங்கள் வாங்கிக்கொண்டு வீட்டிற்க் விரைந்தான் .
வீடு பூட்டியிருக்க ,பக்கத்து வீட்டில் விசாரித்தான் .
வள்ளி மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக சொல்ல செக் அப்பிற்கு சென்றிருப்பாள் என நினைத்து ஆட்டோவில் விரைந்தான் .
மருத்துவ மனையில் படுத்திருந்த வள்ளியைப் பார்த்ததும் வேணு மிரண்டு போனான் .’’வள்ளி என்னாச்சுடா உனக்கு?’’
வள்ளி கண்களில் நீர் பெருக மவுனமாக இருந்தாள் .
அங்கு வந்த நர்ஸ் சொன்னாள் .
‘’அவங்க கர்ப்பம் கலைஞ்சுடுச்சு ‘’
‘’வள்ளி,, நர்ஸ் சொல்றது உண்மையா? எப்படி வள்ளி ?’’
துடித்தான் வேணு .
‘’இதப்பாருய்யா ,உன்னை காதலிச்ச குற்றத்திற்காக என் குடும்பத்தை விட்டு ஓடிவந்தேன் நான் ..ஏன்? நீனல்லவன் ,னேர்மையான்வன் என்று தானே? ஆனால் நீ பணத்திற்காக ,வசதிக்காக பாவமான செயலை செய்ய துணிஞ்சுட்டேன்னு நினைக்கும்போது என் மனசே உடைஞ்சுடுச்சுய்யா , நல்ல குடும்பத்தில் பிறந்தவன்னு சொல்றதுதான்யா எனக்கு பெருமை ,அப்படி நேர்மையில்லாத உனக்கு ஏன்யா குழந்தை ? கடத்தல்காரனுக்கு ,பிறந்த பிள்ளையின்னு நம்ம வம்சத்தையே தப்பா பேசறதை கேட்கணுமா நான் ? வேண்டாம்யா அதான் நம்ம குழந்தையை நானே அழிச்சுட்டு இங்க வந்து படுத்துட்டேன் ,இப்படியொரு வம்சம் தழைக்கணுமா?உன்னை கட்டிக்கிட்ட பாவத்துக்காக பிள்ளையை கொன்னுட்டு நானும் பாவத்துக்கு ஆளாயிட்டேன்
உயிரோடு இருந்தா அந்த குழந்தையும் மற்றவர்கள் கேலிக்கு ஆளாகி என்னையும் வசை பாடுமே ..அதான் ....’’கேவி கேவி அழுதாள் வள்ளி .
‘’ஐயோ ,,,வள்ளி .. நான் ஏன் இப்படி புத்தி கெட்டு போனேன் ? என்னை மன்னிச்சுடு வள்ளி ,...எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம் நான் திருந்த .அதற்காக,..பிள்ளையை...
கொன்றிருக்க வேண்டாம் ... எத்தனை கன வோடு வந்தேன் ..’அழுது புலம்பினான் என்னதான் அழுது புரண்டாலும் மரித்த கரு வருமா?
சரஸ்வதி ராசேந்திரன் --தங்க மங்கை ==ஏப்ரல் =2014

1 கருத்து: