வெள்ளி, 26 அக்டோபர், 2018

தமிழ்சேவை -19-10-18

மாமன் பெத்த மரகதமே

மாமன் பெத்த மரகதமே
மனசுக் கேத்த மணிரதமே
மந்திரம் போடும் விழிகளே
மயங்க வைக்கும் மொழிகளே

சின்னச்சிட்டே உன் வண்ணம்
தங்கத் தட்டே உன் கன்னம்
முத்துப் பற்கள்உன் வாயில்
சொத்தாய் வருவாய் என் வாசல்

உள்ளம் உன்னால் போராடுது
உறக்கம் இன்றி அல்லாடுது
தருவேன் நானும் தங்கத்தாலி
இருப்பேன் என்றுமுனக்கு வேலியா

ஆத்தோரம் வாடியென் மாமன்மகளே
ஆலமரம் ஊஞ்சல் கட்டி ஆடுவோமே
வஞ்சி உன்னைக் கொஞ்சிடவே
மாமன் நானும் காத்திருக்கேன்

மாசிப் போயி பங்குனி வந்திடும்
மாமன் மகளே உன்னை மணமுடிப்பேன்
நெஞ்சோடு மாங்கல்யம் கொஞ்சும்
மஞ்சத்திலே நெஞ்சோடு நெஞ்சம் சேரும்

சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக