வெள்ளி, 26 அக்டோபர், 2018

தமிழ்சேவை 18-10=18


உனக்கும் கீழே உள்ளவர்கள் கோடி
உணர்ந்தால் துன்பங்கள் போகும் ஓடி
இருப்பதை வைத்து நிம்மதி தேடு
ஒருபோதும் கலங்காதே மனம் வாடி

இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி
இதையும் எளிதாய் கொண்டால்துன்பம் தீரும் பாதி
வறுமைகள் தோன்றா வழிகள் உண்டு
பெருமைகள் கொள்ள நேர்மையோடு உழை

வாழ்க்கை என்பது ஒரு முறை அதை 
வாழ்ந்தே பார்த்திடு நன் முறை
கசப்புகள் நீங்கிக் களிப்புடன் வாழ
நிசமுடன் நேர்மையாய் தினமும்உழைத்திடு

பணம்தான் வாழ்க்கை என்பதும் இல்லை
குணம்தான் சிறந்தது அதுவே இன்பத்தின் எல்லை
நிலைப்படுத்தி மனதை நிறைவினைப் பெற்று
தலை நிமிர்ந்து வாழ்ந்து தழைத்திடுமனமே

பாடுபட்டு உழைத்தால் பறந்திடும் வறுமை
நாடியுணர்த்தால் நன்மை அடையப் பெறுவாய்
உனக்கும் கீழே உள்ளவர்கள் கோடி
உனர்ந்தே நடந்திடு இறைவன் சொற்படி

சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக