வியாழன், 28 ஏப்ரல், 2016

நிலா முற்றம் --27 -4-2016

கவிஞர்களிடம் சில கேள்விகள்..
பகுதிக்கு இந்த வாரம் இரு கவிஞர்களை(கவிதாயினிகள்) தேர்வு செய்து (வனிஷாசிறீ,சரஸ்வதி ராஜேந்திரன்) ஒரே மாதிரியான கேள்விகளைத் தொடுத்தோம்
இருவருமே பதில்களை அசத்தலாக கூறியிருக்கிறார்கள்,இதோ...
−நிலாமுற்றத் தலைவர் மாறன்
மற்றும் நிர்வாகிகள்..
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
கவிஞரிடம் சில
கேள்விகள்*******
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
1)சமுதாயத்தில் எத்தகைய கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது?ஏன்?
2)சிந்தனைத்தூண்டச் செய்வது மரபுக்கவிதைகளா?புதுக்கவிதைகளா?
3)புதுக்கவிதைக்கான இலக்கணம்?
4)மரபுக்கவிதைகள் இளைஞர்களிடையே நாட்டம் குறைந்துள்ளதாக
கருதுகிறீர்களா?அல்லது விரும்பப்படுகிறதா?
5)ஹைக்கூ,லிமரைக்கூ வேறுபடுத்துங்களேன்..
6)புதினம், சிறுகதை,புதுக்கவிதை,
சமூகசிந்தனையில் அதிக பங்கு எது?
7)தங்களை கவர்ந்த கவிஞர்?(நிலாமுற்றத்திலும் இருக்கலாம்)
8)நீங்கள் எழுதிய கவிதையில் உங்களை கவர்ந்தது?ஏன்?
9)முகநூல்களில் கவிதை குழுமங்கள் அதிகரிப்பது ஆரோக்கியமான விசயமாக கருதுகிறீர்களா?
பெண்களுக்கான பாதுகாப்பு முகநூல்களி்ல்கிடைக்கிறதா?.
10)நிலாமுற்றம் பற்றி தங்கள் கருத்து?
பதில்கள்
**********
1..புதுக்கவிதைதான் ஏற்றுக் கொள்ளப்படுகிறது ஏனெனில் அதுதான்
பரவலாக இருக்கிறது
2மரபுக்கவிதை புதுக்கவிதை என்ற பாகுபாடெல்லாம்கிடையாது கருத்தாழ
மிக்கவையாகவும் தரமாகவும் சிந்தனையை தூண்டுபவையாகவும் இருக்கவேண்டும் அது மரபுக்கவிதையாகவுமிருக்கலாம் புதுக்கவிதையாகவும் இருக்கலாம்
3 இலக்கணம் யாப்பு .எதுகை எதுவுமில்லாத கருத்துக்கள் மட்டுமேகொண்ட புதிய முறையே புதுக்கவிதை
4 மரபுக்கவிதைவின் நாட்டம் இளைஞர்களிடம் குறைந்ததாக சொல்லமுடியாது தற்பொழுது நிறைய இளைஞர்கள் மரபுக்கவிதை எழுத
பயிற்சி எடுத்துக்கொண்டு எழுகிறார்கள் இதை நீங்கள் முக நூலிலேயே
பார்க்கலாம்
5ஹைக்கூவிற்கான விளக்கங்கள் அதிகமாக உள்ளன பிரபல இலக்கிய இதழ்களில் ஹைக்கூ வேறுபடுகிறது ஒவ்வொரு குழுமத்திலும்ஒவ்வொரு மாதிரி வேறுபடுகிறது மூன்று வரிகளில் யாரும் யோசிக்காதகோணத்தில் நாம் பார்க்கும் காட்சியே ஹைக்கூ என்று தட்ஷன் சொன்னபடிதான் நான் எழுதுகிறேன்
லிமரைகூ 5அடிகளில் நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் எழுதப்படும் கவிதை வடிவமே லிமரைக்கூ
6 புதினம் படிக்க இந்த அவசர உலகத்தில் யாருக்கும் நேரமில்லை புதுக்கவிதை சிறுகதை படிப்பவர்களே அதிகம் சமூகச்சிந்தனையில் அதிகம் பங்கு வகிப்பது சிறுகதையே சமயச்சொற்பொழிவார்களும் சரி
மேடைப்பேச்சாளர்களும் சரி குட்டிக்கதைகள் வழியாகத்தான் சமூக சிந்தனைகளை விதைக்கிறார்கள்
7 என்னைக்கவர்ந்த கவிஞர் கண்ணதாசன் அவர்களே காதலாகட்டும் சமூக சிந்தனையாகட்டும் தத்துவக்கவியாகட்டும் அவருக்கு ஈடு அவரே
8 தமிழின்பால் அதிக ஈடுபாடு உள்ளதால் தமிழ் பற்றி நான்
எழுதிய ‘’அங்கம் வகிக்கும் அரிய தமிழ் ‘’ என்ற கவிதையே
9 காலத்தின் கட்டாயம் இதையாரும் கட்டுப்படுத்த முடியாது
தரமானதாக இருந்தால் நிலைத்து நிற்கும் இதை பொருட்படுத்த வேண்டியதில்லை. .
பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு குறைவுதான் அவரவர் கட்டுப்பாடோடு
நடந்தால் கஷ்டமில்லை அளவோடு இருந்தால் எல்லாம் நல்லதுதான்
10 நிலாமுற்றம் ஒரு தரமான தமிழ் வளர்க்கும் முற்றம் அதில் ஏதும் ஐயமில்லை கட்டுப்பாடோடு சீரமைக்கபட்டிருக்கிறது
இங்கே சொல்லப்பட்டவை என் தனிபட்ட கருத்தே ..

2 கருத்துகள்: