திங்கள், 18 மே, 2015

வல்லமை ---புகைப்படபோட்டி-11 புதுப்பித்தல்

”வாரநாட்கள் முழுவதும் அலுவலகத்திலேயே உழலும் இவர்களுக்கான ஒரே பொழுதுபோக்கு இந்தக்கடற்கரையும், மணல் விளையாட்டும்தான்! இவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்!” என்று அன்புக் கட்டளையிடும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் வரிகள்…
saraswathirajendran wrote on 8 May, 2015, 12:46
புதுப்பித்தல்
திங்கள் முதல் சனி, வரை
அலுவகத்தில் அவனுக்கு
இடையறாத வேலை
அவளுக்கோ அலுவலகம்
வீடு என இரட்டைக்குதிரை
சவாரிஎன்ன செய்வார்கள்?
ஞாயிறு   வந்தால் போதும்
மெல்ல எழுந்து மெல்ல குளித்து
சமையலறைக்கு ஓய்வுகொடுத்து
ஹோட்டலில் சாப்பிட்டு 
கடற்கரை கண்டார்கள்
அவரவர் சுதந்திரத்தில்
அவரவர் தலையிடாமல்
சின்ன வயசு சந்தோஷத்தை
சிறைபடுத்தி மண்ணிலே
கலையுணர்வு  காண
அவனோ.  நண்பர்களிடம்
குறுக்கீடு இல்லாமல்
கடலைபோட்டும்
கேண்டிகிரஷ் ஆடியும்
தங்களை தாங்களே
புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள்
அடுத்த  நாள்  விடியலுக்காக
பாவம் அவர்கள்
வேலைப்பளு, வில்
இந்த சின்ன சந்தோஷத்திற்காக
கடற்கரை  மணலில்  ஹாயாக!
யாரும் டிஸ்டர்ப் செய்யாதீர்கள்
அந்த சின்னஞ்சிறுசுகளை
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக