புதன், 27 ஜனவரி, 2016

வல்லமை. புகைப்பட போட்டி -47

”யாரோ கொடுத்த அன்பளிப்பாய்க் காட்டிலிருந்து நாட்டுக்குள் வந்தேன். இங்கே எனக்கு அன்பை அளிக்க எவருமில்லை! பாகனுக்கு உழைப்பதே என் பிழைப்பு; யாரும் இருக்குமிடத்தில் இருந்தால்தான் மதிப்பு!” என உள்ளம்குமுறும் களிற்றைக் காண்கின்றேன் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் கவிதையில்.
யாரோ கோவிலுக்கு
கொடுத்த அன்பளிப்பாம் நான்
காட்டைவிட்டு( பிறந்தவீடுவிட்டு)
நாட்டுக்குள் ( புகுந்தவீடுவந்ததும்) பாகனின்
கட்டுப்பாட்டுக்குள் வந்தாயிற்று
என் பழக்க வழக்கங்கள் யாவும்
கரும்பையும் மூங்கிலும்தின்றவனுக்கு
கடலையும் பொங்கலும் புளியோதரையும்
சர்க்கரை வியாதியை உண்டாக்க
மருத்துவரின் பரிந்துரைப்படி காலை
ஒரு மைல்தூரம் நடைபயிற்சி பாகனுடன்
போகும் வழியெல்லாம் மக்கள் அணுக
சாமிக்கு சாமரம் வீசிய கையால்(தும்பிக்கையால்)
யாசகம் கேட்க வைத்தான் பாகன்
மக்கள் கொடுக்கும் இலவசம்
உணவென்றால் எனக்கு
பணமென்றால் பாகனுக்கு என
புரிந்துணர்வு ஒப்பந்தம் இருவருக்குள்

[…]
வேட்டையாடிய யானையாகி பாகன் கையில்
வித்தை காட்டும் பொருளாகி வாழ்கிறேன்
என்னை விட மனிதனுக்கு சக்தி அதிகம்தான்
தன்னைப்போலவே என்னை மாற்றியுள்ளானே?
வருடம் ஒரு முறைபிறந்த வீடு அனுப்புவார்கள
ஆட்சியாளரின் அறிவுறைப்படி அதிகாரிகள்
அது ஒன்றே எனக்கு ஆறுதல்தரும் விஷயம்
யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான்
எல்லா சவுக்கியமும்…….என்பதே நியதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக