புதன், 27 ஜனவரி, 2016

நிலா முற்றம் 23-1-2016

நிலா முற்றம்
ஒன்ற இரண்டா
எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை
வார்த்தையில்
வடித்து சொல்ல
கரு ஒன்று உண்டானால்
மறு உருவாய் மாறிடுவர்
கண்ணும் கருத்துமாய்
இமைபோல் காப்பார்
எண்ணும் எழுத்தும்
பயில்விப்பார்
அன்பால் அரவணைப்பதிலும்
அறிவாய் வழிபடுத்தலிலும்
அவருக்கு நிகர் அவரே
கண்டிப்பும் கறாரும் காட்டினாலும்
தண்டிப்பு என்பதே இல்லை
பெற்றோர் கோர்ட்டில்
பிள்ளைகள் முரண் பட்டாலும்
பெற்றோர் முரண்படுவதில்லை
பிள்ளைகள் பாசத்தில்
காக்கைக்கு தன் குஞ்சு
பொன்குஞ்சு என்பதுபோல்
ஆக்கைக்குப் போகும் வரை
அழிவதேயில்லைபெற்றோர் பாசம்
பெற்றொர் பாசத்திற்கு முன்
மற்றவர்கள் பாசம் வெறும் தூசு என்பதை
பிள்ளைகள் உணரும் வரை
பேதமில்லை முதியோர் இல்லமில்லை நாட்டில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக