வெள்ளி, 31 ஜூலை, 2015

வருவாய் அன்னை அபிராமி வல்லமை -ஜூலை 16









வருவாய் அன்னை அபிராமி
திருக்கடை             ஊரின்              அபிராமி
திருவருள்              தந்து                 அருளிடு நீ
பட்டருக்கு             நிலவை            காட்டிடவே
தோட்டை              கழற்றி                எறிந்து நீ
பக்தரின்                உயிரை              காத்தாயே  இந்த
பக்தையின்          குரலுக்கும்           செவிசாயி
பொய்கள்              நிறைந்த             உலகினிலே
மெய்கள்               ஜெயித்திட         அருளிடு நீ
சூது கள்                 சூழ்ச்சிகள்         வஞ்சனைகள் 
ஏதுமில்லா            நல்மனதை        தந்திடு  நீ
தொழுதேன்            நானே                தினந்தோறும்
 தோற்றம்              நீ இன்னும்          தரவில்லை
அம்மா                  உனைத்தான்      அழைத்தேனே
சும்மா                   இருப்பதோ          உன் நீதி  ?
வருவாய்              அன்னை               அபிராமி
அருள்விழி            காட்டி                   நலம்தருவாய்

சரஸ்வதிராசேந்திரன்

Jul 16


to vallamai

1 கருத்து: