ஞாயிறு, 13 டிசம்பர், 2015

வல்லமை புகைப்பட போட்டி--42


தன் இறப்பின்மூலம் முதலாளிக்கு ’நிவாரணம்’ தரும் ஆட்டுக்குட்டி, தன் தாய்க்குத் தருவதென்னவோ ஆறாத ’ரணம்’ ஒன்றைத்தானே?’ என்ற உண்மையை உரைக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்



நரக நெருப்பில் வீழ்ந்தேனே !
மறந்திருந்த துக்கத்தை
மறக்கவொட்டாமல் செய்கிறதே
வளர்த்த மேய்ச்சல் காரன்
வரைந்து வைத்தான் சோகத்தில்
அச்சுஅசலா என் மகள்படத்தை
ஊரு பக்கம் பேய் மழையாம்
ஊதகாத்து வேறு வீசுதாம்
ஆத்துப் பக்கம் வெள்ளம் வருதாம்
ஒத்தையிலே போகாதேன்னு
தலை தலையா அடிச்சுகிட்டேன்
தங்க மகள் கேட்காம போய்
தண்ணியோட போயிட்டாளே !
மேட்டுமேலே நின்னு மகள்
போறதை வேடிக்கை பார்க்க
மட்டும்தானே முடிஞ்சுது
மேய்ப்பவன் குடும்பத்தை பார்ப்பானா
தண்ணியிலே போற உன்னை மீட்பானா?
மகளே உன்னை மறக்க முடியாம
இந்த படத்தை நுகர்ந்து நுகர்ந்து
விழியிலே நீர் ஓடி நரக நெருப்பில்
நாளும் வீழ்கிறேனே !என் மகளே
சரஸ்வதிராசேந்திரன்

சரஸ்வதிராசேந்திரன்
saraswathiRjendran wrote on 12 December, 2015, 15:29பிரிய மகனே !
நானோ உன்னை காணாத
துயர வெள்ளத்தில்
முதலாளியோ வெள்ள
நிவாரணமாய் ஆட்டுக்கு
மூவாயிர்ம் கிடைக்கும் என்ற
மகிழ்வில் ! ஆம் அவனுக்கென்ன?
தழை பறித்துப்போடுபவனும் அவந்தான்
தலையை வெட்டி காசு பார்ப்பவனும் அவந்தான்
செத்து கொடுத்தாய் வளர்த்தவனுக்கு சொத்து
பெத்தவளுக்கு தீரா துயர்தான் கொடுத்தாய்
நில்லாத என் கண்ணிரால்உன் முகம்
வருடி வருடி உன் நினைவை காக்கின்றேன்
என்னிடம் திரும்பி வருவாயே என் மகனே
சரஸ்வதி ராசேந்திரன்

1 கருத்து: