சனி, 31 அக்டோபர், 2015

தடாகம்கலை இலக்கிய வட்டம் அக்டோபர் மாதம்

ஒக்டோம்பர் மாதப்போட்டிக்கவிதை
44 -வெற்றிக்கான வழி
இலட்சியமும் ஊக்கமுமே வெற்றிக்கான படி
அலட்சியமும் சோம்பலுமே அழிதலுக்கான வழி
பலமும் முயற்சியுமே வாழ்வின் அடையாளம்
பலவீனம் என்றுமே தாழ்வுக்கு அடிகோலும்
பிழையின்றி உழைத்தலே பெற்றுத்தரும் வெற்றி
உழைப்பு ஒன்றேதான் உயர்வுக்கான வழி
தோல்வியை ஒருபோதும் பொருட்படுத்தாதே
வேள்வியாய் வேலையை செய்தால் வெற்றி உறுதி
உழுத நிலம் இருந்து மழை இல்லாமல் விளையுமா
மழை மட்டும் இருந்து நிலம் உழுவாமல் பயன் உண்டா?
சிறகுகளை அசைக்காமல் பறவை பறக்க முடியுமா ?
விறகுக்கு தீவைக்காமல் நெருப்பு பற்றுமா ?
முயற்சி செய்யாமல் முன்னேற்றம் வருமா
அயற்சியை நீக்கி செயல் பட்டால்தான் வெற்றி வரும்
சரஸ்வதி ராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக