சனி, 31 அக்டோபர், 2015

அக்டோபர் 16 வல்லமை இதழில் வந்தது

தமிழ் நாட்டின்
கோடியில் பிறந்தாலும்
கோடிக்கு ஆசைப்படாத கோமானே!
உன் நாடி நரம்பெல்லாம் இந்திய
நாட்டின் நலம் மட்டும்தானே!
ஜனாதிபதியானாலும் நீ
மாடி வீட்டுக்கு ஆசைப்படவில்லை
தேடித் தேடி அலைந்தாலும் உனைப்போல
தெய்வமகன் எங்களுக்குக் கிடைப்பாரா?
கூடிக்கூடி அழுதாலும் உன்னைக்
கூற்றுவன் திரும்ப விடுவானா?
ஆடிப் பாடி ஆண்டவனைத் தொழுதாலும்
ஆட்கொண்டவன் விடுவிப்பானா?
எத்தனையெத்தனை பதவிகள் ஏற்றாலும்
புகழ்போதை என்றுமே உனக்குப்
பொய்முகம் அணிவித்ததில்லை
மாணவர்களுக்கு வழிகாட்டியாய்
மக்களுக்கு நல்ல தலைவனாய்
அரசியல்வாதிகளுக்குப் பாடமாய்க்
குழந்தைகளுக்குப் பிடித்தவராய்
அனைவரையும் நல்ல மனத்தால்
ஆட்கொண்டாய் அன்பனே!
அப்துல்கலாமே! உன்னைக் காலனுக்குக்
காவு கொடுத்துவிட்டுக்
கையறு நிலையில் இந்தியாவே
கலங்கி நிற்கிறது
எழுந்து வா கலாமே…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக