திங்கள், 7 செப்டம்பர், 2015

வல்லமை புகைப்பட போட்டி---28



 உன் கடைக்கண் பார்வை தென்றலாய் என்னைத் தழுவுது; நீபோட்ட கண் விலங்கில் மாட்டித் தவிக்குது மனசு!’ என்று கவினோடு காதல் கவிதை தீட்டியுள்ளார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.      



அலையும் மேகங்களுக்குள்ளே

நகரும் நிலவு போல
இலை மறை காயாக மறையும்
இளமையின் ரகசியம் காதல்
காதல் பூத்த வேளையில்
நாணம் தோன்றுவது அழகுதான்
இன்றைய பெண்ணுக்கு
இந்த நாணம் புதுமுறை
உன் கடைக்கண் பார்வை
தென்றலாகஎன்னை தழுவுது
மல்லிகை கொடியாய்
என் தோளை சுற்றுது
உன் கண்ணின் ஈரம் பட்டதும்
என் மனசெல்லாம துளிர் விட்டது
நீ போட்ட கண் விலங்கில்
மாட்டி தவிக்குது மனசு இதை
ஊட்டி வளர்ப்பாயா இல்லை போக்கு
காட்டி மறைவாயா?
புரியவில்லை

சரஸ்வதி ராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக