ஞாயிறு, 29 மார்ச், 2015

வல்லமை மின்னிதழ்-18-3-2915 -- நிதர்சனம்

50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை -வல்லமை மின்னிதழ்
18-3-2015
நிதர்சனம்
–சரஸ்வதி ராஜேந்திரன்.
வெளியூரிலிருந்து திரும்பி வந்த குடும்பத்தினர் வீடு திறந்து கிடப்பதைக் கண்டு பதறினர்.
மகன் ஒருபக்கம், மகளொருபக்கம், தந்தை ஒரு பக்கம் என ஓடியதைக்கண்ட தாய்,
“ச்சே … என்ன ஒரு சுய நலம்… அதது பொருட்களை பார்க்க ஓடுதுகள்” என அலுத்துக்கொண்டே தன் பீரோவை செக் பண்ணினாள்.
நல்லவேளை என் லேப்டாப் இருக்கு என்றாள் மகள்.
நல்ல வேளை என் பாஸ்போர்ட், விசா இருக்கு என்றான் மகன் .
நல்லவேளை என் ஏ.டி.எம். கார்டு இருக்கு என்றார் தந்தை.
முன் ஜாக்கிரதையா நகை, பண த்தையெல்லாம் லாக்கரில் வைத்தது நல்லதாப் போச்சு என்று சொன்ன அப்பா அம்மாவைக் கேட்டார், “உன்னுது ஏதாவதுபோச்சா?”
“ஆமாம், மேஜையில் இருந்த டைஜின் மாத்திரை அட்டையைக் காணோம்”
“அப்பா, எதற்கும் நம்ம ஏரியா போலீஸ்கிட்ட சொல்லிவைக்கலாமா?”என்று மகன் கேட்க …
“வேண்டாம், இதைக் காரணம் காட்டிஅவர் தினமும் என்கிட்ட நூறு ரூபாய் கறக்கிறதுக்கா?” என்றார் அப்பா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக