செவ்வாய், 29 மார்ச், 2016

நிலா முற்றம் விருது

சுமையில்லா பொழுதுகள்
உடல் நோக
இடை நோக
பெற்றெடுத்து
இரவு பகல்
இமைமூடாமல்
வளர்த்து
கடன் பட்டு உடன் பட்டு
படிக்கவைத்து
யார் யார் காலிலோ
வீழ்ந்து வேலையும்
வாங்கி கொடுத்து
அலைந்து திரிந்து பெண்
பார்த்து திருமணமும்
செய்யும் வரை சுமையில்லா
பொழதுகள்தான் என்றாலும்
கூசாமல் பெற்றவளை
முதியோர் இல்லத்தில்
விட்டாலும் அதையுமே
சுமையில்லா பொழுதாய்தான்
கழிக்கிறாள் பிள்ளையின்
நல்வாழ்வு கருதி ஒரு தாய்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக