சனி, 6 பிப்ரவரி, 2016

ஜனவரி மாத கவிதை---மனிதபிமானம்


உலக மயமாக்கல் யுகத்தில்
பணத்தையே மனிதன்
பெரிதாய் நினைப்பதால்
மனிதம் செத்துக்கொண்டிருக்கிறது

அடிபட்டவனை ஆஸ்பிடலில்
சேர்க்காமல் பேட்டி எடுப்பது
மனிதாபிமானமில்லை
யார் செய்தியை முந்தித் தருவது
எனப்போட்டிப்போடும்
சேனல்கள் செய்வது மனிதபிமானமில்லை
பேருக்காகவும் புகழுக்காகவும்
வியாபரத்துக்காகவும் செய்வது
மனிதாபிமானமில்லை
வறுமையால் துடி துடிக்கும்
ஏழையின் துயர் துடைக்க
பிடி சோறு பிழைப்பைக் கொடு
கல்லாது கருகிவிடும் சிறார்களுக்கு
கற்றலின் அவசியத்தை எடுத்துச்சொல்லி
கல்வி கற்க பண உதவிசெய்
ஊனமுற்றோருக்குமனமிரங்கு
துணியின்றி தவிப்போருக்கு துணிகொடு
மனிதனாய் இருந்தாலும்
மாக்களாய் இருந்தாலும்
துயருவோரின் துயர் துடை
மனிதனாக பிறப்பது பிறப்பல்ல
மனித நேயத்தோடுஇருப்பதே சிறப்பு
மனிதத்துவமில்லாத மனிதர்கள்
தினந்தோறும்செத்த பிறவிக்குச் சமம்
மனிதத்துவத்தோடு  வாழுங்கள்

2 கருத்துகள்: