திங்கள், 8 ஜூன், 2015

வல்லமை --புகைப்பட போட்டி--15 - உயர உயரப் போகிறேன்

saraswathirajendran wrote on 6 June, 2015, 15:20
 பரிவின்றிச்சுட்ட நரிக்குண மனிதனைக் கண்டு அஞ்சி, ஆண்டவனை நோக்கி அபயக்குரல் எழுப்பும் சிறுபறவையைக் கண்முன் நிறுத்துகிறார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்---மேகலாராம மூர்த்தி

உயர உயரப் போகிறேன்
வற்றிப்போன
நதிகள் ஏரிகள்
வறண்டு போன
வாய்க்கால்கள்
ஒருவேளை உணவு கூட
கிடைக்காமல்.
வாழ்வதாரம் தேடி
பறக்கின்றேன்
எனைக்கண்ட
நரிக்குண மனிதன்
பரிவின்றி சூட்டான்
ஓலமிட்டபடியே
உயர உயர பறக்கின்றேன்
என்னை காப்பாற்றிக்கொள்ள
இறைவா நீதான் என்னில்
நிறைவாயா  இல்லை
நானே உன்னில் மறைவேனா?

சரஸ்வதி ராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக