புதன், 8 மார்ச், 2017

கவியருவி---காதல் சுவாசம் --காதலர் தினகவிதைப்போட்டி

காதலர் தினச்சிறப்புக்கவிதைப்போட்டி
'காதல் சுவாசம்' தலைப்பில் மரபு , புதுக்கவிதை, ஹைக்கூ வகைமைகளில் கவிதைகள் படைத்து வெற்றியாளர்களாகச் சான்றிதழ் பெறுவோர்..
, கவிஞர் Saraswathi Rajendran, ...
கவிஞருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
கவியருவி நிர்வாகக்குழு
காதல் சுவாசம்
விழியிரண்டில் கன்னி வச்சு
வீழ்த்தி விட்டாய் என்னை
வீழ்ந்துவிட்ட நான்
எழுந்திருப்பது உன்
கையில்தான்இருக்கிறது
தினமும் உன் கண்கள்
என்னை உரசிஉரசியே
உயிரை வாங்குகிறது
பட்டாம் பூச்சியாய்
பறந்து பறந்துஎன் முன்னால்
கண்ணாமூச்சி ஆடுகிறது
மனசுக்குள் காதலென்றாலும்
உதடுகள் திறந்தால்தான்
உறவினைப்பெறமுடியும்
காதல் பம்பரத்தில்
பாசம் எனும் கயிற்றை
சுழற்றி நேசம் என்ற
வட்டத்தில் உருண்டுருண்டு
நெஞ்சடைத்துப் போகிறேன் என்
பித்தம் தலைக்கேறி
பகுத்தறிவு தேயுது
பாழாய்ப் போன மனித மனம்
தானாய் விழுந்து மாயுது இருப்பினும்
காதலை சுவாசிப்பதும்
வாசிப்பதும் நேசிப்பதும் ஒரு சுகானுபவம்தான்
மரணம் கூட மண்டியிடும் காதல் முன்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக