வியாழன், 16 மார்ச், 2017

முத்தமிழ் களம்08 / 03 / 2017 முதல் 13 / 03 / 2017 வரை நடைபெற்ற புதுக்கவிதை தலைப்பு - பிள்ளை நிலா

வணக்கம் நட்புறவுகளே
எமது குழுமத்தில் 08 / 03 / 2017 முதல்
13 / 03 / 2017 வரை
நடைபெற்ற புதுக்கவிதை
தலைப்பு - பிள்ளை நிலா
எனும் புதுக்கவிதையின் வெற்றியாளர்கள்
பட்டியல்.
கவிதாயினி. செல்வராணி கனகரெட்ணம்
கவிஞர். ராமநாதன் கணபதி
கவிதாயினி. மகேஸ்வரி கண்ணன்
கவிஞர். ந.பாண்டியராஜன்
கவிதாயினி. சரஸ்வதி ராசேந்திரன்
வெற்றியாளர்களுக்கு
முத்தமிழ்க்களம்
குழுவினரின் பாராட்டுக்கள்.
பிள்ளை நிலா
பிள்ளை நிலா மனதை
கொள்ளைக் கொள்ளும்
வெள்ளை நிலா என்
மகளாய் பிறந்த மஞ்சள் நிலா
நீ தானேஎன் வீட்டின் சொத்து
உன் வரவுதானே எனக்கு தித்திப்பு
மடியில் தவழும் மல்லிகையே
மலடி என்ற பெயரை தகர்த்த மாணிக்கமே
கண்கள் இரண்டும் பூச்செண்டு
எண்ணம் இனிக்கும் நற் கற்கண்டு
அன்பில் வாழும் பூஞ்சிட்டு உன்
அன்னை பாடுறேன் தாலாட்டு
மழலை மொழியில்
குழலிசை கேட்டேன் உன்
கள்ளச் சிரிப்பில் எனை மயக்கிய
கருமை நிற கண்ண பரமாத்மா நீ
தேடக் கிடைக்காத தங்கம் எனைத்
தேடி வந்த செல்வம் நீ
உன் குறும்பு செயல்கள் என்னை
குதூகலப்படுத்தும் கவலைகள் போக்கும்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக