புதன், 8 மார்ச், 2017

சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா--28-12-2016= காதல் கவிதைப்போட்டி

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே.
சங்கத் துமிழ் கவிதைப் பூங்காவில்
28/12/2016ம் நாள் நடைபெற்ற
காதல் கவிதைப் போட்டியில்
கவிதை எழுதிய [சரஸ்வதி ராசேந்திரன் ]சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார் கவிதை எழுதிய
அனைத்து பாவலர்களுக்கும்
வாழ்த்துக்கள்
நடுவர் பணியாற்றி சிறப்பான கவிதைகளை தேர்வு செய்த
கவிச்சிற்பி
சரோஜினி பாண்டியராஜன்
அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தலைமை நிர் வாகி
ந. பாண்டியராஜன்
*********************************
தீரா காதலிது
தீஞ்சுவை இனிமை அது
அச்சுறுத்தலால் அடங்காதது
நிச்சயிக்கா விட்டாலும்
நிலையானது
உண்மை நிற காதலிது
உன்னத காதலிது
முள்ளானாலும் மலரும்
கல்லானாலும் கனியும்
எதிர்ப்புகளைக் கண்டு
எள்ளளவும் பயம் காணா
தடி கொண்டு தாக்கினாலும்
தடம் மாறி போகா
அரும்பிய காதல்
அழகிய பூக்கள்
மலராய் மலர்ந்து
நிலவாய் குளிர்ந்து
நலமாய் மனதில்
உலவிடும் காதல்
புத்தம் புதிதாய்
நித்தம் வருவாய்
சித்தம் கவர்ந்திட
தித்திக்கும் காதல்
ஆடும் மயிலாய்
பாடும் குயிலாய்
சூடும் பூவாய் கூடும் காதலே
தேனாய் இனிக்கும்
சரஸ்வதி ராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக