புதன், 8 மார்ச், 2017

செய்யுட்கலை சூடிகை -- அக்னிக் குஞ்சொன்றுகண்டேன்

இனிய வணக்கங்கள் கவிஞர்களே....
03.01.2017 அன்று நடைபெற்ற செய்யுட்கலை சூடிகையின் "அக்னிக் குஞ்சொன்று கண்டேன்" எனும் தலைப்பில் சிறப்பாக கவியெழுதி கவிஞர் சரஸ்வதி ராசேந்திரன் ( Saraswathi Rajendran ) அவர்கள் #சூடிகை சான்றிதழ் பெறுகிறார்....
அவருக்கு குழுமம் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் செய்யுட்கலை சூடிகை குழுமம் சார்பில் அகம் மகிழ்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்....
சிறந்த கவிதைகளை தேர்வு செய்த நடுவர் கவிதாயினி மதுரா ( Madhura) அவர்களுக்கு மனம் மலர்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்...
************************************************
​அக்னி குஞ்சு ஒன்று கண்டேன்
அக்னிக் குஞ்சு ஒன்று கண்டேன்.
அக்கிரமம் கண்டு எதிர்த்திடதுணிந்தேன
் பற்றி எரியும் நெருப்பைப் போன்று
சுற்றித் திரியும் மனத்தை அடக்கிட கற்போம்
வேட்டு வைக்கும் வஞ்சத்தை வீழ்த்தி
அன்பு கூட்டுக்குள் அடைத்துக்
கொள்கைப் படி வாழவைப்போம் மூடநம்பிக்கை முழுவதும் அழித்து
நாடெல்லாம் நன்மை பெறச் செய்வோம்
சாதி மத சண்டைகளை ஒழித்து
பேதமின்றி வாழ வைப்போம் உலகை
நீதி நெறி முறைகளை
வீதியோரம் படர வைப்போம்
ஊர் நலனில் நாட்டமில்லா கூட்டத்தை ஊரகற்றி வைப்போம்
தீய சக்திகள் அனைத்தும்
துருப்பிடித்து போக வைப்போம்
உச்சத்துள்் நின்றிடும் அச்சத்தை துச்சமென
மிதித்து விரட்டுவோம்
அக்னி குஞ்சு ஒன்று கண்டேன் என அஞ்சாமை போதித்த பாரதியைப் பின்பற்றி வாழ்வோம்
சரஸ்வதி ராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக