புதன், 8 மார்ச், 2017

சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா--படக்கவிதை-போட்டி

படக்கவிதைப் போட்டி சிறப்பு சான்றிதழ் போட்டியாளர்
ஆணாய் பெண்ணாய் ஆக்கிய இறைவன்
அவசரத்தில் கவனப் பிழை செய்தான்
வாலறு பல்லியாய் மனது பதறினாலும்
வாழ்ந்துதான் தீர்க்க வேண்டும் வாழ்க்கையை
குறையை எண்ணி குமுறி கிடக்காமல்
நிறையாய் வாழ்ந்து நிமிர்வோம் வா
ஊனம் ஒருவருக்கு தடையில்லை
உழைக்க மனம் இருந்தால் அடையலாம் வெற்றி
கை இழந்த நீயும் கால் இழந்த நானும்
மன உறுதியை ஊன்று கோலாக்கி
உழைக்கும் வர்க்கத்தின் துணையோடு
பிழைக்கும் கலையை கற்போம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக