வியாழன், 9 மார்ச், 2017

சங்கத்தமிழ்கவிதை பூங்கா

காட்டுப்பூ பூத்திருக்கு
கன்னி மனம் காத்திருக்கு
காலக் கருக்கலிலே
களத்து மேடு போற மச்சான்
கடக் கண்ண காட்டிவிடு
கஞ்சி கொண்டு நானும் வாரேன்
செக்கச் செவத்தப் பெண்ணே
செவியெல்லாம் இன்பத்தேனே
வெயிலிலே வராதே கண்ணேஉன்
வெள்ளத்தோளு கருத்துவிடும்
மாமன் பெத்த மாரிமுத்தே என்
மனசுக்கேத்த சிரிப்பழகா
வெயிலு படாம வாழமுடியுமா
வெள்ளாமை விடாம வயிறு நிரம்புமா
அத்தைப் பெத்த ரத்தினமே
அடியே என் மருக்கொழுந்தே
உள்ளதை நல்லா பேசிப்புட்ட
உம் மனசையும் எனக்கு காட்டிப்புட்ட
காத்திருக்கேன் வந்துவிடு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக