வியாழன், 16 மார்ச், 2017

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில் 0 9/03/2017 அன்று நடந்து சந்தித்த வேளை எனும் தலைப்பில் காதல் கவிதைப்

இனிய இரவு வணக்கம் கவி உறவுகளே..
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்ததனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்
0 9/03/2017 அன்று நடந்து சந்தித்த வேளை எனும் தலைப்பில் காதல் கவிதைப் போட்டியில் கவிதை எழுதிய கவிஞர்
சரஸ்வதி ராசேந்திரன்
. அவர்கள் சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார். கவிதை எழுதிய அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்.
சிறப்பான கவிதைகளை தேர்வு
செய்த நடுவர் கவிஞர் பிரிதிவிராஜ் லோஜி அவர்களுக்கும் வாழ்த்துகள் .
தலைமை நிர்வாகி ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயி முகம்மது
மற்றும் பொறுப்பாளர்களுடன்
சந்தித்த வேளை
உன்னைச் சந்தித்த வேளையில்தான்
என்னையே நான் தொலைத்தேன்
உன் அம்பு விழிகளால் என்னை
உன் அன்பு வளையத்தில் இணைத்தாய்
சித்திரப் பூவிழி என்னைப் பாரம்மா உன்
பத்துவிரல் என்னை அணைக்கத்தானம்மா
உனக்காகத்தானே நான் பிறவி எடுத்தது
எனக்காகத்தானேஉன்னை கடவுள் படைத்தது
மை இட்ட கண்ணாலே மையல் தந்த நேரம்
முதல் முதலாய் இழந்தேனே தையல் உன்னிடம்
சிறகடிக்கும் ஆசைகளை சிந்தையில் அடக்குவேன் நீ
சிரித்திருக்கும் அழகில் நான் என்னை மறப்பேன்
புத்தியும் உன்னால பேதலிச்சுப் போச்சு
நித்திலமே இன்னுமென்னை ஏன் வதைக்கலாச்சு
கண்ணாலே மடக்கி விட்டு என்னை மறக்கலாகுமா
பெண்ணே உன் சம்மததைச் சொல்லி என்னை ஏற்றுக்கொள்ளம்மா
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக