புதன், 8 மார்ச், 2017

18-12-2016 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா--எரிதழல் கொண்டுவா

வெற்றி பெற்ற கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
தலைமை நிர்வாகி
ந. பாண்டியராஜன்
எரிதழல் கொண்டுவா 
நியாயம் தெரிந்தும்
குருடாக உள்ள கொடூர நிலைமை உலகில்
எதிர்ப்பைத் தெரிவிக்க நாட்டுடைமைகளை
வெறிச்செயலால் விரயங்கள்செய்கிறார்
பெண்கள் விரும்பாவிட்டாலும்
கொலைகள் செய்வதை கொள்கையாய் கொள்கின்றார்
நெறியற்ற வாழ்வில் தறி கெட்டுப்போகிறார்
இயற்கையை அழித்துசெயற்கையை விரும்புவோரை
அரசியல்வாதிகள் எல்லாம் அநியாயவாதியாகிறார்
ஊழலை தைரியமாக செய்யும் உலுத்தர்கள்
தீண்டாமையை கொண்டாடுவோரை
மனித குணம் அற்ற மிருக குணம் கொண்டோரை
பதவிக்காக படு கொலை செய்வோரை கண்டு
கலங்கிய நீர் போல் கதிகலங்குது தினமும் நாட்டு நடப்பு
பூனைக்கு மணி கட்ட ஆள் தேடுவதை விட்டு
பொது மக்களே திரளுங்கள் இனியொரு விதி செய்வோம்
எரிதழல் கொண்டுவா எரித்திடுவோம் தீமைகளை
சரஸ்வதி ராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக