புதன், 8 மார்ச், 2017

அமிர்தம்---21-2-2017--இ முதலெழுத்து கவிதை

#இனிய_நண்பகல்_வணக்கம் #கவிஞர்களே....
நமது அமிர்தம் குழுமத்தில் கடந்த 20/02/17 மற்றும் 21/02/17 அன்று "இ " எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு எழுதிய "படம் பார்த்து முதலெழுத்து கவிதைப் போட்டி"யில் சிறப்பாக கவிதை எழுதி சான்றிதழ் பெறுகிறார் கவிதாயினி #சரஸ்வதி_ராஜேந்திரன்
அவர்கள்
கவிஞருக்கு அமிர்தம் குழுவின் இனிய வாழ்த்துக்கள்.
இங்ஙனம் 
அமிர்தம் குழு நிர்வாகிகள்
‘I இ’’ முதலெழுத்து கவிதை
இசைவன யாவும் இனிமையாம் காண்பீர்
இறைவனை எண்ணி ஏற்கும் செயல்கள்
இடர்பாடு வந்தாலும் வெற்றியில் முடியும்
இல்வாழ்க்கையே என்றும் நல் வாழ்க்கை
இல்லாளோடு இன்ப சுகம் காண்பவன்
இயல்பான மக்களைப் பெற்று மகிழ்வான்
இவை எல்லாம் மூத்தோர் சொன்னது
இங்கிருப்போர் ஏற்றுக் கொண்டால்சரியே
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக