புதன், 8 மார்ச், 2017

தமிழமுது கவிச்சாரல் 18-12=2016--சீச்சீ இந்த பழம் புளிக்கும்

வேந்தர்
வணக்கம் பாவலர்களே #கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்...
தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நேற்றைய 18--12--16 நாளாம் போட்டி கவிதையின் #தலைப்பு_.#நீ_கொடுத்த_அல்வா_கதைநான்_சொல்லவா
தொடரவும்))))))))))
.#ச்சீ_ச்சீ_இந்தப்பழம்_புளிக்கும்
முடிக்கவும்))))))))))
வெற்றியாளர் #கவிஞர்_சரஸ்வதிராசேந்திரன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
#தமிழமுது_கவிச்சாரல்_கவிதாயினி_கவிச்சிற்பி_மதுரா பங்கேற்று சிறப்பான கவிதையை தேர்வு செய்தமைக்கு அவருர்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#நீ_கொடுத்த_அல்வா_கதைநான்_சொல்லவா
தொடரவும்))))))))))
.#ச்சீ_ச்சீ_இந்தப்பழம்_புளிக்கும்
நீ கொடுத்த அல்வா கதை நான் சொல்லவா
நீ தினம் கொடுத்த காதல் மனுவை என்
மனம் மறுக்க முடியாமல் ஏற்றேன்
பாழும் உன் சூது தெரியாமல் நான்
பகடையாகி உருட்டப் பட்டேன் காதலில்
என்னை உன் பாதுகாவலனாகவும்
உன் மெய்க் காப்பாளனாகவும் உனக்கு
பணம் எடுக்கும் இயந்திரமாகவும் என்னை
பயன் படுத்தி தூக்கி எறிந்து விட்டாய்
இருப்பினும் உன் முகத்தில் திராவகம் ஊற்றவில்லை
பிறப்பில் நல்ல தாய்க்குப் பிறந்ததால்
உன் அற்ப காதலுக்காக இனியும் உனை நினைத்து
என் சொற்ப காலத்தை பாழாக்கிக் கொள்வேன்
என ஒருபோதும் கனவு காணாதே பெண்ணே
உன் சுயரூபம் தெரிந்த உடனேயே நானும்
ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என உதறிவிட்டேன் உன்னை
சரஸ்வதிராசேந்திரன்
#தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகத்தினர்
— with Usharani and 2 others.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக