புதன், 8 மார்ச், 2017

செய்யுட்கலைச் சூடிகை -----மெட்டுக்குபாடல்

மெட்டுக்குபாடல்
காதல்
காதலி காதலி என்னை நீ ஆதரி
நெஞ்சிலே நெஞ்சிலே
வஞ்சியே உனை வைத்தேன்
கெஞ்சியே நிற்கின்றேன் நீ
நெஞ்சம் மலர்ந்தால் லாபம்
வஞ்சம் செய்தால் மனம் நோகும்
தேனை சிந்தும் நிலவில்
தீயாய் ஏன் சுடுகிறாய்
பூவை சூட்டும் கூந்தலில் என்
ஆவியை அள்ளி ஏன்முடிக்கிறாய் ?
காதலி காதலி
என்னை நீஆதரி
ஏம் பாட்டு உன்
காதில் விழணும்
எங்கே நீ இருந்தாலும்
வரணும் சம்மதம் தரணும்
விழியாலே விதைச்சிட்டு
விவகாரம் பண்ணாம வாடி
உன்னோடு சேராமல் என்
உயிர் ஒன்றும் வாழாது
நான் இருப்பதும் இறப்பதும்
உன்கையில் தானே இருக்கு
பழியை ஏற்காமல்
வழியை காட்டி என்னை
வாழவை பெண்ணே
காதலி காதலி
என்னை ஆதரி
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக