திங்கள், 23 ஜூன், 2014

வி ஐ பி வியாதி ---கல்கி---23-8-2009


தெருவெங்கும் மந்திரியின் உருவத்தை தாங்கிய பிளக்ஸ் போர்டுகள் , பேனர்கள், கொடிகள்
மந்திரி அந்த தெருவில் நடக்கும் திருமணத்திற்கு தலைமை தாங்க வருகிறார் என்பதால்
தெருவே முதல் நாள் மாலையிலிருந்தே வண்ண விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருந்தது
தெருவின் ஓரங்களில் இரண்டு பக்கமும் சீரான இடைவெளியில் வட்ட வட்டமாய்
பிளீச்சிங் பௌடரினால் கோலமிடப்பட்டிருந்தது, தெருவே கட்சி கறைகளாய் காட்சியளித்துகொண்டிருந்தது.
எல்.கே.ஜி படிக்கும் பேரனை பள்ளிவிட்டு அழைத்துவரும்போது தெருவின் கோலத்தை
பார்த்து நடந்து வந்தவன்.
" என் தாத்தா காரெல்லாம் நிறைய வருமா?"
" வெடியெல்லாம் போடுவாங்களா?"
நிச்சயமா போடுவாங்க, காது கிழிய
" இது என்ன தாத்தா வெள்ளை வெள்ளைய பவுடர்?
அது பிளீச்சிங் பவுடர்
" அதை எதுக்கு போட்டிருக்காங்க?
வியாதி பரவாமலிருக்க
"எத்தனையோ கல்யாணம் நடந்துதே, அப்பவெல்லாம் போடலிய ஏன்?
இது வி . ஐ. பி வரும்போதுதான் போடுவாங்க
" இப்ப புரியுது தாத்தா"
என்ன புரிந்தது? புரியாமல் கேட்டார் தாத்தா!
வி. ஐ. பி களாலதான் வியாதி பரவுது இல்லையா தாத்தா?
தாத்தாவுக்கு சரியான பதில் தெரியவில்லை!!!

கல்கி 23 /08 /2009 மன்னைசதிரா

அட்டாக்--குமுதம்==6-4-2011


மாசிலாமணிக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் பண்ணி யே ஆகணும்முனு டாக்டர் சொல்லிட்டார் . இரண்டிலிருந்து மூன்று இலச்ச்ங்கள் ஆகலாம் .
சிக்கனமா யிருந்து நே ர்மை யாய் சம்பாதித்து முன்னுக்கு வந்தவர் .கால்கு லேட்டட் பெர்சன் வயது எண்பது
அவருக்கு சம்மதமில்லா விட்டாலும் மனைவி தன் கணவருக்கு பைபாஸ் பண்ணியே ஆகவேண்டும் என
உறுதியாகஇருந்தாள் ,அன்பு கணவராயிற்றே மூன்றைஇலச்சங்களை விழுங்கி மாசிலாமணி உயிர்பெற்றார் வீட்டற்கு வந்ததும்
" பைத்தியக்காரியா இருக்கியே இந்த வயசிலே இவ்வளவு செலவு தேவையா ? போனால் போகட்டுமுன்னு விடாம காசை கரியாக்கிட்டே
" என்னங்க இப்படி சொல்லுறீங்க ? எனக்கு இந்த நிலைமை வந்திருந்தால் நீங்க சும்மா விட்டுருப்பீர்களா ? "
" நான் செலவு பண்ணியிருக்கமாட்டேன், உன்னைமாதிரி" என்றதும்தான் தாமதம் விசாலி ஹார்ட் அட்டாக்கில் போய்விட்டாள்.

குமுதம் 06 /04 /2011

டெக்னிக்--தினமலர்-பெண்கள்மலர்---15-5-2010

ரமா கோபமாக இருந்தாள்.ஊரில் நடக்கும் பங்குனி திருவ்ழாவிற்க்காக ஓர்ப்படி லதாவையும் ,பிள்ளைகளையும் அழைத்திருந்தாள்.தன்வீட்டிற்கு .அவர்கள் வந்த சமயம் வேலைக்காரி வரவில்லை என்றால் கோபம் வராதா?'
'
அக்கா, இதெல்லாம் சகஜம்தானே ?ஆளுக்கு கொஞ்சமாய் வேலைகளை செஞ்சுட்டா போச்சு 'என்று சொல்லி அன்றைய
வேலைகளை பகிர்ந்து செய்தார்கள் கீதாவும் ,ரமாவும்.. அடுத்த நாள் வேலைக்காரி முனியம்மா தன் எட்டு வயது மகளை
அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததும் தான் தாமதம் ரமா ,நேற்று வேலைக்கு வராத கோபத்தை வார்த்தைகளால்
கொட்டி தீர்த்தாள்.அத்தனை பேச்சுக்களையும் கேட்டு கொண்டே மகளுடன் உள்ளே சென்று வேலைகளை முடித்து விட்டு
வந்தாள்முனியம்மா .அவள் போனதும் கீதா கேட்டாள்.
"ஏங்க்கா,உங்க வேலைக்காரி பரவாயில்லையே நீங்க இத்தனை டோஸ்விட்டும் வாயே திறக்கம எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு போறாளே இந்த காலத்தில் இப்படி ஒருத்தியா ?"
' "நீ வேற ,கோவத்திலே கன்னாபின்னான்னு திட்டிட்டு உடனே பத்தோ இருபதோ கொடுத்திடுவேன் சமாதானத்திற்கு பேசாம போயிடுவா .இதெல்லாம் ஒரு டெக்னிக்தான் ஆனா நாம கோவத்தை காட்டலேன்னா அவள் நம்மை சாதாரணமா நினைச்சிடுவா அதுக்குத்தான் இந்த திட்டு "என்றாள்ரமா .
வீட்டிற்கு போகும்போது முனியம்மாவினுடைய மகள் " ஏனம்மா ,இப்படி வாயில வந்தபடி திட்டுறாங்க ...இதெல்லாம் கேட்டுட்டு அங்கே வேலை பார்க்கனுமா ?"என்று கோபமாக கேட்டாள்.
'"அடி போடி பைத்தியம் ,அந்தம்மா இன்னைக்கில்ல ,எப்பவும் கோவம் வந்தா இப்படித்தான் கத்தும் அதுக்காக ரோசம் பார்த்தா முடியுமா ?நாம வாயை திறக்காம இருந்தா கத்திட்டு உடனே பண்ம் கொடுக்கும் .சம்பளத்தை தவிர எக்ஸ்ட்ராவா பணம் கிடைக்குதில்லே இதெல்லாம் ஒரு டெக்னிக் "
முனியம்மாவை வியப்பாய் பார்த்தாள்அவள் மகள் .
தினமலர் -பெண்கள்மலர் 15 ---5---- 2010

வேதனைதான் வேர்வைக்கும் -தங்க மங்கை --ஆகஸ்ட்-2012


'அம்மா இப்ப என்ன குடி முழ்கிடுச்ச்னு நீ ஒப்பாரி வைக்கிறே ?'வாசவி கேட்டாள்
'நீ ஏண்டி சொல்ல மாட்ட,உங்க அப்பா இருந்தா இப்படி செய்திருப்பாரா ,உங்க பெரியப்பா ,வாயில்லா பூச்சியானஉங்கப்பா இருக்கையிலேயே ,பங்குகளை நான் பார்க்கிறேன்னு சொல்லிச்சொல்லி லாபத்தில பெரும் பகுதியை அவர் சாப்பிட்டுட்டு மீதியைத்தான்கொடுப்பாரு உங்கப்பா கிட்டே அண்ணன் சொல்லை தட்டாத தம்பியாச்சே உங்கப்பா .நம்பி நம்பி ஏமாந்தாரு.நான் ஏதாவது சொன்னாகூட சண்டைக்கு வருவாரு இப்ப,அவரே போனதுக்குபின்னாலே .,உங்க பெரியப்பா என்னசெஞ்சாரு ,கொஞ்சக்கூட ஈவு இரக்கமில்லாமல் பெண்
பிள்ளையை வச்சிருக்காலேன்னாவது,நம்மை ஏமாற்றாமல்
நமக்கு சேர வேண்டியதை கொடுத்தாரா?அதை இதை கணக்கு காட்டி நம்மை அம்போன்னு விட்டார் அதை மறக்க சொல்றியா ?ஜானகி குமுறினாள்
"அம்மா ,நடந்தது நடந்திட்டு ,இத்தனை காலம் நம்ம கையை ஊன்றி இன்னைக்குநல்ல நிலைக்கு வந்துட்டோம் .இன்னமும்
நீ அதையே சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி?
அப்பாவுக்கு தப்பாதவள்டி ,நீ இந்த நிலைக்கு வர ,நாம எத்தனை அவமானங்களை சந்திருச்சிருப்போம் ,மறந்துட்டியா ?'
'சரி இப்ப செய்யணும்னு சொல்றே ?"
"அந்த ஆளுக்கு நீ பத்திரிகை அனுப்பக்கூடாது ,அவர் கண் பட்டாலே இந்த வீடு புகைஞ்சிடும் "
"அம்மா ஒரு திருத்தம் ,நான் நேரில் போயோ ,தொலை பேசியிலோகூப்பிடலே .மூன்றாம் மனுஷனுக்கு அனுப்பற மாதிரி
பத்திரிக்கையை தபாலில் போட்டுடறேன் சரியா?"
"அதுதான் சரி ,அப்படியே ரோசம் கெட்டு போய்வந்தாருன்னா ,நான் பேசிக்கிறேன் "ஜானகி கோபத்தோடு சொன்னாள்.
அவள் கோபப்பட காரணம் உண்டு
ஏகாம்பரமும் ,ராஜவேலுவும் அண்ணன் தம்பிகள் .ராஜவேலு அண்ணனிடம் அளவுக்கதிகமான பாசமும் ,மரியாதையும் வைத்திருப்பவர் ..ஏகம்பரமோ சுயநலவாதி ,பெற்றோர்கள் சொத்தை கூட ,தம்பிக்கு அதிக விளைச்ச லில்லாத் பங்கையும்
தனக்கு நல்ல பங்குமாகத்தான் பிரித்தார் அதையும் தானே விவசாயம் பார்ப்பதாகசொல்லி வருடா வருடம் மூக்கால்அழுதபடியே தான் நெல் அளப்பார் .என்ன ஏன் என்று கூட ராஜவேலு கேட்கமாட்டார் .அண்ணன் எதிரில் நின்று கூட பேசபயப்படுவார்.திடீரென்று எதிர் பாராதவிதமாக விபத்தில் ராஜவேலு இறந்து போனார் .ஏகாம்பரத்துக்கு கொண்டாட்டமாக
போய்விட்டது அதுக்கு கடன் வாங்கினான் ,இதற்குகடன் வாங்கினான் என்று பொய்சொல்லி ராஜவேலுவின் பங்கையும் விற்று சுவாகா பண்ணிவிட்டார் .தன்மைகளுக்கும் ,மகனுக்கும் சகல ராஜபோகங்களையும் தந்தவர் ,தம்பி மனைவியையும் ,படித்துக்கொண்டிருந்த வாசவியையும் அம்போன்னு விட்டுவிட்டார் .ஜானகி தனக்கு தெரிந்த ஒயர் பின்னுதல் ,பிரம்புகூடை பின்னுதல் என சுய வுதவி குழுவில் சேர்ந்து பல தொழில்களை செய்து தன்னையும் மகளையும் காப்பாற்றிகொண்டாள்.கல்லூரியில்உதவி தொகை துணையுடன் வெற்றிகரமாக படிப்பை முடித்து இன்று கலெக்டர் ஆகிவிட்டாள்.
தன்சொந்த பணத்தில் அழகான வீட்டை கட்டி ,தனக்கு பிடித்தவனுடன் திருமணமும் செய்துகொள்ள போகிறாள் .அதற்கான
கிரகபிரவேச பத்திரிக்கையை தான் ,தன்னை ஏமாற்றிய மைத்துனருக்கு ,அனுப்பக்கூடாது என்று ஆத்திரப்ப்டுகிறாள் நியாயம்தானே ? பல வி .ஐ .பி க்கள் வாசவி வீட்டிற்கு வந்தார்கள் .அவர்களை எல்லாம் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்துக்கொண்டிருந்த வாசவி ,வீட்டு வாசலில் ஆட்டோவில் வந்து இறங்கிய தன் பெரியப்பாவையும் ,பெரியம்மாவையும் பார்த்து அதிர்ந்தாலும் ,அம்மா கண்ணில் பட்டால் என்னவாகுமோ என பயந்து ஓடினாள்தெருவிற்கு .
"வாங்க பெரியப்பா ,வாங்க பெரியம்மா ,எங்கே நேரில் வந்து கூப்பிடலைன்னு வராம இருந்திருவிங்களோன்னு பயந்தேன் "
என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது அவர்களை பார்த்துவிட்ட ஜானகி ஆவேசத்தோடு அவர்களை நோக்கி வர ,வாசவி தவித்து போனாள்.
. அவசரமாக அம்மாவை நோக்கி போனாள்.'"அம்மா இது வி. ஐ .பி க்கள் வந்திருக்கிற விழா .விரோதியா இருந்தாலும்
வாசல் தேடி வந்தவங்கள அவமரியாதை செய்யக்கூடாது விழா முடிந்ததும் மற்றதை பார்த்துக்கலாம் .உனக்கு பிடிக்காட்டி
,நீ வேற வேலையை பார் ,நான் அழைச்சுக்கிட்டு போய்,சாப்பிட வைக்கிறேன் . தயவு செய்து எல்லோர் முன்னாலேயும் விழாவை அசிங்கப்படுத்திவிடாதே .மற்றவர்கள் நம்மை தப்பா நினைப்பாங்க புரிஞ்சுக்க ..."
'அப்பாவை போலவே பொண்ணு ,நீயும என்னை வாயடைச்சுடு ,என்னவோ போ ''ஜானகி கோபித்துகொண்டு உள்ளே போனாள் . நிலைமையை புரிந்து கொண்ட ஏகாம்பரம் வாசவின் கைகளை பிடித்துக்கொண்டு தன்தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டார் .எல்லோர் முன்னிலையிலும் .ஆனால் வாசவி அதை தடுத்து ,"பெரியப்பா ,நான் உங்களை தப்பா நினைக்கலை
.நீங்க அன்னைக்கு அப்படி செய்யாதிருந்தால் இன்று நான் இந்த நிலைக்கு வந்திருக்கமாட்டேன் .யாருடைய வெற்றிக்கும்
ஒரு வேதனைதான் வேர் வைக்கும் ,இன்னைக்கு நான் கலெக்டர் ஆனதுக்கு காரணமே நீங்க .
என்னை உதாசீனப்படுத்தியதுதான் .அந்த நன்றிக்காகதான் உங்களை அழைத்தேன் .இந்த விழாவிற்கு .நான் எல்லாத்தையும் மறந்துட்டேன் .நீங்களும் மறந்துடுங்க .நீங்கதான் முன்னே நின்னு ,என் அப்பா ஸ்தானத்தில் இந்த கிரகபிரவேசத்தையும் அடுத்த சில நாட்களில் நடக்கபோற என் கல்யானத்தையும்முன்னே நின்று நடத்தி வைக்கணும் பெரியப்பா "என்றுசொல்ல ,
கூனிக்குறுகி அவள் கைககளை பிடித்துகொண்டு "உனக்கும் உங்கப்பாவை போலவே பெருந்தன்மை அதிகம் ஆன்னல் நான்
துரோகி என்னை போய்முன்னே நின்று நடத்த சொல்றியே .அதுக்கு எனக்கு தகுதியே இல்லம்மா .இந்த சின்னவயசிலே உனக்குத்தான் எத்தனை மனபக்குவம் "கண்ணீர் விட்டார் .
"பெரியப்பா நாளும் கிழமையுமா இப்படி கண்ணீர்விடலாமா ?போங்க போய் வேண்டிய காரியங்களை பாருங்க ,சீக்கிரம்.....
கண்ணீரை துடைத்தபடியே உள்ளே போனார்கள் ஏகாம்பரமும் வசந்தாவும் .இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஜானகி ,
தன மகளின் மனப்பக்குவத்தை பார்த்து தானும் அவர்களிடம் மரியாதையாக நடந்து கொண்டாள் அதை பார்த்த ஏகாம்பரமும் வசந்தாவும் மனம் நொந்து அழுதார்கள் குற்றமுள்ள நெஞ்சாயிற்றே /ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டார்கள்
Thanga mangai,
August,2012
(Monthly magazine)

இளிச்ச வாயன் --தினமலர்-வாரமலர்--12--8--2012


"என்ன பாண்டியா ?வேலையெல்லாம் முடிஞ்சு டுச்சா?வீட்டுக்கு கிளம்பிட்ட ...?"சகஊழியர் மோகன் கேட்டான்.
"அதில்லையப்பா ...என் மனைவி சினிமா பார்க்கணுமுன்னு சொன்னா .டிக்கெட்ரிசர்வ் பண்ணிருக்கேன் .இருக்கவே இருக்கான்,இளிச்சவாயன் வசந்த் ,அவன் கிட்ட கொடுத்தா ,என் வேலையையும் சேர்த்து செஞ்சு வைக்க போறான் "என்று கூறி சிரித்தான் பாண்டியன் .
"அதுவும் வாஸ்தவம்தான் .நம்ம ஆபீஸ்ல ரொம்ப பேர் அவன்கிட்ட வேலை வாங்குறாங்க .ஆனாலும் மனுஷன் முகம் சுளிக்கணுமே,நல்ல மனுஷ்ன்பா ..."என்றான்மோகன் . எல்லார் வேலையையும் இழுத்துப்போட்டு செய்வதால் வசந்துக்கு இளிச்சவாயன் பட்டம் கொடுத்தார்கள் ஊ ழியர்கள் .தினமும் லேட்டாக வீட்டுக்கு போவது வசந்த் மட்டும்தான் .இது அவன் மனைவிக்கு கோபத்தை ஏற்படுத்தியது . வசந்த் வீட்டுக்குள் வந்ததும் ......
"ஏங்க ,வாசுகி புருஷன் உங்க கூடத்தான் வேலை பார்க்கிறாரு .அவரெல்லாம் டான்னு அஞ்சு மணிக்கே வீட்டுக்கு வந்துடுறார் .நீங்க மட்டும் லேட்டா வரிங்க ,கேட்டா வேலை இருந்துச்சுங்கரிங்க .."என்று எரிந்து விழுந்தாள்
"யாராவது ஒருத்தர் பொறுப்பா இருந்து பார்க்கணுமில்லே கீதா .."என்ற வசந்த் முகம் கழுவ சென்றான் .
"வேலை செய்கிரவன்கிட்ட வேலையை கொடு , தூங்கிறவன்கிட்ட சம்பளத்தை கொடுங்கிறபழமொழியை உங்களுக்காகத்தான் சொல்லிருக்காங்க போல ..நீங்க இப்படி இளிச்சவாயனா இருந்தா உங்களை எல்லாரும் ஏமாத்ததான்
செய்வாங்க .."என்று கீதா கூற ,சிரித்தபடியே நகர்ந்தான் வசந்த் . ஒரு மாதத்திற்கு பின் ........இனிப்பு பொட்டலத்தோடு வந்த
வசந்த் ,மனைவி கீதாவை அழைத்து இனிப்பை ஊட்டிவிட ..."என்ன விஷேசம் ?.எதுக்காக இனிப்பு?"என்றாள் கீதா
"எனக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு .."என்றான் வசந்த் .
"என்னங்க சொல்றிங்க ?உங்களுக்கு பிரமோஷனா?உங்களுக்கு மேல் சீனியர்கள் எல்லாம் இருக்காங்கன்னுசொல்வீங்க
..அப்படி இருக்கிறப்ப உங்களுக்கு எப்படி பிரமோஷன் கொடுத்தாங்க ?"ஆச்சரியமாக கேட்டாள்கீதா .
"உனக்கு மட்டுமில்லே ,எல்லாருக்குமே இந்த ஆச்சரியம்தான் .எல்லாரும் அவங்க வேலையை என்கிட்டே கொடுத்ததாலே என்னால எல்லோருடைய வேலையையும் கத்துக்க முடிஞ்சது ..என்திறமையையும் வேலையையும் பார்த்த ம எம் .டி , எனக்கு பிரமோஷன் கொடுத்துட்டார் .இனிமே நான் மேனேஜர் .இப்ப சொல்லு யார் இளிச்சவாயன் ?"என்று கேட்டதும் ,வியப்பால் விழி விரிய கணவனை பார்த்தாள். கீதா
தினமலர் -வாரமலர் ----ஆகஸ்ட் 12 ------2012

வீடு --தினமலர்-பெண்கள் மலர்--19-6- 2010


'வீட்டுக்கு ஒரே பையன்தான்
' அவனுக்கு கூட பிறந்தவங்க யாரும் கிடையாது .அப்பா அம்மா மட்டும்தான் பையன்தான் . கூட இருக்காங்க
பிக்கல் பிடுங்கல் கிடையாது நம்ம பாப்பா வேலை பார்க்கிற கம்பெனிக்குபக்கத்தில இருக்கிற பாங்கில்தான் பையனுக்கு வேலை .தனிக்குடித்தனம்தான் ....என்ன சொல்றிங்க ?"தரகர் கேட்டார்
உஷாவுக்கும்மோகனுக்கும் இந்த இடம் பிடித்து போனது ,தன்மூத்த மகனிடமும் மருமகளிடமும் விவரம் சொன்னார்கள்
அவர்களும் ஓகே சொல்லி பேசி முடிக்க சொன்னார்கள்
"உஷா..நம்ம பையன் கிட்டேயும் மருமகள்கிட்டேயும் கேட்டுட்டோம் கல்யாணம் பண்ணிக்கப்போற தர்ஷினிகிட்டே கேட்கவேண்டாமா ?'என்றார் மோகன் ,

.
''அவ இந்த காலத்து பெண்ணுங்க ,இப்படி பட்ட சான்சை வேண்டாம்னா சொல்லுவா ?எதற்கும் கேட்போம் '"என்றாள்உஷா
வேலை முடிந்து வந்த தர்ஷினியிடம் தரகர் சொன்ன விவரங்களை சொன்னார்கள் தேடினாலும் இது போன்ற இடம் .
கிடைக்காது என்றார்கள் .எல்லாவற்றையும் கேட்ட தர்ஷினி" உங்களுக்கெல்லாம் இதில் சம்மதமா ?"கேட்டாள்
"'எங்களுக்கெல்லாம் பிடிச்சதினாலேதான் கேட்கிறோம் ,ஏன் உனக்கு பிடிக்கலையா ?"
.""வீடு என்பது வாழறதுக்கு ....நான் வாழ னுமும்னு நினைக்கிறேன் ."
அப்படின்னா "
"நாலு பேரோட சந்தோஷமாவாழறது தான் வாழ்க்கை ,இங்கே எப்படி அம்மா அப்பா ,அண்ணன் ,அண்ணின்னு கூட்டு குடும்பமா வாழ்றேனோ அப்படித்தான் புகுந்த வீட் லேயும் வாழ ஆசைப்படுகிறேன் .ஆபீஸ் விட்டு வந்து இரண்டு பேரும்
அடைபடுகின்ற கூடுகளாய் வீடுகள் மாறுவது எனக்கு பிடிக்கலே .தனிக்குடித்தனம் என்பதுவசித்தலுக்கானகூடு
வீடு என்பது பலருடன் விட்டுக்கொடுத்து வாழ்தலுக்கானது நீங்க பார்த்திருக்கிற பையனோட அப்பாவும் அம்மாவும் எங்ககூட
சேர்ந்து ஒரே வீட்டுல இருப்பாங்கன்னா இந்த இடம் ஓகே இல்லன்னா வேற இடம் தேடுங்க .''என்றாள் தர்ஷினி தீர்மானமாய்.
பெற்றவர்கள் வியப்பாய் அவளை பார்த்தார்கள்
தினமலர் -பெண்கள்மலர் - ஜூன் 19 - 6 - --2010

பானுவின் மாமியார் --அவள் விகடன்-25-10-2011


கோமதி ஈசி சேரில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தாள் .வெளி கேட் திறக்கும் சப்தம் கேட்க -மருமகள் பானுவின் அப்பா ஆராவமுதன் வந்து கொண்டிருந்தார் .சட்டென்று எழுந்து ரூமுக்குள் சென்று விட்டாள்.
"பானு.....பானு "
அடுப்படியில் வேலையாக இருந்த பானு ,பசுவின் குரல் கேட்ட கன்று போல் துள்ளி வந்தாள். "வாங்கப்பா ,உட்காருங்க ,ஊரிலே அம்மா ,தம்பி ,தங்கைகள் நல்லாஇருக்காங்களா ?"
"எல்லோரும் நல்லா இருக்காங்க ,உங்க மாமியார் நல்லைருக்காங்கள?இந்தா ....இந்த அல்வா மிக்சர் ,பூ ,உன்மாமியாருக்கு
பிடிச்ச பச்சை நாடான் பழம் .வாழை பழத்தை அவங்ககிட்டே கொடு "
" ஏன்பா இவ்வளவு ?'
"மகளை பார்க்க வரப்ப வெறுங்கையோடு வரலாமா?சரி மாப்பிள்ளை நல்லைருக்காரா?'.
எல்லோரும் நல்லா இருக்கோம்பா"
பானு..பானு 'கோமதி கூப்பிட்டாள்.
'உட்காருங்கப்பா ,அத்தை கூப்பிடறாங்க கேட்டுட்டு வரேன் "
"என்ன அத்தை ?""யாரோட பேசிட்டிருக்கே ?'
"அப்பா வந்திருக்காங்க "
"அதான் கல்யாணமான மூணு மாசத்திலே ஆறு தடவை வந்திட்டாரே "
இதை கேட்டதும் முகம் வாடி போனாள்பானு அந்த சமயம் எதிர் வீட்டு பத்மா"கோமதியக்கா "என்று குரல் கொடுக்க
அவசரமாக வெளியே சென்றாள்கோமதி வந்திருந்த சம்பந்தியை என்னவென்றுகூட கேட்காமல் .
"என்ன பத்மா ?
ரேசனில் பருப்பு போடறாங்களாம் நீங்களும் வரிங்களா ?"
"இரு பானுவை அனுப்பறேன் "என்றவள் உள்ளே திரும்பி -
"பானு ,"பத்மாவோட போய் ரேசனில் வாங்கிட்டு வந்துடு '"
"இதோ அப்பாவுக்கு காப்பி கொடுத்துட்டு ..வந்துடுறேன் '
"அவர் காப்பி சாப்பிடாமலா வந்திருப்பார் '?அவர் எங்கேயும் ஓடிப்போக மாட்டார் ,போயிட்டு வந்து கொடுக்கலாம் ,பாவம் பத்மா நிக்கறா "..
"அப்பா இதோ வந்துடுறேன் "
இதற்கு மேலும் அங்கிருக்க கிறுக்கா அவருக்கு ? "இல்லம்மா ,உன்னை பார்க்கத்தான் வந்தேன் பார்த்துட்டேன் புறப்படுறேன்
வரேன் சம்பந்தி "வாஞ்சையுடன் சொல்லி புறப்பட்டார் ஆராவமுதன்
பானுவுக்கு ஆத்திரமாக வந்தது ,பாவம் அப்பா அவர்கிட்டே இரண்டு வார்த்தை கூட பேச விடாம விரட்டுராங்களே ...ச்சே ,வீட்டுக்கு வந்தவரை வாங்கன்னு தான் சொல்லலே காப்பியாவது கொடுத்து அனுப்பலாம்னு பார்த்தா
,ஏன் இப்படி இருக்காங்க அத்தை ?என்னை நல்லாத்தான் வெச்சுருக்காங்க ,பிரியமாத்தான் இருக்காங்க அப்புறம் ஏன் இப்படி ?நான் வேணும் ...என் குடும்பம் பிடிக்கலையா ?"அப்பாவுக்கு என்னை பிரிஞ்சுருக்கிறது கஷ்டமா இருக்கு பாசத்தில் இரண்டு மூணு தடவை வந்திருப்பார் ,அதுக்காக இப்படியா ?'
"இந்தாம்மா ..கார்டை கொடுத்துட்டு பையை பிடி "ரேசன் கடைக்காரர் கேட்டதும்தான் சிந்தனை கலந்தால் பானு .
"பானு ஏன் ஒரு மாதிரியா இருக்கே ?என்று ஆரம்பித்தாள்பத்மா .
"ஒண்ணுமில்லே பத்மா அத்தே "
"இல்லை பானு கடையிலேயே பார்த்தேன் நீ ஏதோயோசனையிலேயே இருந்தே .என்னவிசயம் ?'
இவரை நம்பி பேசலாமா? இவர் அத்தைக்கு வேண்டியவராச்சே ...நாம அவசரப்பட்டு எதையாவது சொல்ல அவர் ஒன்னுக்கு இரண்டா போட்டுகொடுத்துட்டா ..?உஷாரானாள்பானு . "ஒண்ணுமில்லே அத்தை ..தலை வலி அதான் "என்று மழுப்பினாள் . "எனக்கு தெரியும் பானு உங்கப்பா உன்னை பார்க்க வந்ததும் ,உங்க அத்தை அவரை இன்சல்ட் பண்றதும் எனக்கு தெரியும்
அதானே உன் கவலை ?'
"இல்லையில்லை ...அதெல்லாம் ஒண்ணுமில்லை "அவசரமாக மறுத்தாள்பானு ."எனக்கு எல்லாம் தெரியும் உன் அத்தை நல்லவங்க பானு உன் அப்பா சாதாரண வேலையில் இருப்பவர் தினக்கூலி வாங்குபவர் அவர் உன்னை பார்க்க வரப்ப ல்லாம்
இருநூறு ரூபாய்க்கு குறையாம ஏதாவது வாங்கிட்டு வறாராம்அந்தப்பணம் இருந்தா ...உன் அப்பா குடும்பத்துக்கு இரண்டு நாள் சாப்பாட்டு செலவுக்கு வருமாம் உன் அத்தை இப்படி பேசினாலாவது ,,தன வரவை குறைச்சு .குடும்பத்துக்கு செலவு செய்வாரேன்னுதான் கோமதியக்கா இன்சல்ட் செய்றது மாதிரி நடிக்கிறாங்கலாம்.இதை என் கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்க
இனி பதினைந்து நாட்களுக்கொருமுறை உன்கிட்ட பழம் ஸ்வீட்ன்னு வாங்கி கொடுத்து அப்பாவை போய் பார்த்துட்டு வரச்சொல்லி அனுப்பனும்னு கூட சொன்னாங்க இது பற்றி மகன் கிட்டே யும் பேசிட்டாங்களாம் . கோமதிரொம்ப நல்லவள்
பானு .கை பிடித்து சொன்னாள் பத்மா .இதை கேட்ட பானுவின் விழிகள் நனைந்தன .
அவள் விகடன் ----------------25 -10 -2011

விருது --தங்க மங்கைசெப்டம்பர் 2012


"கல்வி அதிகாரி ஐயா உங்களை கூப்பிடுகிறார் ஐயா "உதவியாளர் ரங்கசாமி சொன்னான்
எதற்காக கூப்பிடுகிறார் என்று யோசனையுடன் சென்றார் தலைமையாசிரியர் மணிவாசகம்
"வாய்யா,ஒண்ணுமில்லே நல்லாசிரியர் விருது பட்டியல் தயாராயிட்டு இருக்கு , உங்கள் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுங்கள் "
"இல்லே ஐயா ,எனக்கு இந்த விருதெல்லாம் வேண்டாம் ஐயா "
"என்னய்யா இப்படி சொல்றே ஊரிலும் .மாணவர்களிடமும் கெட்டபேர் வாங்குகிற ஆசிரியர்களெல்லாம் மந்திரி சிபாரிசிலே
போட்டி போட்டு விண்ணப்பம் கொடுக்கிறார்கள் ,உனக்கு எல்லாத்திறமையும்இருக்கு இயல்பா வரதைவேண்டாம்னு சொல்றியே ஏன் ?
"நீங்க சொல்றமாதிரி கெட்டபேர் வாங்கியவர்களோட பட்டியலில் என் பெயர் வந்தால் ......எப்படியய்யா ?வெளிலே இருக்கிறவங்களுக்கு தெரியாது ஆனால் ஊரிலுள்ளவர்களுக்கும், மாணவர்களுக்கும் உண்மையில் யார் நல்லாசிரியர்னு தெரியும் , நீங்க சொன்ன பட்டியலில் நான் இடம் பெற்றால் இவரும் அப்படித்தான்னு நினைச்சிடக்கூடாதில்லேஅதுக்குத்தான் ,அதோட என்கிட்டே படிக்கிற மாணவர்கள் நல்ல ஒழுக்கத்தோட ,நல்லாப்படிச்சு பெரிய வேலைகளை அமர்ந்து ,அந்த ஆசிரியர்கிட்டே தான் படிச்சு முன்னுக்கு வந்தேன்னு சொல்றாங்க பாருங்க அதுதான் எனக்கு பெரிய விருது , அந்த விருது எனக்கு போதும் ஐயா "வியப்பாய் பார்த்தார் கல்வியதிகாரி "மணிவாசகம் ஒரு வார்த்தை சொன்னாலும் அதுதான்யா திருவாசகம் "புகழ்ந்தார் கல்வியதிகாரி
தங்க மங்கை செப்டெம்பர் இதழ்

எது முக்கியம் ?--தினமலர் -வாரமலர்-- 20---6--2008


ஹீரோ ஹோண்டாவில் போய்க்கொண்டிருக்கும்போது செல் சிணுங்கியது .வண்டியை ஓரம் கட்டி செல் போனை இயக்கினான் சரவணன் .
"ஹலோ "
"ஹலோ ,சரவணன் ,ஒரு குழந்தை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறது "ஒ"பாசிடிவ் ரத்தம் உடனடியா வேணும் ,ரத்தம்தரும் நண்பர்களையும் அழைத்து வரமுடியுமா ?"என்று ரத்ததான தொண்டு நிறுவனத்திலிருந்து ,அசோக் பேசினான்
"ஐ ந்து நிமிஷத்தில் வரேன் "என்று கூறிவிட்டு 'ஒ'பாசிடிவ் உள்ள தன்நண்பர்களிடம் செல்லில் விவரம் சொல்லி வரச்சொன்னான் .
மறுபடி செல் சிணுங்கியது
"சரவணன் ,உங்க சுகுணாவிற்கு பிரசவ வலி வந்துடுச்சு ,ஆஸ்பிடல் போகணும் ,சீக்கீரம் வாங்க "-மாமனார் பேசினார் பதட்டமாக
"சாரி மாமா ,நான் இப்ப அவசரமா ஒரு இடத்திற்கு போகிறேன் ,நீங்களும் அத்தையும் சுகுணாவை பத்திரமாக அழைச்சுகிட்டு போங்க ,நான் என் வேலையைமுடிச்சுட்டு நேரா ஆஸ்பிடல் வந்துடுறேன் "என்று கூறி செல்லை ஆப் செய்தான் சரவணன் .அவனும் அவன் நண்பர்களும் ரத்தம் கொடுக்க அந்த குழந்தை அபாயக்கட்டத்தை தாண்டியது குழந்தையின் பெற்றோர் காலில் விழாத குறையாக அவன் கைகளைப்பிடித்துக்கொண்டுஅவனையும் அவன் குடும்பத்தையும் வாழ்த்தினர் '.
விடை பெற்றுக்கொண்டு சுகுனாவைப்பார்க்க காற்றாய் பறந்தான்
குழந்தை குறுக்கே இருக்குன்னு டாக்டர் சொன்னதா மாமா சொன்னாரே ,என்ன ஆச்சோ ?என்ற பதை பதைப்புடன் வண்டியை ஓட்டினான்
"மாப்பிள்ளை ,எங்கே போயிட்டீங்க ?நல்ல வேலையா நார்மல் டெலிவரி ஆச்சு ,பேரன் பிறந்திருக்கான் ,இந்தாங்க சாக்லேட் "என்றார் மாமனார் சந்தோஷத்துடன் .அதற்குள் டாக்டர் வெளியில் வர
"சுகுணா எப்படி இருக்கா டாக்டர் ?''என்று வினவினான் சரவணன்
"நல்லைருக்காங்க பொய் பாருங்க "என்றால் டாக்டர் நளினா
குதூகலத்தோடு உள்ளே ஓடினான் .அவனைக்கண்டதும் சுகுணா முகத்தை திருப்பிக்கொண்டாள்
சாரிடா ,சுகுணா ,ஒரு அவசர வேலை "...
"ஓஹோ என்னை விட அவசரவேலையோ? உங்களுக்கு எது முக்கியம் ?மனைவியா ?வேலையா ?இதுவே சிசேரியனா இருந்தா , புருஷன் கையெழுத்து கேட்பாங்கலேன்னு உங்களுக்குத்தொனவே இல்லையா ?டாக்டரே உங்களிடம் வெளியூர் கிளியுறு போயிடாதிங்கன்னு சொல்லலே ,அப்படிஇருந்தும் நீங்க அலட்சியமா ,,,,,"பொரிந்து தள்ளினாள்
"'ஐயம் வெறி சாரி சுகுணா ,மனைவியை விட மனிதாபிமானம் எனக்கு அந்த நேரத்திலே பெரிதாகப்பட்டது ,ஆமாம் சுகுணா யார் பெற்ற குழந்தையோ உயிருக்குப்போராடிக்கொண்டிருன்தது ,தன்னார்வரத்ததான நிறுவனத்திலே நானும் நண்பர்களும் பதிவு பண்ணி வைச்சிருந்ததாலே போன்பண்ணி கூப்பிட்டாங்க
அதான் அங்கே போயிட்டேன் போகாம இருந்திருந்தா ........அந்த குழந்தை அநியாயமா செத்திருக்கும் .பிரசவம்னா யாராவதுதுனைக்கு வந்திடலாம் ஆனால் அங்கே ஒரு உயிர் போயிருக்குமே அந்த குழந்தையோட பெற்றவர்களின் வாழ்த்தும் ,ஆசியும்தான் உனக்கு சுகப்பிரசவத்தை தந்திருக்கு சுகுணா "
"என்னை மன்னிச்சுடுங்க நான் விஷயம் தெரியாமல் கோபப்பட்டேன் நீங்க செய்த நல்ல காரியம் தான் எனக்கு நல்லதை செஞ்சிருக்கு.
"உண்மையை உணர்ந்த சுகுணாவையும் குழந்தையையும்
ஆசையோடு அணைத்துக்கொண்டான் சரவணன் .
தினமலர் வாரமலர் 20-6-2008

மருந்து --தேவி இதழ் -6--9--1992


 அந்த பங்களா வின் வெளியில் புல்வெளி இருந்தது ,காலைத்தென்றல் இதமாக இருந்தது பிரம்பு நாற்காலியில் சாய்ந்திருந்த அன்னபூரணி கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டதும் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.காரை நிறுத்திவிட்டு டிரைவர் ஆறுமுகம் இறங்கி வருவதை பார்த்து "என்ன ஆறுமுகம் தம்பி வரலே ?''கேட்டால் .
"வந்துட்டாங்க ,பெரிய அய்யா வீட்டுக்கு போயிட்டு வரேன்னாங்க ''என்றான் பணிவாக .அவனுக்கு எதிரில் உணர்ச்சிகளை காட்ட விரும்பாத அன்னபூரணி எழுந்து உள்ளே போனாள்
இவன் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறான் ?லீவிற்கு வரும் குழந்தைகள் பெற்ற தாயையும் ,தகப்பனையும் பார்க்க ஆவலாக ஓடி வருமா ?வந்திறங்கியதுமே பெரியப்பாவை பார்க்க போறதாவது?சதா பெரியப்பா ,பெரியப்பாதானா ?
இவன்தான் இப்படியென்றால் மகள் அனுவும்அப்படித்தான் செய்கிறாள் அவர்களைச்சொல்லி குற்றமில்லை அந்த கிழவன்தான் ஏதோ மருந்து வைத்து பெற்றவர்களையே மறக்க வைத்திருக்கிறான் ,இல்லாவிட்டால் இந்த பிள்ளைகள் பெற்றவர்களைவிட அந்த கிழவனிடம் பாசம் வைக்குமா ?எத்தனை செய்தும் நம்மிடம் பாசம் இல்லையே இவர்களுக்கு .
இது நாள் வரை சரி ,விவரம் புரியாதவர்கள் .கல்லூரியில் கால் வைத்த பிறகும் கூடவா பெற்ற்வர்களைப்புரிந்து கொள்ள முடியவில்லை .வரட்டும் அவன் .'கறுவினாள்அன்னபூரணி .
நீண்ட நேரத்திற்குப்பிறகு பிரபு வந்தான்
"அம்மா ,எங்கள் கல்லூரியிலேயே நான்தான் மாணவத்தலைவனாகதேர்ந்தேடுக்கப்பட்டிருக்கேன் "என்றான்
அந்த சமாச்சாரத்தை சொல்லத்தான் பெரியப்பா வீட்டுக்கு ஓடினாயா?இத்தனைக்கும் காரணமான தாய் தகப்பனிடம் அதை
முதலில் சொல்லனும்னு உனக்குத் தோணலியா ?'காட்டமாக கேட்டாள்.
"என்னம்மா நீங்க ,நம்ம குடும்பத்திலே பெரியவர் அவர் தானே?உங்ககிட்டே சொல்லாம இருந்தால நீங்க கொவிச்சுக்கணும் ,அதான் சொல்லிட்டேனே ,பெரியப்பா வீடு வர்ற வழிதானே அதான் அவர்கிட்டே சொல்லி ஆசீர்வாதம்
வாங்கினேன் அது தப்பா ?'
அன்னபூரணிக்கு அழுகையும் ஆத்திரமும் பீறிட்டன
"ஆமாண்டாப்பா அவர்தான் உங்களை வளர்த்து ஆளாக்கியவர் ,நாங்களெல்லாம் ...'
பிரபு அவளை ஒரு நிமிடம் உற்று பார்த்துவிட்டு சொன்னான் ."பெற்று விட்டால் மட்டும் அம்மா அப்பா ஆகிடமுடியாதும்மா"
"டேய்,என்னடா சொல்றே ?உங்கப்பா உங்ககளைஎல்லாம் பெரிய கான்வென்ட் படிப்பு படிக்க வைக்கலே ?நீங்க கேட்டப்ப
நீங்க விரும்பின பொருட்களை எல்லாம் தடை சொல்லாம வாங்கித்தரலேஇதெல்லாம் நாங்க செய்யாம உங்க பெரியப்பாவா சென்சார் ?உங்களைச்சொல்லி குற்றமில்லை யடா ஏதோ தம்பி கஷ்டப்பட்டுசம்பாதித்து முன்னுக்கு வரட்டும் .அவன் பெத்த குழந்தைகள் அமோகமா வாழட்டும்னு நினைக்காம பொறாமையிலே வம்சம் அற்றுப்போன உங்க பெரியப்பா எதையோ சொல்லி உங்க மனசை கலைச்சிட்டார் ,அதாண்டா இப்படி பேசறே "
கோபத்துடன் முகமெல்லாம் சிவக்கத்தாயை ஏறிட்டுப்பார்த்த பிரபு --"அம்மா அனாவசியமா பெரியப்பாவை திட்டாதீங்க பெரிய கான்வென்ட்டிலே படிக்க வைச்சீங்க ,நல்ல துணிமணி ,பங்களா வாசம் ,காரு னுஎல்லா வசதியும் செய்தீங்க மாதம்
பணம் ,டீக்கா டிரஸ் ,இப்படை எல்லாவசதியும் செஞ்சிருக்கீங்க ,அதை நான் மறக்கலே மறுக்கவு இல்லே .,,ஆனால்
"ஆனால் என்னடா ஆனால் ,இதைவிட பெற்றவர்கள் என்ன செய்யணும் ?தாடை இறுகியது அன்னபூரணிக்கு
"அன்பு செய்ய மறந்துட்டீங்க அம்மா ஊர் பெருமைக்காகவும் ,போலி கௌரவத்திற்காகவும் எல்லாம் செஞ்சீங்க ,ஒரு நாளாவதுஎங்களோட கொஞ்சி மகிழ்ந்து ,சந்தோஷமாக எங்ககிட்டே நடந்ததுண்டா ?படிப்பு ,கண்டிப்பு இதைத்தானே கண்டோம் உங்களிடம் ,பெரியப்பாவிற்கு பிள்ளைங்க இல்லாவிட்டாலும் எங்ககிட்டே அன்பு செலுத்தினார் பாசமா நடந்துகிட்டார் .உண்மையை சொனனால்அவருடைய அன்புதான் இத்தனை வசதி இருந்தும் நாங்க தறி கெட்டுப்போகாம
இருந்ததற்கு காரணம் அவர் அன்பு உரமும் ,நல்வழிகாட்டலும் இல்லேன்னா நாங்க ஊதாரி பிள்ளைகளா மாறி போயிருப்போம் இது புரியாம பணம் இல்லேங்கிறதுக்காக வும் ,பிள்ளைங்க இல்லேன்கிரதுக்காகவும் பெரியப்பாவை கரிச்சு
கொட்டரஈன்களே நியாயமா ?மருந்து வைச்சுட்டாருன்னு சதா அப்பாகிட்டே புலம்பு றீங்களே ,ஆமாம்மா அவர் அன்பு என்னும் மருந்தை வைச்சதினாலேதான் அவரைச்சுற்றியே ஓடறோம் புரியுதா ?''உறுமினான் பிரபு
இத்தனையும் கேட்டு உண்மை ச்சுட பேச்சற்று நின்றாள் அன்னபூரணி
தேவி -----6-9-1992

முகநூல்

முகுந்தை பிரியப்பட்டுதான் திருமணம் செய்து கொண்டாள் மலர் ,ஆனால் ஆறு மாதத்திற்குள் அவனை பிடிக்காமல் போய்விட்டது அவளுக்கு .அவனை எப்படி வெட்டி விடுவது ?என தீவிரமாக யோசித்தாள் .ஆனால் அவனோ அவளிடம் பிரியமாத்தான்
இருந்தான் கோர் ட் டு க்குபோனால் கூட ஆ று மாதமாகவாவது பிரிந்து வாழணும் என்று சொல்வார்கள் ,அதனால் ,அவனிடம் சண்டை போட்டுக்கொண்டே இருந்தால் பின் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டில் இருந்தாள் .ஆறு மாதம் கழித்து வக்கீல் ஒருவரை பார்த்து பணம் கொடுத்து தனக்கு சாதகமாக பேசச்சொன்னாள்
அவனை விவாகரத்து செய்ய தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொன்னாள் தனக்கு அவனிடமிருந்து ரத்து வாங்கித்தரும்படி கேட்டாள் '
அவளுடைய ஆதாரங்கள் முழுமையாக இருந்ததால் கோர்ட் அவளுக்கு ரத்து வாங்கி தந்தது .
முகுந்தோ அந்த ஆதாரங்கள் பொய் என்று சொல்லிபார்த்தான் அவன் வாதம் எடுபட வில்லை இன்றும் அவளுடன் வாழவே ஆசைப்பட்டான் .மலருடைய வக்கீலுக்கு ஆச்சரியமாக இருந்தது .அவனைப்பற்றி விசாரித்ததில் அவன் மலர் சொன்னதுபோல்
எந்த பெண்ணுடனும் அவனுக்கு தொடர்பில்லை ,பின் மலர் ஏன் இப்படி? ஆதாரம் எப்படிவந்தது ?குழம்பிய வக்கீல் அவளிடமே இது பற்றி கேட்டார்
விவாகரத்துதான் கிடைச்சுட்டுதே இனி உங்களிடம் சொன்னால் என்ன?சார் அவருடைய முகநூலில் அக்கௌன்ட் ஓபன் பண்ணினேன் ,அதேபோல இன்னொரு பெண்ணினுடைய
பெயரில் கற்பனையாக ஒரு அக்கௌன்ட் ஓபன் பண்ணி இருவரும் அடிக்கடி அசிங்க அசிங்கமா பேசுவதுபோல் நானே சாட் செய்தேன் ,மாற்றி மாற்றி ஆன் லைனில் இரவரும் சரசமாடுவதுபோல் நானே பதிவு செய்து ,அதை பீரிண்ட் அவுட் பண்ணினேன் அந்த காப்பியைத்தான் கோர்டில் ஆதாரமாக காட்டினேன் .இந்த வசதி கம்பியூட்டரில் மட்டும்தானே கிடைக்கும் ,என்று சர்வ சாதாரணமாக சொன்னாள் .
இது நம்மை விட மோசமா சிந்திச்சு இருக்கே என்று அதிர்ந்துபோய் நின்றார் வக்கீல் .

மாப்பிள்ளை மனசு --தினமலர்--பெண்கள்மலர்--9--3--2013


''நல்லவன் ,நல்ல குடும்பம்னு நம்பித்தானே பெண்ணைக்கொடுத்தோம் ,ஆனால் அவன் நம்ம பெண்ணை நல்லா வைச்சுக்கலையே ,கொடுமை படுத்தறானே பாவம் ,காலையில் எழுந்தால் வீட்டு வேலை செய்யறதே கஷ்டம் இதுல அங்கபோ ,இங்கபோன்னு விரட்டல் வேறயா?ச்சே ,மனசு துடிக்குது . போய் கேட்டுட வேண்டியதுதான் ''
முருகேசன் புறப்பட்டார் .
என்ன மாப்பிள்ளை நீங்க ,அவளை இந்த பாடு படுத்தறீங்க ,செல்லமா வளர்ந்தவ ,அறியாப் பொண்ணு ,படிக்க வெச்செங்கி றத தவிர அவளை வெளியில எல்லாம் அனுப்பினதே இல்லை ,நீங்க என்னடான்னா அங்கபோ இங்கபோன்னு விரட்டரீங்க ,ஏன் நீங்க ஆபீஸ் போறப்ப இந்த வேலையெல்லாம் செஞ்சுட்டுப்போகலாமே
அதை விட்டுட்டு என் பெண்ணை ........''முருகேசன் பேசிக்கொண்டேபோக மாப்பிள்ளை
இடைமறித்தான் .
''மாமா ,உங்க பொண்ணு உங்களுக்கு எவ்வளவு வயசானாலும் குழந்தைதான் ..அதுக்காக
அவளை ஒண்ணுமே தெரியாம வளர்க்கிறதா?மாமா ,நான் தினமும் இருபது கிலோ
மீட்டர் தூரம் வண்டியிலே ஆபீஸ் போறேன் .வழியிலே எனக்கு ஏதாவது நடந்துடுச்சுன்னா .....உங்க பொண்ணு அறியாதவளாகவே இருந்தான்னாஅவள் எதிர்காலம்
என்ன ஆகும் /சொந்தங்களும் ,பந்தங்களும் எத்தனை நாளைக்கு அவ கூட இருப்பாங்க ?அதனால்தான் அவ எல்லாத்தையும் கத்துக்கணும்னு வெளியிலே அனுப்பறேன் ..இப்ப வேணும்னா கஷ்டமா இருக்கும் ..ஒரு கஷ்டம்னு வரும்போது சமாளிக்க இந்த அனுபவங்கள் உதவும் ''என்ற மருமகனின் பேச்சில் இருந்த உண்மை புரிபட வாயடைத்துப்போனார் முருகேசன் .
தன கணவரை புரிந்து கொள்ளாமல் அவர் தன்னை பாடாய் படுத்துவதாக தந்தையிடம்
புகார் சொன்னதற்காக வெட்கி தலை குனிந்தாள் லதா .
மகளிர் தின சிறுகதை ---தினமலர் ---பெண்கள்மலர் 9-3-2013

வாழத்தூண்டும் மரணம்


''ஏய் ,உனக்கு என்னாச்சு ?பைத்தியம் மாதிரி நடு ரோட்டிலே படுத்திருக்கே ?எழுந்துவா
டிராபிக் நிறைய வர இடத்திலே ஏன் இப்படி மறியல் பண்ற மாதிரி படுத்திருக்கே ,ப்ளீஸ்
எதா இருந்தாலும் பேசிக்கலாம் இப்போ எழுந்து வா அதோ பார்,பஸ் வேகமா வருது
வாயேன் ''என்று கெஞ்சிக்கொண்டிருக்கும் போதே வேகமாக வந்த பஸ் ரோசிமேல்
ஏறி இறங்கியது .ரோஸி துடித்துகொண்டிருந்தது
சை சனியன் படுக்க இடம் பார்த்திருக்கு பார் ;என்று திட்டியபடியே யாரோ ஒருவன்
அதை இழுத்து ரோட்டோரத்தில் தள்ளினான் . தலையை தூக்க முடியாமல் கண்களை போட்டு உருட்டிக்கொண்டிருந்தது ரோஸி ,பக்கத்தில் போய் நின்று கண்ணீர் வடித்தபடியே ,''நான் எத்தனை கத்தினேன் நீகேட்டாயா?இப்பப்பார் ,உன் உயிர் போகப்போகிறது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது நீ ஏன் இந்த முடிவுக்கு வந்தே?
பரிதாபப்பட்ட ஆடு கேட்டது .
''என் கதை ரொம்ப சோகமானது ,என்னத்தை சொல்றது ?ஆனால் என்னை பெற்றவர்களும் ,உடன் பிறப்புகளும் படாத கவலையை என்னை ஒரு முறையே பார்த்த
நீ என் மரணத்தை தடுக்க எத்தனையோ முயன்றாய் ,நான்தான் கேட்கவில்லை
உன்பாசத்தைப்பார்க்கும்போது என் மரணம் இப்போ என்னை வாழத்தூண்டுது ஆனால்
அது முடியாது ,என்னோட பிறந்தது மூன்று பேர் நான் கண்விழித்து இரண்டு மாதமே
ஆனது என் உடன் பிறந்தவர்களுடன் ஜாலியா விளையாடிக்கொண்டிருந்தேன்
அப்போ காரில் வந்த ஒரு கனவான் டிரைவரிடம் ;;அதோ பார் ,சுத்த கருப்பு கலரில்
கிடக்கிற அந்தநாயை தூக்கிட்டு வா ''என்று ஆணை பிறப்பிக்க என்னை கதறக் கதற தூக்கிட்டு போனான் .அவர் வீட்டுக்கு .
நான் தாயையும் ,உடன் பிறப்புகளையும் பிரிந்த சோகத்தில் சரியாக சாப்பிடாமல் முரண்டு பிடித்தேன் அதைப்பற்றி அவர்களுக்கு என்ன கவலை?ஆனால் எத்தனை நாளைக்குத்தான் சாப்பிடாமல் இருக்கமுடியும் வயிறு பசித்ததே ,போட்டதை சாப்பிட்டேன் கொஞ்சம் வளர்ந்ததும் என்னை வேறு இடத்திற்கு மாற்றினார்கள் .
அவர்கள் புதிதாக வீடு கட்டும் இடத்தில் என்னை காவல் காக்க வைத்தார்கள் .வாட்ச்மேன் குடும்பமும் அங்கேயே இருந்தது ஒரு குடிசை போட்டு ..
அவர்கள் சாப்பிட்ட எச்சில் மீதியை போட்டது விதி அதையும் தின்று கொண்டிருந்தேன்
இரவு நேரத்தில் மட்டும் என்னை அங்கிருந்த ஆற்று மணலில் கட்டிப்போட்டுவிட்டு
வாட்ச்மேன் வீட்டுக்குள் படுத்து விடுவான் .நான் பயத்தில் கத்தினால் வெளியே வந்து
கம்பால் என்னை அடிப்பான் கடுப்பில் .அதற்கு கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டேன் .
வீடு விறு விறுவென்று வேலை நடந்தது .வீட்டு வேலையை பார்க்கவரும் முதலாளி
கடையில் விற்கும் டைகர் பிஸ்கட்டை நாயான எனக்கு வாங்கி போடுவார் ,அவர்கள் எப்படி நடத்தினாலும் நான் நன்றி உணர்ச்சியுடன் அவர்களுக்கு பாது காப்பாக இருந்தேன்
வீடு வேலையாகி விட்டது .ஒரு வாரத்தில் கிரஹப் பிரவேசம் என்று எல்லோரும் பிசியாக இருந்தார்கள் .இப்போதெல்லாம் என்னை கட்டுவது இல்லை சுதந்திரமாக த்தான் விட்டார்கள்.ஆற்று மணலில் படுத்து இஷ்டப்படி புரண்டு விளையாடுவேன் குஷியாக
கிரஹப்பிரவேச முதல் நாள் வந்த முதலாளி வாட்ச்மேனை கூப்பிட்டு ''ஏம்பா நாளைக்கு கிரஹப்பிரவேசம் இது என்ன திருஷ்டி பரிகாரமா அடிச்சு விரட்டு ,அசிங்கமா வீட்டுமுன்னால ''என்று கூசாமல் சொல்ல அந்த வாட்ச்மேன் என்னை கம்பை எடுத்து விரட்டினான்
அன்னைக்குத்தான் மனுஷங்களை புரிஞ்சுகிட்டேன்
தெரு முனை வரை விரட்டி விரட்டி அடித்தான் ஓடினேன் ஓடினேன் கால் வந்த திக்கெல்லாம் போகும் இடமெல்லாம் எஎன் தாய் தென்படுகிறாளா எனபார்த்தேன் இல்லை கால்வலி மனவலி யோடு பஸ் ஸ்டாண்ட் வந்த நான்அங்கு ஒரு மூலையில்
ஆற்று மணல் கிடக்க அசதியான நான் அதில் படுத்து கண் அயர்ந்தேன் ,அப்போது ஒருவன் பக்கத்தி இருந்த ஒருவனிடம் ''அங்கே பாருடா காலை நீட்டிகிட்டு சுகமா தூங்கிறதை நாம வேலை கிடைக்காம நாய் பிழைப்பு பிழைக்கிறோம் ரொம்ப பொறாமையா இருக்குடா அந்த நாயைப்பார்த்து ,அதுக்கு இருக்கிற நிம்மதி கூட எனக்கில்லையே ''அவனேந்தநேரத்தில் கண் வைத்தானோ ,,திடீரென்று ஒரு பஸ் காரன்
என் அருகில் வந்து உரசுராப்பில சரக் பரக்குன்னு பிரேக் அடிக்க பதறிப்போய் பக்கத்தில் இருந்த டீ கடையில் ஒதுங்கினேன் அந்த டீ கடக்காரன் என்னவோ அவன் கடை புரோட்டாவை திங்க வரதா நினைச்சு ''சனியனே எங்க வரே ?''என்று திட்டி குபீருன்னு
கொதிக்கிற வென்னீரை என் மேல ஊற்ற துடித்துப்போய் அலறி ஓடி பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் மேல் விழ ,பயந்து போன அவன் கம்பை எடுத்து அவன் கடுப்பை காட்டி என்னை ஓட ஓட விரட்டினான் .நான் மீண்டும் ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே ,மனம் விரக்தி அடைந்தது கடவுள் நமக்கு பேசும் திறனை கொடுத்திருந்தாலாவது இந்த நன்றி கெட்ட மனிதர்களை திட்டியாவது தீ ர்க்கலாம் அதுவும் இல்லை நொந்துபோய் நடந்தேன் பள்ளி விட்டு வந்துகொண்டிருந்த மாணவ குரங்குகள் என்னை கண்டதும் கல்லை விட்டெரிய மீண்டும் ஓடினேன் விடாது அவர்கள் துரத்த நான் இடரிப்போய் .முள் வேலியில் விழ என் வால் மாட்டிக்கொண்டது அபபொ
ழுதும் இரக்கமில்லாமல் கல்லால் அடிக்க நான் வலி பொறுக்கமுடியாமல் ஓட எத்தனிக்க என் வாழ் அறுபட்டு விழ நான் அதை பொருட்படுத்தாமல் ஓடினேன் உயிரை
காப்பாற்றிக்கொள்ள வால் போனதில் எனக்கு துளியும் வருத்தமில்லை .ஏனெனில் என் பழைய முதலா ளியையோ ,வாட்ச்மேனையோ பார்த்தால் என்னையறியாமல் நன்றி விசுவாசத்தால் வால் ஆடுமே அது கூடாது என்பதற்காகத்தான் நம்மிடம் நன்றி இல்லாதவர்களிடம் நமக்கு ஏன் நன்றி ?என்னைப்போல் வாயீல்லாத நீ என்மேல் காட்டும் பாசத்தைப்பார்த்து எனக்கு வாழணும்னு தோணுது ஆனால் ..இதோ என் உயிர் ...போகப்போகிறது ..காலன் என்னை நெருங்கி விட்டான் ஆடே நாய் பிழைப்பு
என்பது இதுதானோ?...நான் வரேன் 'வெட்டி வெட்டி இழுத்து உயிர் விட்டது ரோஸி
கண்ணீர் விட்டபடியே அதைக்கடந்தது ஆடு .என் நிலைமை என்ன ?கசாப்பு கடைதான்
தன் நிலைமையும் நினைவு வர அதற்கும் சேர்த்து கண்ணீர் விட்டபடியே சென்றது

காரணம்


பிள்ளை வீட்டாருக்கு பெண்ணை பிடித்துப்போனது ,சம்பிரதாய பேச்சுக்கள் எல்லாம் முடிந்ததும் கிளம்ப முற்படுகையில் ,பெண் கேட்டாள் ''ஒரு அஞ்சு நிமிஷம் உங்க பையனிடம் பேசணும் ''என்றாள்
மருண்டுபோன மனைவியை கண்ணாள் அடக்கிவிட்டு பிள்ளையை பெற்றவர் ''அதனாலென்ன ,தாராளமா பேசும்மா ''
உள்ளே போய் பேசி வந்ததும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர் .அடுத்தநாள் ----பெண் வீட்டாரிடம் இருந்து செய்தி வந்தது என் பெண்ணிற்கு இந்த திருமணத்தில் இஷ் டமில்லைஎன்று . காரணம் புரியாமல் பிள்ளை வீட்டார் குழம்பினார்கள்
ஏண்டா ',உனக்கு பெண்ணை பிடிச்சிருக்குன்னு சொன்னெயில்லெ உங்களுக்குள்ள என்ன பிரச்சனை? நீயாரையாவது காதலிக்கிறேன்னு சொன்னியா ?''கேட்டார் அப்பா
''அப்பா ,அவள் ஏதும் பேசலே ,,என் செல் நம்பர் கேட்டாள் ''
''நீ கொடுக்கவேண்டியது தானே ?''
''கொடுத்துட்டேன் அப்பா ''
''அவள் ஏதேனும் பேசி நீ ஏடாகூடமா பேசினாயா?''விசாரித்தார்
''அவள் என்கூட பேசவே இல்லையே''
''அப்புறம் ஏண்டா பிடிச்சிருக்குன்னு சொன்னவ இப்போ பிடிக்கலைன்னு சொல்லுறாள் ''
''எனக்கே ஒன்னும் புரியலப்பா ''
''இல்லே வேறு யாராவது உன்னைப்பற்றி விஷமமா ஏதாவது கதை கட்டி விட்டிருக்கான்களா?''
''அவள் யாரையாவது விரும்புறாலோ என்னவோ அதை மறைக்க ,,இப்படி சொல்றாளோ என்னவோ என்ன கன்றாவியோ போய் தொலை ய ட்டும் விட்டுத்தள்ளுங்க ''அம்மா முடித்து வைத்தாள் சம்பாஷணையை
பிறகு ,,தெரிந்தவர் ஒருவரிடம் கேட்டால் ''ஒரு செல் நம்பரைக்கூட ஆங்கிலத்தில் சொல்லத்தெரிய சொல்லத்தெரியலையேன்னுதான் வேண்டான்னுட்டாள் னு ''சொன்னார்
இது எப்படி இருக்கு? ஒரு தமிழன் தமிழில் பேசுறது தப்பா ?காலக்கொடுமையா இருக்கே
இந்த காலத்துப்பெண் கள் என்னதான் நினைக்கிறார்கள் னு புரியலே யே

உறுத்தல்


பக்கத்து ப்ளோரில் நடந்த ஷுட்டிங்கை ப் பார்த்துக்கொண்டிருந்த புது நடிகை அவந்திகா படத்தின் கிளைமாக்சை ப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்து ,அந்த முன்பின் தெரியாத டைரக்டரிடம் ஓடி பட படவென ஆங்கிலத்தில் பாராட்டினாள்
டைரக்டர் விஷ்வாவோ எந்தவித ரீயாக்க்ஷனும் இல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்றார் அவந்திகாவிற் கு சப்பென்றாகி விட்டது ச்சே என்ன மனுஷன் இவர் எப்படி மனம் திறந்து
பாராட்டினோம் , மரியாதைக்கு கூட தாங்க்ஸ் சொல்லாமல் வேண்டாம் ஒரு சிரிப்பையாவது தெளித்திருக்கலாம் இப்படியா அலட்சியம் செய்வார் தலைக்கனம் கொண்டவரோ ?கோபமாகவும் , எரிச்சலாகவும் வந்தது ,புது முகமானவள் என்ற அலட்சியமோ? எப்படிப்பார்த்தாலும் மரியாதை தெரியாத மனுஷன் போலிருக்கு
நான் ஏன் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன் ,பேசாமல் இருந்திருக்கலாம் ,நல்லதை பாராட்டாமல் இருக்கமுடியலேயே எனக்கு இது இந்த நோஸ் கட் வேண்டியதுதான் மன வேதனையுடன் வெளியேறினாள் .
அடுத்த நாலு மாதத்தில் ..
விஷ்வா எடுத்த படம் ஓஹோன்னு ஓட ,அடுத்து ஒருபடத்துக்கு கதாநாயகி தேடும் படலம் மும்முரமாகியது ,அப்பொழுது இணை டைரக்டர் கேசவ் அவந்திகாவை பற்றி சொல்ல --டைரக்டர்விஷ்வாவும் சரியென்றான் .கேசவ் ஓடினான் அவந்திகாவிடம்
''என்னசார் சொல்றீங்க ? உங்க டைரக்டர் என்ன சொல்வாரோ?''
''இல்லே மேடம் ..நீங்க வாங்க நான் சொல்லிக்கிறேன் ''--கேசவ் தைரியம் தந்தான்
அவந்திகாவும் விஷ்வா டைரக்சனில் நடிக்க ஆர்வம் கொண்டு வந்தாள்
எல்லா டெ ஸ்டும் ஓகே ஆகி பட சூட்டிங்ஆரம்பமானது .அதுவரை கதாநாயகன் யாரென்றே அவ்ந்திகாவிற்கு தெரியாது .தனக்குத்தரப்பட்ட வசனத்தை ரொம்ப கரெக்டாக சொல்லி ஓகே வாங்கினாள் . இடைவேளையின்போது ....தன்னுடைய ரொம்பநாள்
உறுத்தலை கேட்டால் விஷ்வாவிடம்
''சார் அன்னைக்கு எத்தனை ஆர்வமா வந்து உங்களை பாராட்டினேன் ,,ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போனீர்களே ஏன்?''
'' ஆமாம் நீங்க பாட்டுக்கு வந்து பட படன்னு பேசிட்டு போனீங்க எனக்கு அன்னைக்குத்தான் உறுத்தலே வந்தது நாம படிக்காம போனேமேன்னு ஆங்கிலம் தெரிஞ்சா தானே நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியும் .அதனாலேதான் வெட்கப்பட்டு வேகமா போனேன் இந்த நான்கு மாதத்தில் டியூ ஷன் எடுத்துகிட்டேன் சரளமா ஆங்கிலம் பேச ,அதுசரி நீங்க எப்படி இத்தனை சரளமா தமிழ் பேசுறீங்க ?அன்னைக்கு அப்படி பேசியிருக்கலாமே ''
''நான்கூட உங்க படத்திலே நடிக்க ஆர்வம் கொண்டுதான் நானும் இந்த நாலு மாதத்திலே
தமிழ் கத்துகிட்டேன் சொந்த குரலில் பேசணும்னு ,''
படம் முடிவடைவதற்குள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகி காதல் படம் போல் வளர்ந்து கல்யாணத்தில் முடிந்தது
மின்மினி 2008

இரண்டாம் த(π)ரம் --தங்க மங்கை--- மே -2013


''இதோ பாருங்க ,நீங்க யாரை வேண்டுமானாலும் இரண்டாம் தாரமாக கட்டிக்குங்க நான்
வேண்டாங்கலை ,ஆனால் மணவிலக்கு மட்டும் கேட்காதீங்க ,இந்த வீட்டிலே நான் ஒரு
வேலைக்காரியாகவாவது இருந்துட்டுப்போறேன் ,ஏன்னா உங்களை எனக்கு பிடிச்சிருக்கு ''
கெஞ்சினாள் மஞ்சுளா .
''டேய் ,கதிர் கேட்டியாடா ?பாவம் மஞ்சுளா ,அவளுக்கு துரோகம் பண்ண உனக்கு எப்படிடா
மனசு வருது?இரண்டு பிள்ளைகளைப் பெற்றுவிட்டு இப்பப்போய் அவளை பிடிக்கலைன்னு சொல்றது நியாயமாடா?''திட்டினான் நண்பன் சுந்தர்
ஆனாலும் கதிரின் காதுகளில் ஏறவில்லை ,அவன் பிடிவாதமாக இருந்தான் ,''இந்த பட்டிக்காட்டை வைச்சுகிட்டு என்னடா செய்யறது ?நானும் எவ்வளவோ திருத்திப்பார்த்தேன் ஒரு அங்குலம் கூட ஒத்து வரலையே என்னசெய்யச் சொல்றே?அதான் இந்தபட்டிக்காட்டை வெட்டி விட்டுட்டு சிட்டியிலே பெண் பார்த்திருக்கேன் என் முடிவிலே எந்த மாற்றமும் இல்லே டா ''
''உன்னை திருத்தவே முடியாது .இந்த முடிவுக்காக என்றாவது ஒருநாள் வருத்தப்படுவே ''சொல்லிவிட்டு எரிச்சலோடு கிளம்பினான் சுந்தர்
வலுக்கட்டாயமாக மஞ்சுளாவை வெட்டி விட்டுட்டு ,தான் பார்த்து மயங்கிய பெண்ணை திருமணம் செய்து கொண்டான் கதிர் .ஒரு மாதம் சுமுகமாக ,மகிழ்ச்சியாக ஓடியது வாழ்க்கை
ஒருநாள் ......
அலுவலகம் முடிந்து வந்த கதிர் மனைவி நிகிலாவைத்தேடினான் வீட்டில் எங்கும் அவள் இல்லை .தொலை பேசியில் அழை த்தான் ,அலுவலகப்பணி யாளர் , மனோகரனுக்கு
பிறந்தநாள் என்றும் ,இரவு உணவு முடிந்துதான் வரமுடியும் என்றும் நிகிலா தீர்மானமாகச் சொல்லி விட்டாள் .இரவு கையேந்தி பவனில் உணவு சாப்பிட்டுவிட்டு விடிய விடிய விழித்திருந்தான் கதிர் , விடியற்காலையில் மனோகரனின் தோளில் சாய்ந்திருந்த நிகிலா தள்ளாடித்தள்ளாடி வாய் குழற பேசியபடியே வந்தாள் திடுக்கிட்டான் கதிர்
''இல்லே சார் கொஞ்சம் அதிகமா குடிச்சுட்டாங்க ,வேறொ ண்ணு மில்லே ,பத்திரமா உள்ளே அழைச்சுட்டுப்போங்க ,நான் வரேன் ''மனோகரன் கிளம்பி போய்விட்டான்
''நிகிலா நீ குடிப்பியா?இதை ஏன் என் கிட்டே சொல்லலே?''
''நீ கேட்டியா ?நான் சிகரெட்டும் பிடிப்பேன் இதெல்லாம் நகர வாழ்க்கையில் சகஜம் இதுக்கு ஏன் நீ அலறுரே/?உன் பட்டிக்காட்டு பெண்டாட்டி மாதிரி என்னை நினைச்சுட்டியா ?உயர் வர்க்கத்துப் பெண் நான் பாதிநாள் இப்படித்தான் வாழ்க்கை என்னை இப்படி நிற்க வைத்து கேள்வி கேட்கிற தையெல்லாம் நான் அனுமதிக்க முடியாது ..சரி என்னை படுக்கையிலே படுக்கவை''அதிகாரமாகச் சொன்னாள் நிகிலா .
என்னதான் அவமதித்தாலும் ,அதிர்ந்துபேசாத மஞ்சுளா மனதில் வந்து போனாள் .இவள்
இரண்டாம் தாரம் மட்டுமல்ல இரண்டாம் தரம் தான் என வேதனை பட்டான் கதிர் .
தங்க மங்கை ------மே 2013

அணுசரனை --தினமலர் -பெண்கள்மலர்--18---6--2012


நேர்மை ,துணிவு ,கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு கொண்ட ராகவன் ஆக்சிடெண்டில்
ஒரு காலை இழந்ததும் ,அப் செட் ஆகி படுக்கையில் முடங்கி கிடந்தார் ,பார்க்கவே பாவமாக இருந்தது
எத்தனை சுறு சுரப்பான மனிதர் ....இப்படி மூலையில் முடங்கி கிடைப்பதென்றால் .....பாவம் இப்படித்தான் வருகிறவர்கள் எல்லாம் இர க்கப்பட்டு பேசுவதால் அவர் இன்னும் மோசமான நிலையில் முடங்கினார் .மனைவியால் இதை ஜீரணிக்க முடியவில்லை .இப்படியே விட்டால் ...அவர் ஒரு நாளும் எழப்போவதில்லை
யோசித்தால் ,அடுத்தநாள் ..
''எழுந்து பல்லை வில க்குங்கள் ,,கால்தானே போச்சு கைக்கு என்ன ?எழுந்து ஷேவிங் பண்ணிக்கலாம் ,பேப்பர் படிக்கலாம் ,அதை விட்டுட்டு படுத்தே கிடந்தா பெட் ஷோர் வந்துடும் அப்புறம் ரொம்ப கஷ்டம் ‘’
இதை கேட்ட மகன்அருணுக்கு அம்மா மேல் கோபமாக வந்தது
''ஏம்மா ,அப்பா சம்பாதிச்சு கொண்டு வந்தப்ப ,,இப்படி பேசுவிங்களா பாவம் அப்பா முடியாம இருக்கப்ப ...அவருக்கு அனுசரணையா இல்லாம இப்படி பேசுறீங்களே நியாய மா ?'என்றான் கோபத்துடன்

''ஆமாண்டா ,நான் அனுசரணையா இல்லாமத்தான் அவருக்கு இத்தனை நாளா சேவை செஞ்சேனா? வேண்டாம் ,உங்கப்பாவை படுக்க வைச்சகிட்டு பக்கத்திலே இருந்து எல்லாவற்றையும்
செய்யேன் நானா வேண்டாங்கிரேன் ..முடியுமா உன்னால் ?பைத்தியக்காரன் மாதிரி பேசற ...என்னால அவருக்கு செய்யமுடியாம இல்லே.நாம ரொம்ப அணு சரனையா ,இரக்கமா இருக்கிறதாநினைச்சு அவரை முடக்கிப்போடப்படாது ,அவர் வேலையை அவரே கொஞ்சம் கொஞ்சமா செய்ய வைச்சாத்தான் அவருக்கும் தன்னம்பிக்கை வரும் இல்லே படுக்கையில் படுத்தபடியே இப்படி நமக்கு ஆயிடுச்சேன்னு புலம்பியே முடியாதவராயிடுவார் அதை புரிஞ்சுக்க முதலில் ....அதோடு எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா ,உன் வேலையை விட்டுட்டு கூடவே இருந்து செய முடியுமா ?இதை எல்லாம் மனசிலே வைச்சுக்கிட்டுதான் அவரை அவர் வேலையைச் செய்ய தைரியம் கொடுக்கிறேன் ,,''
என்ற அம்மாவின் கூற்றில் இருக்கும் உண்மையை உணர்ந்தான் அருண்
பெண்கள் மலர்
18 --6—20

முடிவு ----தினமலர் --வாரமலர்-- 23---6--2013


'பங்கஜம் இப்படி பார்க்கிற பெண்ணை எல்லாம் உன் பிள்ளை நிராகரிச்சா ,உன் பிள்ளைக்கு
கல்யாணம் ஆகுறதே கஷ்டம் .உன் பிள்ளை யாரையாவது 'லவ் 'பண்ணுகிறானா?' தோழி
மரகதம் கேட்டாள்
''வாயை கழுவு ,அவன் எனக்கு அடங்கிய பிள்ளை .அவனுக்கு இதெல்லாம் தெரியாது .நீயா
,எதையாவது கிளப்பாதே ''-தோழியை பங்கஜம் அடக்கினாள் .
''நீ ஏதாவது கண்டிஷன் போட்டிருக்கியா ?''
''அதெல்லாம் ஒண்ணுமில்லே ,ரொம்ப படிச்ச பொண்ணாயிருந்தா ,வீட்டுக்கு அடங்கியிருக்க மாட்டா .சமையல் வேலை தெரிஞ்சுருக்கணு ம் .குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியனும் ,கணவனுக்கு அடங்கிய பெண்ணா இருக்கணும் ,இப்படி இருந்தாதானே
குடும்பத்துக்குஏத்த மாதிரி இருக்கும் நான் எதிர்பார்க்கிறது தப்பா?'' ''சொல்றேன்னு தப்பா நினைக்காதே ,இப்படியெல்லாம் பார்த்தா உன் பிள்ளை சந்நியாசியாகத்தான் இருக்கணும் ,இல்லே அவனா யாரையாவது காதலிச்சு வீட்டை விட்டு ஓடிப்போகும் நிலை வரும் ஜாக்கிரதை ,இது கலி காலம் ,நான் வரேன் ''விடை பெற்று சென்ற தோழியை யோசனையுடன் பார்த்தாள் பங்கஜம் .
இந்த காலத்தில் நம் கட்டு பாடுகள் எல்லாம் செல்லுமா?மரகதம் சொல்வதுபோல் விசாகன்
எந்த பெண்ணோட வலையி லாவது விழுந்து ,கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டை விட்டு
போனால் ,குடும்பத்தின் மானம் மரியாதை என்னாவது ?கூடாது ,நாமே ஒரளவு பார்த்து ஒரு பெண்ணை செட்டில் பண்ணவேண்டியதுதான் .நினைத்தபடி அவளே ஒரு பெண்ணைப் பார்த்து விசாகனிடம் கேட்காமலேயே ஒப்புதல் கொடுத்து விட்டாள்
செய்தி கேட்ட விசாகன் ,''அம்மா நீ பார்த்திருக்கும் பெண் நமக்கு சரிப்பட்டு வருமனு நினைக்கிறாயா ?''
''ஏன் அப்படி கேட்கிறே ?,படிச்சிருக்கா ,நல்லாவும் இருக்கா ,ஏன் உனக்கு பிடிக்கலையா ?''
''இல்லாம்மா,அவள் நிறைய படிச்சிருக்கா ,வேலைக்கு போவேன்னு அடம் பிடிச்சா ,என்ன பண்றது?''
''போகட்டும் ,அதனாலென்ன ?''
''வீட்டோட இரு ந்தா போதும்னு சொன்ன நீயா இப்படி பேசுறே?''
' ஆமாண்டா ,என் காலம்வேறு வீடே சொர்க்கம்னு இருந்துட்டேன் ,வரவளும் ம்இருக்கணும்னு எதிர்பார்க்கலாமா ?பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டாமா/''கூலாக சொல்லிவிட்டு போனாள் பங்கஜம்
விசாகன் குழம்பி அப்பாவைப்பார்க்க , அவர் தோளை குலுக்கி உதட்டை பிதுக்கினார் .
பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக பேசினவள் இப்போது தலைகீழா பேசுகிறாளே பெண் வசதியான இடம் என்பதாலோ /இரவு படுக்கை அறையில் தன் சந்தேகத்தை கேட்டார் கனகசபை .
''இதோ பாருங்க ,எனக்குத் தெரிஞ்சது சமையல் ஒன்றுதான் .வருகிற பெண் சமையலில்
பெரிய ஆளாம் ,விருது எல்லாம் வாங்கியிருக்காளா ம் .அவள் சமைத்துப் போட்டால் நீங்க மட்டுமல்ல உங்க பையனும் என்னை ஓரம் கட்டிட்டா ?என்னால முடியாதுங்க ,அடுப்படிதான் என் ராஜ்ஜியம் .அதை நான் யாருக்காகவும் விட்டுத்தரமுடியாது அதனால்தான் ,வேலைக்குப்போகட்டும்னு சொல்றேன் ''
கனகசபை சிரித்தார்
''என்ன சிரிப்பு ? ஆனானப்பட்ட அரசியல்வாதிகளே ,நடுவில் வந்த நாற்காலியை விட
மாட்டேன்னு சொல்லும்போது ,நான் முப்பது வருஷமா ஆண்டுகொண்டிருக்கிற என்
ராஜ்ஜியத்தை எப்படி விட்டு கொடுக்கமுடியும் ? அவள் வேலைக்குப்போனா கொஞ்ச நேரம்தான் வீட்டில் இருப்பாள் சண்டை போடா நேரம் இருக்காது ,அதோட நான் சமைச்சுப் போடறதால மாமியாரிடம் மரியாதை இருக்கும் ,அதான் இப்படியொரு முடிவு எடுத்தேன்
.என்னால் முடியாத பட்சத்தில் என் ராஜ்ஜியத்தை அவள் ஆளட்டும் சரிதானே?
இந்த காலத்தில் எவள் சதா அடுப்படியில் வேலை செய்ய விரும்புகிறாள் என்னைப்போல "'
வினோதமான குணத்தையுடைய மனைவியைப்பார்த்து ,பெண்கள் புதிரானவர்கள்
என்பது சரிதான் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டார் கனகசபை
ஜூன் 23 ---6-- 2013 தினமலர் ---வாரமலர்

நம்பிக்கை

ஊரே அல்லோலகல்லோல பட்டுக்கொண்டிருந்தது .காரணம் ஒரு இருபது வ ய து வாலிபன்
தற்கொலை க்கு முயற்சி பண்ண ஊர் கூடி அவனை தடுத்து நிறுத்தி வீட்டிற்கு கொண்டு
வந்து விட்டு தந்தை ராமசாமிக்கும் டோஸ் விட்டுவிட்டு போனார்கள்
ராமசாமிக்கோ அவன் மேல் உள்ள ஆத்திரம் போகவில்லை ,
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ,வேலைக்குப்போகாமல் குறுக்கு வழியில் சம்பாதிக்க
நினைத்து ஏமாந்து நின்றதால் அவர் திட்டியது தாங்காமல் அவன் தற்கொலைக்கு முயன்றான் .வீட்டிலுள்ளவர்கள் சமாதானம் செய்தனர் .ஈமு கோழி திட்டத்தில்போட்டு மொத்த பணத்தையும் ஏமாந்தால் ராமசாமிக்கு கோபம் வராதாஎன்ன ?
''ஏய் ,நீ திருந்தவே மாட்டியா? முன்னே போனவனை ஓர் கல் தடுக்கினா ,பின்னேப்போறவன் ஒதுங்கிடனுமிள்ளே ,இப்படியா போய் ஏமாறுவே?
எத்தனை பேப்பர் படிக்கிறே ?டிவியிலே பார்க்கிறே?அப்படி இருந்தும் மேலே மேலே போய் காசை பாழாக்குனா ,ஏமாந்தா ....உனக்கு புத்தியே கிடையாதா?'ஏண்டா ஏன் உயிரை வாங்குறே?''வருத்தப்பட்டார் ராமஸ்வாமி '
''எல்லாம் ஒரு நம்பிக்கைதான் ,எப்படியாவது சம்பாத்திடலாம்னு தான் ,நம்பிக்கைதானே
வாழ்க்கைன்னு சொல்றீங்களே ''
''ஆமாண்டா , தெண்டமா காசை கொட்டி ட்டு ..  ச்சே ,உனக்கு வெட்கமாயில்லே''
''ஆமா நீங்க மட்டும் என்னவாம் ,என்ன சொல்ல வந்துட்டீங்க? ''
''நான் என்னடா பண்ணுனேன் /"
''நீங்களும்தான் என்ன அவதி பட்டாலும் ,மறுபடி மறுபடி மாற்றி மாற்றி ஒட்டு போட்டு
பார்க்கிறீங்க ?நல்லது நடக்குதா ?அதுக்காக விடறீங்களா? ஒரு நம்பிக்கையிலேதானே
காலம் ஓட்டறீங்க , அதுபோலத்தான் நானும் ,உங்க ஜீன்ஸ் தானே எனக்கும் வரும் ''
ராமசாமி என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தார் .

இலக்கணம்


குமுதினிக்கு தெரியும் சுனிதா சும்மா வரமாட்டள் னு ஏதோ ஒரு விஷமத்தனத்தோடுதான்
வந்திருக்கிறாள்னு .
''என்னடி ,விஷயம் ?''கேட்டாள் குமுதினி
''உன் கணவரை பற்றித்தான் ...''
''என் கணவருக்கு என்ன ?''பதறியவள் போல் கேட்டாள்
''உன் கணவரோடு ..காரில் ..ஒரு பெண்ணை அடிக்கடி பார்க்கிறேன் .நீ எச்சரிக்கையா இரு ''
சுனிதாவால் சிரிப்பை அடக்கமுடியவில்லை .
''அடிப்பாவி ,உன் வாழ்க்கையையே குழப்பிக்கொண்டிருக்கும் ஒரு செய்தியை சொல்கிறேன் ,அதைப்பற்றி கவலைப்படாமல் சிரிக்கிறாயே ?''எரிச்சலானாள் l சுனிதா
''உன் கிணற்றுத்தவளை வேதாந்தத்தை கேட்டு சிரிக்காமல் வேறு என்னசெய்வது ? உன்புருஷன் உன் முந்தானையை பிடித்துக்கொண்டு அலைகிறார் என்பதற்காக மனைவியின் முந்தானையை பிடித்துக்கொண்டு அலைபவர்கள் எல்லாம் லட்சிய பு ருஷர்களாகி விடுவார்களா ?இல்லை காரில் இன்னொரு பெண்ணை ஏற்றிகிட்டு
போறதாலே என் கணவரை அயோக்கியர்னு நீ முடிவு செஞ்சுட்டா ..உலகத்திலே யோக்கியர்களே மிஞ்சமாட்டார்கள் .''
''அப்படின்னா ''நான் சொல்றதை நீ நம்பலை ''
'' காரில் போனது உண்மைதான் ,ஆனால் .நீ சொல்றது தான் தப்பு ..ஏன் நீயே அவசரத்துக்கு
ஒரு டாக்சியில் தனியா போறே ,அப்பா நீயும் ,டாக்சி டிரைவரும் தான் இருக்கீங்க உடனே நீ டிரைவருடன் தனியா போனதாலே உன்னை கெட்டவள்னு முடிவு செஞ்சுட முடியுமா/?
ஒரு காலத்திலே ஆண்களுடன் பெண்கள் பேசுவதே தப்புன்னு பேசப்பட்டது .இப்ப ஆணும் பெண்ணும் சேர்ந்து உட்கார்ந்து வேலை பார்க்கிற காலகட்டம் ...கணவர் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் சுதந்திரம் கொடுத்து பிறர் சுதந்திரத்தை மதிச்சு வாழற உலகம் இது .ஒரு பெண்ணுக்கு உதவுறதை கூட உன்னால தப்பாதான் புரிஞ்சுக்கமுடியுமா
ஏண்டி நீ இப்படி இருக்கே ,உன்னால நல்லதையே நினைக்கமு டி யாதா ?போடி போ ய் வேறு வேலை இருந்தா பாரு ''
சுனிதா மூக்குடைபட்டு தான் வந்த காரியம் ஜெயிக்காத சோகத்தில் கழுத்தை தோளில்
இடித்து முகத்தை திருப்பிக்கொண்டு போனாள் .

சாமர்த்தியசாலி


வரதன் மிகவும் சாமர்த்தியசாலி க டையில் எந்த சாமான் எந்த கடையில் சீப்பாக இருக்கிறதோ அங்கேதான் வாங்குவான் அதிலும் எக்ச்பெயரி தேதி பார்த்துத்தான் வாங்குவான் ,அவன் அடிக்கடி
ஒரு குறிப்பிட்ட ஹோட்டலில்தான் காப்பி குடிபான் .அன்று என்னையும் தொந்திரவு பண்ணி அழைத்துப்போனான்
வேறுவழியின்றி நானும் இர்வருக்கும் காப்பி ஆர்டர் பண்ணினான் சர்வர் காப்பி கொண்டுவந்து
வைத்துவிட்டு போனான் பேசிக்கொண்டே காப்பியை பாதி குடித்திருப்பான் திடீரென சர்வரை '
கூப்பிட்டான்
' சர்வர் வந்தான் '' என்னப்பா டிகாஷன் அதிகமா இருக்கே ,கொஞ்சம் பால் கொண்டுவா ,நானே நண்பரை அழைத்து வந்திருக்கேன் இன்னைக்குப்பார்த்து இப்படி சொதப்பிட்டீங்கலெ போ பால் கொண்டு வா ''என்று சத்தமிட்டான்
சர்வரும் ஒரு வித எரிச்சலோடு கொண்டுவந்து கொடுத்தான் .உங்களுக்கு பால் தரட்டுமா என்று என்னை கேட்டார் .நான் சொன்னேன் ''ஏன் காப்பி கரெக்ட் டாககத்தான் இருக்கு ,உங்களுக்கு கசக்கிறதா? ''கேட்டேன்
''அட நீங்க ஓண்ணு பதினைந்து ரூபாய் சொல்றான் ஒரு காப்பி யை அளவு மட்டும் அதே அளவுதான் அதான் கொஞ்சம் பால் கேட்டு வாங்கினேன் ,ஒவ்வொரு நேரம் பால் சர்க்கரை ,டிகாஷன்
இப்படி மாறி மாறி கேட்டு காப்பி அளவை அதிகப்படுத்தி விடுவேன் எப்படி என் ஐடியா ?பெருமையாக கேட்டான் அவன் சாமர்த்தியத்தை மெச்சுவதா அல்பம் என்று திட்டுவதா?என்று புரியாமல் சிரித்து வைத்தேன் ,
பிறகு ஒருநாள் --
நான் வேண்டாமென்று சொன்னாலும் கேட்காமல் ஹோட்டல் அழைத்துப்போனான் ,எனக்கு அவன் உடன் போவதே சங்கடமாக இருந்தது ,ஏனெனில் இவன் சில்லித்தனமாக நடந்து ஹோட்டல் காரன் என்னையும் அல்பமாக நினைத்து விடப்போகிரானே என்று , வரதன் விடவில்லை
.ஹோட்டலில் அமர்ந்ததும் இங்கே வெங்காய ஊத்தப்பம் சூப்பரா இருக்கும் என்று சொல்லி ஆர்டர் கொடுத்தான் .ஊத்தப்பம் வந்தது .நான் பயந்தது மாதிரியே அவன் சர்வரை கூப்பிட்டான் ,அதே சர்வர் வந்தான் . ''இந்தபாரு ,ஊத்தப்பம் வேகவே இல்லை ,வேறு கொண்டு வா‘’ஆணையிட்டான்
சர்வர் என்னைப்பார்த்து ''ஏன் சார் ஊத்தப்பம் வேகலையா ?''கேட்டார் எனக்கு வைத்தது வெந்திருக் கே ''
''எனக்கு வைத்தது வேகவில்லையே ''என்றான் வரதன்
''அப்படியா ,சரி இதோ வரேன் சாரி ''என்ற சர்வர் வேறு கொண்டு வந்து வைத்தான் 'சாப்பிட்டுவிட்டு இரண்டு காப்பி ஆர்டர் செய்து குடித்துவிட்டு எழுந்தான் .பில் வந்தது .மூன்று ஊத்தப்பத்துக்கு பில் போடப்பட்டிருந்தது .வரதனுக்கு கோபம் வந்து சப்தமிட்டான் சர்வரிடம் .
சப்தம் கேட்ட முதலாளி விவரம் கேட்டார் வரதன் சொன்னான் ,அதை கேட்ட முதலாளி ''ஏம்பா தினம் வர கஷ்டமருகிட்ட இப்படியா நடந்துப்ப ''கேட்டார்
உடனே சர்வர் சொன்னான் ''சார் இவர் சாப்பிட்ட பிளேட்டை நானின்னும் கிளீன் பண்ணல அவர் வேகலைன்னு சொன்ன அந்த ஊத்தப்பம் எங்கேன்னு கேளுங்க சார் '' என்றான் சர்வர்
விழித்தான் வரதன் உடனே சர்வர் சொன்னான் ''இவர் எப்பவுமே இப்படித்தான் சார் காப்பி கொடுத்தா ஏதாவது காரணம் சொல்லி இரண்டு இரண்டா சாப்பிட்டுவிட்டு ஒன்றுக்கு மட்டும் காசு தருவார் அதான் இன்னக்கு பிளேட்டை அப்படியே வைத்திருந்தேன் சார் ''சர்வர் சொன்னதும் நான் குன்னிபோயிட்டேன்
நானே தவறு செய்தமாதிரி ச்சே இன்மேல் இவனுடன் போகக்கூடாது என் தீர்மானித்து விட்டேன்
ஹோட்டல் முதலாளி ''படிச்சவங்களே இப்படி நடந்துகிட்டா ,...நான் என்னத்தை சொல்றது ?இன்னைக்கு
பரவாயில்லை இனிமேல் இப்படி செய்யாதீர்க ள் ''என்றார்
வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு புரிந்துகொண்டிருப்பான் வரதன்
தன்னை சாமர்த்தியசாலின்னு நினைச்ச வரதன் சர்வரின் சாமர்த்தியத்தை கண்டு மலைத்து விக்கித்து ,அவமானப்பட்டு தலை குனிந்தபடியே பில்லை கட்டிவிட்டு வெளியேறினான்

மாணவ பக்தி


''என்னங்க ,பெட்டிக்கடைக்குத்தானே போறீங்க ,அப்படியே பச்சை மிளகாய் இருந்தா வாங்கிட்டு வாங்க சட்னி அரைக்கணும் ''கட்டளை இட்டாள் அவர் அன்பு மனைவி
தெரு கடைசியில் உள்ள பெட்டிக்கடையில் தனக்கு பிளேடும் ,மனைவிக்கு பச்சை மிளகாயும்
வாங்கிகொண்டிருக்கும் போது அங்கு வந்த அவர் வகுப்பு மாணவன்
'' ஒரு மஞ்ச கொடுங்க '' என்று வாங்கி கொண்டு போனான்
அந்த ஆசிரியரே மறுப்பேதும் சொல்லாமல் காசை கடைக்காரரிடம் கொடுத்தார்
எனக்கு வியப்பாக இருந்தது ''என்ன சார் அவன் வந்து அதிகாரமா வாங்கிட்டு மரியாதைக்கு கூட கேட்காம போறான் நீங்க காசு கொடுக்கிறீங்க ஏன் ''கேட்டேன்
என்ன செய்ய சொல்றீங்க? நானும் என் மனைவியும் மாதம் எண்பதாயிரம் சம்பாதிக்கிறோம் ,அதை பார்த்து இந்த ஊரே எங்களைப்பார்த்து எரியுது .ஆனால் என் நிலைமை ......என் வகுப்பிலே பதினேழு பையன்கள் தான் இருக்கிறார்கள் ,அவர்களை காலையிலே ஒன்று கூட்டி என் காரிலேயே அழிச்சுகிட்டு வந்தாத்தான் பள்ளிக்கூடமே வருவாங்க ,ஒருநாளைக்கு நான் பள்ளிக்கூடம் போகலைனா கூட ,அவங்களும் வரமாட்டாங்க போய் கேட்டா அவங்க பெற்றோரே நீங்க வரலை அதான் ஏன் போகணும்னு இருந்திட்டாங்க கார் வரலைன்னா எப்படி வருவாங்க ? இவனுங்களை அதட்டவோ ,அடிக்கவோ முடியாது ,அவனுங்க வரலன்னா என்னை இந்த ஊரை விட்டே மாற்றிவிடுவாங்க ,நான் வெளியூரில் போய் கஷ்டப்படனும் என் வீக்னசை தெரிஞ்சுகிட்டு என்னை மிரட்டியே கடையிலே சாமான் வாங்குவாணுக மாதம் இவனுளுக்கே ஆறாயிரம் செலவு ஆகுது செலவை பார்த்த முடியுமா ? நான் மறுத்தேனா என்னை அடிச்சாரு ஜாதியை சொல்லி திட்டினாருன்னு புகார் பண்றாங்க எல்லாம் தலைவிதி ஆசிரியர் தொழிலுக்கே வந்திருக்க கூடாது என் வயித்தெரிச்சலை ஏன் சார் கேட்கிறீங்க >''புலம்பியபடியே போனார் .
இங்கே என்ன நடக்குது குரு பக்தி க்கு பதிலா மாணவ பக்தில்ல நடக்குது கலி காலம்தான் வேறு என்ன சொல்ல ?

செத்தவன்


'' சார் , பீச் ஓரமா ,ஒரு பிரேதம் கிடக்கு சார் ''ஒரு மீனவன் சொன்னான்
''தலைவலி ஆரம்பிச்சுட்டா ? யோவ் ,204 போய் பாருய்யா ,கழுத்தறுப்பு '' எஸ் ,ஐ விரட்டினார்
கான்ஸ் டபிள் போய் பார்த்தார் ,பின்பு போனில் பேசினார் ''சார் 60 வயதுக்கு மேல இருக்கும் போல இரவே செத்திருப்பார் போல இருக்கு ,பாடியை எடுத்துகிட்டு வந்துடவா ? நீங்க வரீங்களா ?
எஸ் .ஐ ஜீப்பில் புறப் பட்டார் .அங்கு நின்ற எல்லோரிடமும் கேள்வி கேட்டார் ,யாருக்கும் அவர் யாரென்றே தெரியவில்லை , வெளியுரா இருக்கும் என்று சொன்னார்கள் அங்கு நின்ற மக்கள் .எஸ் ,ஐ .ஆம்புலன்ஸ் க்கு போன் பண்ணி பாடியை எடுத்துப்போனார்கள் .மார்ச்சுவரியில் போட்டு விட்டு வந்தார்கள் .
அப்பொழுது ஒருவன் வந்தான் ''சார் அந்த ஆள் செத்துக்கிடந்த கொஞ்ச தூரத்தில் இந்த போன் கிடந்தது ''என்றான்
எஸ் ஐ .அதை ஆராய்ச்சி செய்தபோது ,,.மூன்று பெண்கள் மாறி மாறி பேசி அழுதார்கள் ,அது தங்கள் கணவருடைய செல் என்று சொல்லி .உடனே புறப்பட்டு வர சொன்னார் எஸ் ஐ .
அவருடைய மூன்று மனைவி மார்களும் அலறி புடைத்து ஓடி வந்தனர் .ஸ்டேஷனனுக்கு ,
ராணுவ வீரரா உங்கள் கணவர் ''எஸ் ஐ கேட்டார் .இங்கு எங்கே வந்தார் ?''
''அவசரமா சென்னைக்கு போகணும் ,அங்கே ஒரு நண்பரை பார்க்கணும் என்று சொல்லி வந்தார் ''
'' ஊரிலிருந்து வந்து உங்ககிட்ட பேசினாரா ?''
மூன்று நாளைக்கு முன் பேசினார் ,நேற்று நாங்க போன் பண்ணினபோது சுவிச் ஆகியிருந்தது சார் ''
''204 இவங்களை அழைசுகிட்டு போய் காட்டு யா''ஆணையிட்டார் .
கான்ஸ்டபில் அழைத்துப்போனார் , சிதைந்து கிடந்த உருவத்தைப்பார்த்து மூன்று பேரும் ஒப்பாரி
வைத்தனர் .
'' இந்தாபாருங்க ,பிணத்தை எடுத்துகிட்டு போக ஏற்பாடு பண்ணுங்க ,அதை விட்டு இங்கேயே உட்கார்ந்து ஒப்பாரி வைச்சா என்ன அர்த்தம் ''கான்ஸ்டபில் கத்தினார் .
போன் மூலம் விவரம் தெரிந்து எஸ் ஐ. ''நல்ல வேளை போன் கிடைத்தது ,இல்லா விட்டால் பிணத்தை வைச்சுகிட்டு தீபாவளி சமயத்தில் யார் லோல் படறது ''நிம்மதியானார்
''சார் ,சார் ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கணும் சார் '' என்று ஒருவர் வந்தார்
''என்ன கம்ப்ளைன்ட் ? ''
''சார் என்னோட செல் போனை காணோம் சார் அது விஷயமா தான் சார் ''
கான்ஸ்டபில் விவரம் கேட்க ---ஆஹா இந்த ஆளைத்தான் செத்துப்போனதாக நினைத்தோமா ?
உடனடியாக ஆஸ்பிடலுக்கு போன் போட்டு விவரம் சொல்ல அந்தமூன்று பெண்களும் ஓடி வந்து
கணவனைப்பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்க ----கான்ஸ்டபிளும் ,எஸ் ஐ யும் அந்தபினம்யாருடையது என்று கண்டு பிக்கவேண்டுமே என்று தலையில் கை வைத்து அமர்ந்தனர் .

செக்


மூர்த்தி ,அரசாங்கத்துக்கு நாற்காலிகள் சப்ளை செய்திருந்தான் , சம்பத்தப்பட்ட அதிகாரியிடம் அதற்கான செக்கை வாங்க புறப்பட்டான் ,
''வாங்க சார் ,செக் வாங்கத்தானே வந்தீங்க ,பாங்கிலே பணம் இல்லியாம் ,இரண்டுநாள் ஆகும்னு
சொல்லிட்டாங்க ,இரண்டு நாள் கழித்து வாங்க ''என்றார் அதிகாரி
எரிச்சலுடன் மூர்த்தி புலம்பிக்கொண்டே போனான் ..
என்னய்யா இது அந்த மூர்த்தி விவரம் புரியாம இருக்கான் ,வெறும் கையை வீசிக்கிட்டு வந்தா
கொடுத்துருவோமா '' கிளார்க்கிடம் சொன்னார் அதிகாரி ..
கிளார்க் சிரித்துக்கொண்டார்
இரண்டு நாள் கழித்து ----
மூர்த்தி போனான் அதிகாரி யை பார்க்க -இன்றும் அவன் கையில் ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொண்டார் அதிகாரி
''வாங்க மூர்த்தி ,உட்காருங்க ,இதோ செக் போட்டு தரேன் ''சொல்லிவிட்டு செக்கில் எழுதி கொடுத்தார் ,.மூர்த்தி சந்தோஷமாக புறப்பட்டான்
பாங்கில் -- ''என்ன சார் ,டேட் போட மறந்துட்டாங்களே ,சாரி போட்டு வாங்கிட்டு வாங்க ''என்றார் மானேஜர்
அட ,கடவுளே என்ன மானேஜர் இவர் ,இப்படி கணிக்காம..ச்சே ஒரு செக்கிற்கு எத்தனை வாட்டி அலையுறது அலுத்துக்கொண்டே போனான்
''டேட் போடலையா சாரி இங்க கொண்டாங்க ''போட்டு கொடுத்தார் உள்ளுக்குள் சிரிப்புடன்
மறுபடி மானேஜர் சொன்னார் ;''என்னசார் இது ,இப்படி கொண்டு வந்தா நான் எப்படி பணம் கொடுக்கிறது ,என் வேளையிலே காலியாயிடும் ,அமௌண்ட் சரியா எழுதப்படலே ,வேற செக் வாங்கிட்டு வாங்க '' விரட்டினார்
ஆத்திரம் வந்தது மூர்த்திக்கு ,''இதப்பாருப்பா ,உன் பிடிவாதம் இதிலே செல்லாது ,நீ வேணா லஞ்சம் வாங்காம இரு ஆனால் இவனுவு வாங்காம விடமாட்டாங்க ,பேசாம ஒரு ஐநூறோ ,அறுனூரோ கொடுத்து வேலையை பார்ப்பியா ,அதை விட்டு நூறு தரம் அலையுவியா ''நண்பன் சொன்னான்
எரிச்சலுடன் ஐநூறு ரூபாயை எடுத்துக்கொண்டு அதிகாரியிடம் போனான்
''சார், இந்தாங்க ,என்னால இனிமேல அலைய முடியாது , வீடு வேற தூரம் ,இப்பவாவது ஒழுங்கா
செக் போட்டு எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு கொடுங்க ''என்றான் மூர்த்தி
இப்பவாவது புரிந்ததே என்ற ஏளனப்பார்வையுடன் . மூர்த்தி கொடுத்த பணத்தை வாங்கி மேஜை மீது வைக்கவும் போலிஸ் வரவும் சரியாக இருந்தது
எனக்கா செக் வைக்கிறே நான் வைச்சேன் பாரு செக் எப்படி ?என்று இறுமாப்புடன் பார்த்தான் மூர்த்தி அதிகாரியை ,

மூர்த்தி ,அரசாங்கத்துக்கு நாற்காலிகள் சப்ளை செய்திருந்தான் , சம்பத்தப்பட்ட அதிகாரியிடம் அதற்கான செக்கை வாங்க புறப்பட்டான் ,
''வாங்க சார் ,செக் வாங்கத்தானே வந்தீங்க ,பாங்கிலே பணம் இல்லியாம் ,இரண்டுநாள் ஆகும்னு
சொல்லிட்டாங்க ,இரண்டு நாள் கழித்து வாங்க ''என்றார் அதிகாரி
எரிச்சலுடன் மூர்த்தி புலம்பிக்கொண்டே போனான் ..
என்னய்யா இது அந்த மூர்த்தி விவரம் புரியாம இருக்கான் ,வெறும் கையை வீசிக்கிட்டு வந்தா
கொடுத்துருவோமா '' கிளார்க்கிடம் சொன்னார் அதிகாரி ..
கிளார்க் சிரித்துக்கொண்டார்
இரண்டு நாள் கழித்து ----
மூர்த்தி போனான் அதிகாரி யை பார்க்க -இன்றும் அவன் கையில் ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொண்டார் அதிகாரி
''வாங்க மூர்த்தி ,உட்காருங்க ,இதோ செக் போட்டு தரேன் ''சொல்லிவிட்டு செக்கில் எழுதி கொடுத்தார் ,.மூர்த்தி சந்தோஷமாக புறப்பட்டான்
பாங்கில் -- ''என்ன சார் ,டேட் போட மறந்துட்டாங்களே ,சாரி போட்டு வாங்கிட்டு வாங்க ''என்றார் மானேஜர்
அட ,கடவுளே என்ன மானேஜர் இவர் ,இப்படி கணிக்காம..ச்சே ஒரு செக்கிற்கு எத்தனை வாட்டி அலையுறது அலுத்துக்கொண்டே போனான்
''டேட் போடலையா சாரி இங்க கொண்டாங்க ''போட்டு கொடுத்தார் உள்ளுக்குள் சிரிப்புடன்
மறுபடி மானேஜர் சொன்னார் ;''என்னசார் இது ,இப்படி கொண்டு வந்தா நான் எப்படி பணம் கொடுக்கிறது ,என் வேளையிலே காலியாயிடும் ,அமௌண்ட் சரியா எழுதப்படலே ,வேற செக் வாங்கிட்டு வாங்க '' விரட்டினார்
ஆத்திரம் வந்தது மூர்த்திக்கு ,''இதப்பாருப்பா ,உன் பிடிவாதம் இதிலே செல்லாது ,நீ வேணா லஞ்சம் வாங்காம இரு ஆனால் இவனுவு வாங்காம விடமாட்டாங்க ,பேசாம ஒரு ஐநூறோ ,அறுனூரோ கொடுத்து வேலையை பார்ப்பியா ,அதை விட்டு நூறு தரம் அலையுவியா ''நண்பன் சொன்னான்
எரிச்சலுடன் ஐநூறு ரூபாயை எடுத்துக்கொண்டு அதிகாரியிடம் போனான்
''சார், இந்தாங்க ,என்னால இனிமேல அலைய முடியாது , வீடு வேற தூரம் ,இப்பவாவது ஒழுங்கா
செக் போட்டு எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு கொடுங்க ''என்றான் மூர்த்தி
இப்பவாவது புரிந்ததே என்ற ஏளனப்பார்வையுடன் . மூர்த்தி கொடுத்த பணத்தை வாங்கி மேஜை மீது வைக்கவும் போலிஸ் வரவும் சரியாக இருந்தது
எனக்கா செக் வைக்கிறே நான் வைச்சேன் பாரு செக் எப்படி ?என்று இறுமாப்புடன் பார்த்தான் மூர்த்தி அதிகாரியை. . .

நீயுமாம்மா..... தங்க மங்கை---டிசம்பர் --2013


மாளவிகா பிறந்த வீடு வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன
அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை .அப்ப்டி ஒரு மாற்றங்க்ள்,பெருமூச்சுகள்.எதிகாலத்தைப் பற்றி கற்பனைசெய்து
கூட பார்க்கமுடியாத அளவு இருட்டு ,குழ்ப்பங்கள்.....
இத்தனைக்கும் அவ்ளும்சரி ,க்ணவன்கருணாவும் சரிஉருகி ,உருகி
காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டார்க்ள்,திருமணம் ஆகி
ஓராண்டு கூட நன்றாக வாழ்வில்லை .கருணா ,மாளவிகாவை திருப்பி அனுப்பி விட்டான் தாய் வீட்டுக்கே .என்று தாய் வீட்டு வந்தாளோ அன்றே அவ்ள் சொந்த வீட்டிலேயே இர்ண்டாம் தர
மனுஷி யாகி விட்டதை உன்ர்ந்தாள் .சொந்ததாய்க்கூட அவ்ளுக்கு அனுதாபம் காட்டினாலேதவிர அவ்ளை பாராட்டவில்லை,சீராடவும் இல்லை .’
‘’அவ்னைத்தான் திருமணம் செய்துக்குவேன்னு என்னையே எதிர்த்துப் பேசினே,இப்போ அதை தொலைச்சுட்டு வந்து நிற்கிறே அந்த பிள்ளை நல்லவனாகத்தான் தெரிகிறான் ,அவ்னுடன் அனுசரிச்சு வாழ்றதை விட்டுட்டு .....வந்து நிற்கிறே’’
‘’என்னம்மா சொல்றே,அவ்ர்தானே என்னை போகச்சொன்னார்?’’

‘போகச்சொன்னா வந்துடுவியா? திருமணம்கிறதை நீயாத்தானே தேடினே , நீபாட்டுக்கு தொலைக்காட்சித் தொடரில் நடிச்சுகிட்டு ,காசு வசதின்னு நிம்மதியாஇருந்தே ,புகழோட இருந்தே
இத்தனை புக்ழோட இருக்கிற உனக்கு த்ருமண வாழ்க்கை நிறைவா அமயணுமேன்னு நான் பயந்தேன் ,ஆனால் நீபிடிவாதம்
பிடிச்சே நான் தடுக்கலே பண்ணிகிட்டே அப்போ அவன் ஆசைப்படித்தானே நீ நடந்துக்கனும் ,உன்க்கு நாம ஒரு பிரபல நடிகை என்கிற க்ர்வம் இல்லாம தாழ்ந்துபோயிருந்தீன்னா அவ்ன் உன்னை
அனுப்பியிருக்கமாட்டான் ,னீ வீராப்பு காட்டினா ,திமிர்ன்னு நினைப்பாஙக்ளா இல்லையா?.கெளரவம் ,புகழ்ங்கிற தலைக்கனம்
இருக்கும்போது நீதாழ்ந்துதான் போயிருக்கணும் அவ்தாண்டி வாழறபொண்ணு ‘’
‘’அம்மா நீயுமாம்மா....என்னை புரிஞ்சுக்காம பேசுறே வசதியே இல்லாத அவ்ர் வீட்டிலேனான் இத்தனை நாள் இருந்திருக்கேனே
,என் ஆடம்பரத்தை காட்டலியே ,பழச்சாறும் ,பழமுமா தின்ன நான் ,அவ்ர் வீட்டிலேபழைய சோறு சாப்பிட்டேன் அது பற்றி
எந்த குறையும் யாரிடமும் சொன்னதில்லையே ,அவ்ர் எப்படி இருக்கனும்னு சொன்னாரோ அப்படித்தான் இருந்தேன் எவ்வள்வோ
விட்டுக் கொடுத்துத்தான் வாழ்ந்தேன் ஏன்னா காதலிச்சு கல்யாணம் செய்துகிட்டதாலே,அது தெரியுமா உனக்கு ?’’
அப்புறம் ஏண்டி அனுப்பினார்?’’
‘’ஆடம்பரமா வாழ்ந்த உன்னாலே எப்படி அடக்கமா வாழமுடியும்னு
என்னை சந்தேகப்படுகிரார் நான் அடக்கமா இருப்பதை நடிப்புன்னு
சொல்றார் ,உன் நடிப்பெல்லாம் தொடரோட நிறுத்திக்க ,சாதாரணபெண்ணுன்னா ,அது வேண்டும்,இது வேண்டும்னு சண்டை போட்டிருப்பா .. நீ உண்மையா இல்லேன்னு
சொல்றார் நான் என்ன செய்ய/’’அழுதாள் மாளவிகா
‘’இப்படி ஒரு நிலை வரும்னு தெரிஞ்சிருந்தா நீதிருமணமேசெஞ்சுக்காம இருந்திருக்கலாமே நீ பாட்டுக்கு நடிச்சுகிட்டு நிம்மதியா இருந்திருக்கலாமே ,காதல் கீதல்னு மாட்டி இப்பவாழாவெட்டியா வந்து நிற்கிறதை பார்க்க என்னால தாங்க்முடியலடி ..’மகளை கட்டிக்கொண்டு அழுதாளந்தத்தாய்
‘’காசு பண்ம் கேட்டு அடிப்பார்கள் பார்த்திருக்கிறாள் அடக்கமா இல்லைன்னா திட்டுவார்கள் இவன் என்னடாவென்றால்...ஏன் அடக்கமா இருக்கிரேன்னு ...ஒரு வேளை சைக்கோவா இருப்பானோ
புரியவில்லை ....ஏன் இப்படி? நினைத்து நினைத்து அழுதாள் மாள்விகா,,,
டிசம்பர் 2013 தங்கமங்கை இதழில் வந்தது

வீடு டி ,வி. ஆர் நினைவு சிறுகதை போட்டியில் ஆற்தல் பரிசு பெற்ற கதை


உழவர் சந்தையில் காய்கறி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு த் திரும்புகையில் தான் அந்த பழக்கப்பட்ட குரல் கேட்டது .
‘’ராமசாமி கொஞ்சம் நில்லு ,ஒரு அவசர விஷயம் ‘’’....கூறிக்கொண்டேவந்தார் ரெங்கபாஷ்யம் .
‘’என்னப்பா அப்படி தலைபோற அவசரம் ?’’
‘’’ராமசாமி , நீ வடக்கு வீதியில் விலைக்கு வீடு வேண்டும் என்று சொன்னாயே ,இப்ப கைகூடி வந்திருக்குடா ‘’’
‘’என்ன ரங்கா சொல்றே?’’
‘’ஆமாண்டா உன் வீட்டுக்கு பக்கத்து வீடு விலைக்கு வருகிறது ,வீட்டு ஓனர் சிதம்பரத்தில் இருக்கிறார் ,அவர் தன் வீட்டை விற்கப்போகிறாராம் ,அதான் உன்கிட்டே சொல்லலாம் என்று ஓடி வந்தேன் ‘’.
‘’அதுசரி ரங்கா ,அவர் என்ன விலை எதிர்பார்ப்பாரோ ,என் கையில் அவ்வளவு பணம் இருக்குமான்னு தெரியலையே’’
‘’ஊருல சதுர அடி என்ன விலையோ ,அதுதான் கேட்பாங்க, நீ இங் கேயே உட்கார்ந்து யோசனை பண்ணுனேன்னா சரியா வராது ,வீடு கை நழுவிடும் ,ஏன்னா அவர் உங்க இனம்தான் போய் பேசிப்பாரு ,பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு செய்துக்கலாம் ,கைமாத்தா
உன் மைத்துனர் கொடுக்கமாட்டாரா? பாங் கில் இருக்கிறார் ,குறைந்த வாடைகைக்கு உன்னை இப்ப குடி வெச்சிருக்கிறாரே ஹெல்ப் பண்ணமாட்டாரா என்ன?’’.
‘’ நீ சொல்றது வாஸ்தவம்தான் ,பார்ப்போம் ‘’ விடை பெற்றுக்கொண்டார்
வீட்டுக்கு வந்ததும் விஷயத்தை சாவித்திரி யிடம் சொன்னார் .’
‘’என்னங்க ,எப்ப்டியாவது அந்த வீட்டை வாங்கிடனும்ங்க ,,சாமி சன்னதி தெருவா இருக்கு , நாளைக்கு அண்ணன் ரிடையர் ஆகி இங்க வந்துடுவார் ,கடைசி காலத்தில் ஒருத்தருக்கொருத்தர் துணையாகவும் ஆகிடும்ல ‘’’’
‘’எல்லாம் சரி சாவித்திரி ,பணம் வேண்டாமா ?’’
‘’ நகை நட்டை வெச்சாவது வாங் கிட வேண்டியதுதான் ,பத்தாட்டி அண்ணன் பாங்கில லோன் போட்டுக்குவோம் , நீங்கயோசனை பண்ணாதீஙக’, புறப்படுங்க’’
சாவித்திரி சொல்லுவதும் சரிதான் ,அவளே நகைகளை வைக்க ஒப்புதல் கொடுத்து விட்டாள் ,மீதியை எப்படியாவது சமாளித்து விடலாம் .
ஐயாயிரம் ரூபாயை அட்வான்ஸ் பணமாக கொடுக்கு எண்ணி எடுத்துக்கொண்டு சிதம்பரம் கிளம்பினார் ராமசாமி .மிகவும் கஷ்டப்பட்டு விலாசம் தேடி கண்டு பிடித்து வீட்டை அடைந்தார்
காலிங் பெல்லை அழுத்தினார்
ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து கதவை திறந்தார்
‘’யார் நீங்க? என்ன வேணும் ?’’
‘’ நான் மன்னையிலிருந்து வருகிறேன்,வடக்கு வீதியிலுள்ளவீட்டை விற்கப் போறதா ரங்கபாஷ்யம் சொன்னார் ,அதான் ..’’
‘’அப்படியா உள்ளே வாங்க’’என்றார்
ராமசாமி உள்ளே போய் அம்ர்ந்தார்
‘’என்ன சாப்பிடுறீங்க? ஒய்ஃப் வெளியில போயிருக்கிறாள்’’
ஒண்ணும் வேண்டாம் சார் ,இப்பதான் காப்பி சாப்பிட்டுட்டு வந்தேன் ‘
‘’உங்க சொந்த ஊர் மன்னார் குடியா?’’வீட்டு ஓனர் கேட்டார்
‘’இல்லை சார் சுற்றுவட்டார பள்ளிகளில் வேலை பார்க்கிறேன் ,ஆனால் இப்போது குடியிருப்பது என் மைத்துனர் வீட்டில் தான் . நீங்கள் விற்கப்போகும் வீட்டிற்கு பக்கத்தில்தான் இருக்கிறது ,’’
‘’ஓ,அப்படியா? என் பிரதர் கூட மன்னார்குடியில்தான் ஷாப் வைத்திருந்தார் ,பெரிய கடைத்தெருவில் ‘’
‘’பெயர் ‘’
‘’ஆராவமுதன் ‘’
‘’சார் அவரை எனக்கு நன்றாகத்தெரியும் ,அப்ப நாம ஒரே இனம்தான் ,ரொம்ப நல்லதா போச்சு ‘’ராமசாமி குதூகலமானார் .
‘’எனக்கும் ஒரு திருப்தி , நம்மளாவாக்கே கொடுப்பதில் ‘’
‘’என்ன விலை எதிர்பார்க்கிறீஙக?’’
‘’ஊர் விலை உங்களுக்குத்தெரியாதாஎன்னா ? ஐயாயிரம் சதுர அடி ,விலையை கணக்கு போட்டுப்பார்த்துக்குங்க ‘’என்றார் நாராயணன் .
‘’சார் நீங்கசொல்றதும் நியாயம் தான் ,ஆனால் ,உடனடியாக என்னால் அவ்வளவு தொகை புரட்டமுடியாது ,கொஞ்சம் டயம் கொடுத்தீஙகன்னா ,செட்டில் பண்ணிடுவேன் ‘’ என்றார் ராமசாமி வினயமாக ,
அப்பொழுது வெளியிலிருந்து வந்த பெண்ணைப் பார்த்ததும் திடுக்கிட்டுப்போனார் ராமசாமி அந்த பெண்ணும் தடுமாறி திகைத்துப்போனாலும் ,முதலில் சுய உண்ர்வு பெற்றவள் அவள்தான்
அவள் கல்யாணி .....
‘’சார் எப்படி இருக்கீங்க ? அந்த பள்ளியில்தான் இருக்கீங்களா/?’’என்று மல்லிகை பூக்கள்மலர்வதுபோல் சிரித்துக்கொண்டே கேட்டாள் கல்யாணி
‘’இல்லம்மா ,அதற்கப்புறம் நிறைய ஊர் போய் இப்போ வடபாதி மங்கலத்தில் இருக்கிறேன் ,...இவர்.....’’
‘’என் கணவர்தான் , நீங்க பேசிகிட்டு இருங்க காபி கொண்டு வருகிறேன் ‘’என்று உள்ளேபோனாள்.
இப்படியொரு சந்திப்பு நிகழும் என்று ராமசாமி எதிர்பார்க்கவில்லை ,பாவம் கல்யாணி எவ்வளவு தூரம் கெஞ் சினாள் ஊரில் பெரிய வி ஐ ,பிக்கள் கூட அவளுக்காக சிபாரிசுக்கு வந்தார்கள் கேட்டாரா ராமசாமி ? அவர் மனதும் அன்றைய நிகழ்ச்சிகளை தொகுத்துப் பார்த்தது ......
கல்யாணி கணக்கில் வீக் ஒன்பதாம் வகுப்பில் அவள் முப்பது மார்க் எடுத்து பெயிலானாள், வகுப்பு ஆசிரியரான ராமசாமி நினைத்தால் ஒரு ஐந்து மார்க்போட்டு அவளை பாஸ் போட்டிருக்கலாம் ,ஆனால் போடவில்லை . நிறைய பேர் சிபாரிசு செய்தார்கள் ஏன் டி இ.ஒ கூட சிபாரிசு செய்தார் , நேர்மையான ராமசாமி யிடம் எதுவும் பலிக்கவில்லை .வயது கோளாறினால் ,கல்யாணி பல திரைப்படங்கள்பார்த்து இருந்ததினால் ,பின் விளைவுகள் பற்றி தெரியாததினாலும் ,தனியாக அம்ர்ந்திருந்த ராமசாமியிடம் போய் பல்லை இளித்துக்கொண்டும்,ஈஷிக்கொண்டும் நின்று தன்னை பாஸ் போடச்சொல்லிக் கேட்டாள் .
விசுவாமித்திரர்ரான ராமசாமி ,அந்த மேனகையின் செயலை வெறுத்து ,டோஸ் விட்டு வெளியேறினார் ,அவர் எதற்கும் சலனப்படவில்லை ,பலர் பணத்தை காட்டினார்கள் ,கல்யாணி பல்லைக்காட்டினாள் ,எதுவும் அவ்ர் நேர்மையை அசைக்கவில்லை .அடுத்து ,கல்யாணி அந்த ஊரை விட்டே போய் விட்டாள் ,அவமானம் தாங்காமல் .அதற்கப்புறம் ,இப்பொழுதுதான் பார்க்கிறார் கல்யாணியை ,மேற்கொண்டு படிக்க வைக்காமல் இரண்டு வருட்த்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டாராம் அவள்தந்தை ..,
அன்று அவளை அவமானப்படுத்திவிட்டவருக்கு எப்படி வீட்டை கொடுப்பாள் ?ஒரு பெண் உள்ளத்தின் கொதிப்பு எப்படி இருக்கும் என்பது அவருக்கு புரியாதாஎன்ன ?அவர் இப்பொழுது நிச்சயித்து விட்டார் ,வீடு அவருக்கில்லை என்று ,பெண்கள் பாம்பு மாதிரி அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க மாட்டார்கள் . நேரம் பார்த்து பழி தீர்த்துக் கொள்வார்கள் ,கல்யாணி மட்டும் விதி விலக்கா என்ன?’’
இனி இங்கிருப்பது வேஸ்ட் அதுதான் கணவரிடம் எல்லாவற்றையும் சொல்லியிருப்பாளே அதற்கு பிறகுமா ,தனக்கு வீட்டை கொடுப்பார்கள்?முள்மேல் அமர்ந்திருப்பதைப்போல் தவித்தார் ராமசாமி
காபி யை கொண்டுவந்து வைத்தாள் கல்யாயாணி ,ராமசாமிக்கு மன சாட்சி உறுத்தியது ,இருக்கையிலேயே நெளிந்தார்
‘’சார் ,உங்க நேர்மையையும் ,கண்டிப்பையும் பற்றி கல்யாணி சொல்லியிருக்கிறாள் ,அப்படித்தான் இருக்க வேண்டும் ,எனக்கு உங்க கேரெக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு ,கல்யாணி என்ன சொன்னாள் தெரியுமா .சாருக்கே வீட்டை கொடுத்திடுங்கன்னு சொல்லிவிட்டாள் ’’ நாராயணன்
சொன்னார் .
ராமசாமிக்கு காபி உள்ளே இறங்க மறுத்தது.இவர் என்ன கிண்டல் செய்கிறாரா இல்லை உண்மையில் சொல்கிறாரா?ஆடு திருடின கள்ளன் மாதிரி விழித்தார் அசடு வழிந்தார் .
கல்யாணி சிரித்தபடியே சொன்னாள்
;’’சார் நான் பாஸ் பண்ணியிருந்தால் என் லைஃபே மாறியிருக்கும் இவரை நான் பண்ணியிருக்கமாட்டேன் ,ஒரு நல்லவரை இழந்திருப்பேன் , நீங்க
பெயில் போட்டாலும் நான் வாழ்க்கையில் வெற்றியை அடைஞ்சிட்டேன் ,என் கணவர் என்னை படிக்க வெச்சு பட்டதாரியாக்கிவிட்டார் ,என்பிள்ளைகள் பெண் என்று நான் நல்ல வாழ்க்கை வாழ்கிறேன் உங்கபுண்ணியத்தில் . நீங்க இப்ப அட்வான்சா ஏதாவது கொடுங்க ,என் கணவர் சொன்ன தொகையை குறைச்சிருக்கேன் ,அதை உங்களால் எப்போ கொடுக்க முடியுமோ அப்பொ ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிக்கலாம் என்ன சொல்றீங்க ?’’கல்யாணி கேட்டாள் .
நா தழுதழுக்க ,’’ரொம்ப நன்றிம்மா ,உனக்குபெரிய மனசு , நீ நல்லாயிருக்கணும் .எனக்காக அமவுண்ட்டை குறைக்க வேண்டாம் ‘
‘’அப்போ உங்களுக்கு வீடு வேண்டாமா?’’
‘’என்னம்மா சொல்றே’?’’ பதறிப்போய் கேட்டார்
‘’அந்த வீட்டை உங்களைப்போன்ற நல்லவர்களுக்குத்தான் கொடுக்கணும்னு தீர்மானிச்சுட்டேன் ,அதான் சொல்றேன் , நீங் க நான் சொன்ன தொகையை கொடுங்க போதும் சார் ‘’
காலில் விழாத குறையாக,ரொம்ப நன்றிம்மா நன்றிசார் ‘’கண்களில் நீர்த்துளிர்க்க கூறிவிட்டு வெளி நடந்தார் .
நம் நேர்மைக்கு கிடைத்த பரிசுதான் இந்த வீடு என்று நினைக்கையில் பெருமையாக இருந்த்து ராமசாமிக்கு ,மகிழ்ச்சியோடு ஊர் புறப்பட்டார் ,மனைவியிடம் வீடு கிடைத்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள !!!!!

டிவியில் நான் பெற்ற பரிசுகள்


1 ஏவிஎம் நிம்மதி உங்கள் சாய்ஸ் ---ஆடியோ கேசட்
2விஜய் டிவியில் 'கண்ணாடி கதவுகள் ''விமர்சனத்திற்கு ---- 4 கிராம் தங்க காசு
3ஜெயா டிவியில் ஜாக்பாட் ஹோம் வின்நேர்ஸ் கேள்வி போட்டியில் -----5000 RS பட்டுபுடவை
4 மக்கள் டிவியில் - அரசியல் கேள்விகளுக்கு பதில் போட்டியில் ----- இரண்டு முறை இரண்டு வெள்ளி குங்குமச்சிமிழ்
5 கலைஞர் டிவியில் ''வைர நெஞ்சம் ''போட்டியில் ------500 பெறுமான பான்சி புடவை
6ராஜ் டிவியில் ' புத்தம் புது பாடல் ''போட்டியில் ------- பாரகன் செருப்பு ஒரு ஜோடி
7 ஜெயா டிவி குமுதம் இணைந்து நடத்திய ''அண்ணி''தொடர் பற்றிய விமர்சனத்திற்கு ------
2500 RS பட்டு புடவை ஒன்று
மற்றும்
இதயம் மந்த்ரா கடலை எண்ணெய் பற்றிய சிறந்த அனுபவத்திற்கு ------2500 RS பட்டு புடவை
அவள் விகடன் இதழ் நடத்திய ''தினம் ஒரு மிக்சி '' போட்டியில் ----பிரிமியர் மிக்சி குமுதம் நடத்திய ''பொன்னெழுத்து ''போட்டியில் ------ பவுன் மூக்குத்தி
அவள் விகடன் நடத்திய டிப் கேள்வி போட்டியில் ------1கிராம் தங்க நாணயம்
இதயம் நல்லெண்ணெய் நடத்திய ''இதயம் தொட்ட நல்லவர் ''போட்டியில் --- 500 RS பெருமான காப்பர் பாட்டம் பாத்திரம் மூன்று
இதயம் நல்லெண்ணெய் நடத்திய இதயத்தி பூரி வடை போட்டியில் ------- ராசாத்தி நெய்ட்டி
அவள் விகடன் நடத்திய '' தீபாவளி அனுபவங்கள் ''போட்டியில் -----ஸ்பிரே அயர்ன் பாக்ஸ்
அவள் விகடன் நடத்திய '' வாசகியர் கை மணம் '' போட்டியில் ------- 3ஜார் ப்ரீத்தி மிக்ஸ்யர் கிரைண்டர்
மங்கையர் மலர் நடத்திய '' பண்டிகை ஸ்பெஷல் ''போட்டியில் -----2000 RS பெறுமான சில்க் காட்டேன் புடவை
இவைகளை என் சாதனை என்றோ ,,பெருமைக்காகவோ எழுதவில்லை ,இதை பார்த்தாவது என் பேரக்குழந்தைகள் எல்லாபோட்டிகளிலும் செஸ் பாட்டு ,கதை என்று கலந்து வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலில் ,,,,,,,,
'
இந்த சிறுவர் பாடல் ’’குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை’’என்ற நூலில் இடம் பெற்றுள்ளது 172 பக்கங்கள் கொண்ட நூலில் என்னையும் சேர்த்து 166 கவிஞர்கள் இடம் பெற்றுள்ளனர், அழ,வள்ளியப்பா பிறந்த நாளான 7-11-2013 அன்று மாலை காரைக்குடி சிங்கர் மகாலில் வெளிடப்பட்டது இந்நூல் . தொகுதி -1 இந்த நூலை சென்னை மணிவாசகர் பதிப்பகம் அழகு மிளிர வெளியிட்டுள்ளது. நன்றி

வம்சம் --தங்க மங்கை--ஏப்ரல் --2014

‘’இதோ பாருங்க , நான் எங்க குடும்பத்தை விட்டுட்டு,என் சொந்த பந்தங்களைவிட்டுட்டு,காதலுக்காக உங்களோடு வந்திருக்கேன் , நீங்க ஒத்த ரூபாய் சம்பாதித்தாலும் எனக்கு கவலையில்லை ,ஆனால் அந்த ஒத்த ரூபாய் நேர்மையாய் சம்பாதித்ததாக இருக்கணும் புரியுதா ?’’வள்ளி சொன்னாள் .
‘’புரியுது வள்ளி , நான் இதுவரை அப்படித்தான் ஆட்டோஓட்டி பிழைக்கிறேன் ,இனியும் அப்படியே இருப்பேன் ‘’ என்று சொன்னவன் தான் வேணு,ஆனால் வள்ளி முழுகாமல் இருக்கிறாள் என்று தெரிந்ததும் வேணு வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள படாத பாடு பட்டான் .பாவம் வ்சதியான குடும்பத்தை சேர்ந்த வள்ளி காதலுக்காக கஷ்ட படக்கூடாது என்று நினைத்தான் வேணு ,உள்ளூரில் ஷேர் ஆட்டோவந்ததிலிருந்து ஆட்டோவிற்கு வருமானம் குறைந்தது
வேறு யாரையும் தெரியாது வேணுவுக்கு ,ரொம்ப குழம்பிப் போய் இருந்தபொழுது தான் அவ்ன் கூட்டாளி கணேசன் வேணுவை ஒரு கட்த்தல் காரனிடம் அறிமுகப்படுத்தினான் .
கடத்தல் காரன் சொல்கிறபடி கேட்டால் பணம் கிடைக்கும் . வேணு அதற்கு முதலில் சம்மதிக்கவில்லை வள்ளிக்குத் தெரிந்தால் கோபப்படுவாளென்று .ஆனால் கூட்டாளி ஏதேதோ சொல்லி அவனை மடக்கிவிட்டான் .பணத்தைப் பார்த்ததும் வேணுவும் மாறிப்போனான்.
வள்ளிக்கும் தனக்கும் பிறக்கப்போகும் குழந்தையின் எதிகாலத்தை எண்ணி ,கணேசன் சொல்லுக்குக் கட்டுப்பட்டான்
இது வள்ளிக்குத்தெரிந்தால் ....அவள் ஏற்பாளா ? ஒரே மனப்போராட்டம் வேணுவுக்கு வெகு சீக்கிரமே கடத்தல் காரனிடமிருந்து தகவல் வர ,ஓடினான் வேணு .
‘’இதோ பார் வேணு , நான் சொல்ற இடத்திலே, நான் சொல்ற அடையாளத் திலே ஒர்வன் கையில் பெட்டியுடன் நிற்பான் . நீன் இரட்டை விரலை காட்டினால் அவ்ன் உன்னிடம் பெட்டியை சேர்ப்பான் .அதை போலீசில் மாட்டாமல் சாமர்த்தியமாக என்னிடம் சேர்த்தால் உடனே யே ஐயாயிரம் ரூபாய் கொடுப்பேன் என்ன சொல்றே?’’
‘’சரி கணேஷ் ,போலீசில் மாட்டிக்கொண்டால் ..?’’
‘’மாட்டிக்கொண்டாலும் என் பெயரை சொல்லக்கூடாது ,மாட்டாம வர்றதுதான் உன் சாமர்த்தியம் உ.ன் மனைவி
வேறு முழுகாமலிருப்பதாக கேள்வி பட்டேன் .இந்த சமயத்தில் நல்ல ஆரோக்கியமான உணவு தர வேண்டாமா ? நான் உனக்கு நிறைய பண உதவி செய்கிறேன் பயப்படாதே ‘’
வேணுவும் தயங்கி தயங்கி பின் ஒத்துக்கொண்டு பெட்டியை சேர வேண்டிய இடத்தில் சேர்த்து பணத்தையும் பெற்றுக்கொண்டான் . அவ்ன் மனம் எல்லையற்ற மகிழ்ச்சியில் மிதக்க ,வள்ளிக்காக ஹார்லிக்ஸ் ,பழங்கள் வாங்கிக்கொண்டு வீட்டிற்க் விரைந்தான் .
வீடு பூட்டியிருக்க ,பக்கத்து வீட்டில் விசாரித்தான் .
வள்ளி மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக சொல்ல செக் அப்பிற்கு சென்றிருப்பாள் என நினைத்து ஆட்டோவில் விரைந்தான் .
மருத்துவ மனையில் படுத்திருந்த வள்ளியைப் பார்த்ததும் வேணு மிரண்டு போனான் .’’வள்ளி என்னாச்சுடா உனக்கு?’’
வள்ளி கண்களில் நீர் பெருக மவுனமாக இருந்தாள் .
அங்கு வந்த நர்ஸ் சொன்னாள் .
‘’அவங்க கர்ப்பம் கலைஞ்சுடுச்சு ‘’
‘’வள்ளி,, நர்ஸ் சொல்றது உண்மையா? எப்படி வள்ளி ?’’
துடித்தான் வேணு .
‘’இதப்பாருய்யா ,உன்னை காதலிச்ச குற்றத்திற்காக என் குடும்பத்தை விட்டு ஓடிவந்தேன் நான் ..ஏன்? நீனல்லவன் ,னேர்மையான்வன் என்று தானே? ஆனால் நீ பணத்திற்காக ,வசதிக்காக பாவமான செயலை செய்ய துணிஞ்சுட்டேன்னு நினைக்கும்போது என் மனசே உடைஞ்சுடுச்சுய்யா , நல்ல குடும்பத்தில் பிறந்தவன்னு சொல்றதுதான்யா எனக்கு பெருமை ,அப்படி நேர்மையில்லாத உனக்கு ஏன்யா குழந்தை ? கடத்தல்காரனுக்கு ,பிறந்த பிள்ளையின்னு நம்ம வம்சத்தையே தப்பா பேசறதை கேட்கணுமா நான் ? வேண்டாம்யா அதான் நம்ம குழந்தையை நானே அழிச்சுட்டு இங்க வந்து படுத்துட்டேன் ,இப்படியொரு வம்சம் தழைக்கணுமா?உன்னை கட்டிக்கிட்ட பாவத்துக்காக பிள்ளையை கொன்னுட்டு நானும் பாவத்துக்கு ஆளாயிட்டேன்
உயிரோடு இருந்தா அந்த குழந்தையும் மற்றவர்கள் கேலிக்கு ஆளாகி என்னையும் வசை பாடுமே ..அதான் ....’’கேவி கேவி அழுதாள் வள்ளி .
‘’ஐயோ ,,,வள்ளி .. நான் ஏன் இப்படி புத்தி கெட்டு போனேன் ? என்னை மன்னிச்சுடு வள்ளி ,...எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம் நான் திருந்த .அதற்காக,..பிள்ளையை...
கொன்றிருக்க வேண்டாம் ... எத்தனை கன வோடு வந்தேன் ..’அழுது புலம்பினான் என்னதான் அழுது புரண்டாலும் மரித்த கரு வருமா?
சரஸ்வதி ராசேந்திரன் --தங்க மங்கை ==ஏப்ரல் =2014

விரைந்து வா முருகா சண்முக கவசம் ஆன்மீக இதழ் --2014


வேலும் மயிலும் கொண்டவா
சேவற் கொடியுடன் வந்தவா
தணிகை மலையில் அமர்ந்தவா
கனிமயில் வள்ளியை மணந்தவா
அப்பனுக்கு பாடம்தந்த சுப்பனே
அழகர்மலை கோயில் அழகனே
சித்தத்தில் விழலையோ என் குரல்
தத்தளிக்கும் பக்த்ர்க்குத்துணை உன் அருள்

நம்பிக்கை வைத்துன்னைப் பூசித்தேன்
நாளுமுன் அருளுக்கு யாசித்தேன்
பச்சைமலை முருகனே பறந்துவா
பக்தர்குறை தீர்த்திடவே விரைந்துவா
சண்முக கவசம்-மாத இதழ்---- ஏப்ரல் 2014
ஆன்மீக இதழ்

திருட்டு


தன் எதிரில் வந்து நின்ற பெண்ணை ப்
பார்த்து ‘’என்ன வேணும் உஙளுக்கு ‘?
இன்ஸ்பெக்டர் கேட்டார்
‘’சார் என் கைபையை ஒருவன் பிக்பாக்கெட் அடிச்சிட்டான் சார் ,அதிலே ஆயிரம் ரூபாய் பணமும் ,என் atm கார்டும் இருக்கு சார் ,அதை கண்டுபிடிச்சு கொடுஙக சார் ‘’ ருத்ரா படபடப்போடு சொன்னாள்
‘’எந்த ஏரியாவில நடந்தது ?’’
‘’ தெற்கு வீதியில் சார் ‘’
‘’எத்தனை மணிக்கு நடந்தது ?’’
‘’பத்தரை மணி இருக்கும் சார் ‘’
‘’309 இவங்ககிட்டே ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதி வாங்கிக்க , எழுதி கொடுத்துட்டு போங்கம்மா தகவல் கிடைத்ததும் சொல்றோம் ‘’
‘’கொஞ்சம் சீக்கிரம் கண்டுபிடியுங்க சார் ’’
‘’சரி சரி நீங்க போயி முதலில் பாங்கில் விவரம் சொல்லி உங்க கணக்கை
ஸ்டாப் பண்ணச்சொல்லுங்க ’’
‘’சொல்லிட்டேன் சார் , அப்ப நான் வரேன் சார் ‘’விடை பெர்றுக்கொண்டாள்
ஒரு வாரம் ஆனது – போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எந்த தகவலும் வராததால் ஸ்டேஷனுக்குப்போனாள் .
‘’ஏம்மா திருடியவனை அடையாளம் காட்ட முடியுமா ?’’
‘’முடியும் சார் ‘’
‘’207 அந்த பிக்பாக்கெட் பயலுவ நாலு பெயரையும் அழைச்சுகிட்டு வாய்யா ‘’
இன்ஸ்பெக்டெர் சொன்னார்
திரு திரு வென விழித்தபடியே வந்து நின்றனர் நாலுபேரும்
இன்ஸ்பெக்டர் ஒவ்வொருத்தன் அருகிலும் நின்று காட்டி இவனா பாருங்க
என்று கேட்டபடி சென்றார் ,
’’இவங்க யாரும் இல்லை சார் ’’
‘’ நல்லா பார்த்து சொல்லுங்க ,இவனுக தான் அந்த ஏரியாவில அடிக்கடி அடிச்சுட்டு இங்க வருவானுங்க ‘’
‘’இல்ல சார் எனக்கு அவனை நல்லா தெரியும் ,அவன் கழுத்துகிட்ட ஒரு நட்சத்திர குறி இருக்கும் சார் ‘’
‘’ஏண்டா உங்க குரூப்பிலே அப்படி எவனாச்சும் இருக்கானா?தெரிஞ்சா சொல்லுங்கடா ‘’திருடர்களைப்பார்த்து கேட்டார்
‘’இல்லேசார் அப்படி யாரும் கிடையாதுசார் ‘’
‘’சரிம்மா நீங்க போங்க ,அடையாளம் சொல்லிட்டீங்களே வாட்ச் பண்றோம் ‘’
எரிச்சலோடு போனாள் ருத்ரா .மன விரக்தி போக முகனூலில் அமர்ந்தாள்.
அதில் யாரோ ஒரு புது முகம் ஒன்று ரிக்வெஸ்ட் கொடுத்திருந்தார்கள்
நீண்ட யோசனைக்குப்பிறகு அக்சப்ட் செய்தாள் .பின் ஒரு அப்டேட் போட்டுவிட்டு வெளியேறினாள்
அடுத்த நாள் அந்த புது முகக்காரன் தன் ப்ரொஃப்யில் பிக்சரை அப்டேட் பண்ணியிருந்தான் .ருத்ரா வேண்டா வெறுப்பாக லைக் கொடுத்து விட்டு
மூட எண்ணுகையில்..அவள்புத்தியில் திடீரென பல்பு எரிந்தது .பட்த்தை உர்றுப்பார்த்தாள்,,ஆம் அவனேதான் ,,அன்று தன்னிடம் கைபையை அடித்த அவனேதான் .சட்டென்று அவனைப்பற்றீய விபரங்கள் கண்டு பிடித்து ஓடினாள் இன்ஸ்பெக்டரிடம் ,
வாரே வா அறை மணியில் அவன் இருப்பிடம் சென்று இன்ச்பெக்டர் அவனை பிடித்து இழுத்து வந்தனர் ., நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோல் தானே ரிக்வெஸ்ட் கொடுத்து மாட்டிக்கொண்டான் , விசாரித்ததில் அந்த லாப்டாப்பும் வேறு ஒருவரிடம் திருடியது என்று
எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் திருடுவதற்குக் கூட,,அடப்பாவிகளா’
ருத்ராவிற்கு atm கார்டும் கைக்கு வந்து சேர்ந்தது .