வியாழன், 16 மார்ச், 2017

கவியருவி(ஏப்ரல் 2017) மின்னிதழ்

மகளிர் தினச்சிறப்புக் கவிதைப்போட்டியில் 'ஆவதும் பெண்ணாலே' தலைப்பில் புதுக்கவிதை, மரபு கவிதை, ஹைக்கூ வகைமையெனத் தம் திறன்களை வெளிப்படுத்திய அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டி மகிழ்கிறோம்.
.
இப்போட்டியில் சான்றிதழ் பெற்றுள்ள 20 கவிஞர்களின் படைப்புகளும் நமது கவியருவி(ஏப்ரல் 2017) மின்னிதழில் வெளிவரும்.
வாழ்த்துகள் அனைவருக்கும்
இவண்,
கவியருவி நிர்வாகக்குழு
ஆவதும் பெண்ணாலே
புதுக்கவிதை
பெண்கள் நாட்டின் கண்கள்
கண்கள் இல்லையென்றால்காட்சி ஏது
பெண்ணுலகம் இருந்தால்தான்
மண்ணும் விண்ணும் வாழும்
அன்பும் பண்பும் கொண்டவள்
நன்மை நிறைந்த நிறைமன
குணங்கள் கொண்டவள் பெண்
தன்னலம் கருதா தாய்மை அவள்
மனைத்தக்க மாண்புடையாளென்றும்
மனைமாட்சிக்குஎனை மாட்சியும் இல்லை
தகை சான்றவள் பெண்ணென்றும்
மனை மாட்சிக்கு மங்கலம் என்றும்
வள்ளுவரே புகழ்ந்திருக்கிறார் பெண்ணை
குழந்தையின் மனதிலே தாயாகிறாள்
குலமகள் முதிர்ச்சியில் கடவுள் ஆகிறாள்
கணவனின் அன்பிலே தாரமாகிறாள்
கற்புக்கரசியாய் சிறந்து விளங்குகிறாள்
சோர்வு இல்லாமல் உழைத்திடுவாள் பெண்
சுகத்தோடு வாழ உதவிடுவாள்
அன்பால் நம்மை அடக்குபவள்
பண்பால் நம்மை உயர்த்துபவள்
அன்னையாம் சக்தி அவளே
பெண்மையின் பெருமை அறிவீர்
உலகில் பெண்ணே இல்லையென்றால்
உலகம் எப்படி இயங்கும் என்பீர்
சரஸ்வதி ராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக