ஞாயிறு, 12 மார்ச், 2023

காவிரியின் அழகினிலே கண்மயங்கி நிற்போமே!

 காவிரியின் அழகினிலே கண்மயங்கி நிற்போமே!

தாவியோடும் பாங்கினிலே தரிசெல்லாம் செழித்திடுமே
காவிரித்தாய் பாய்கின்ற பாதையிலே
காலார நடந்துன்னைக் காண்கிறோம்
பூவிரித்து நாடெல்லாம் புகழ்விரித்தாய்
பொன்விரித்த சோழ புலவோரெல்லாம்
பாவிரித்தார் பாக்களாலே உன்னழகை
குடகு மலையில் பிறந்து வந்தாய்
பூம்புகாரில் வங்ககடலில் கலப்பவளே
வான் பொய்த்தாலும் நீ எப்போதும்
தான் பொழிக்காதவளே எங்கே போனாய்
வற்றாத அன்னை நீ வாழ்வளித்தாய்
பற்று கொண்டோம் உன் அருளால்
புவி மெச்சும் தமிழகத்தில்
பொங்கியோடி வளம் சேர்த்தாய்
நாவினிக்க போற்றினானே
நம் இளங்கோ காதையிலே
சோலையிலே மயில்கள் ஆடும்
குயில் விரும்பி இசை பாடும்
ஊர்ந்து நெளிந்து அசைந்து
வரும் நீயோ கொள்ளை அழகு
காற்றாறாய் பாய்ந்தோடிய உன்னை
கால்கட்டி வைத்தான் கரிகாலன்
தமிழகத்தின் ஆதார சுருதியே
ஆர்ப்பரித்து ஓடிவா அன்னையே நீ
தாவியோடும் பாங்கினிலே
தரிசெல்லாம் செழித்திடவே வந்துவிடு
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

மணிகண்டன் கவிதை

 மணிகண்டன் கவிதை

சபரி மலையிலேமணிகண்டன் சந்நிதானம்
பந்தள வேந்தரின் புண்ணிய செல்வன்
பம்பையின் பாலகன் பால்முக வடிவினன்
கண்ணனுக்கும் சிவனுக்கும் பாலகனாய்
கருணை வடிவமாக வந்துதித்தவன்
பம்பையிலே தலைமுழுகி பாவங்கள் அதில் கழுவி
பதினெட்டுப் படியேறி பக்கத்துக்கொரு காய் உடைத்து
பந்தள ராசனை மணி கண்ட யோகியை வணங்கி
பக்தியுடன் வேண்டினால் முக்தியும் கிடைத்திடும்
வில்லாளி வீரன் வில்லெடுத்துத் தனைத்தடுத்த
வில்லி மகிசியை வதம் செய்த கலியுகவரதன்
சங்கடங்கள் தீர்த்திடும் சபரிமலை எருமேலியவன்
சரணாகதி அடைந்தோருக்கு காட்சி தருபவன்
அய்யனின் நீலிமலை அமர்ந்திருப்பான்
புலிமேலே
அய்யனவன் சாஸ்தாவை அடி பணிவோம் நாளும்
வன்புலிமேல் அமர்ந்தவன் வாவர் சுவாமி தோழனவன்
இன்னல்கள் தீர்த்துவைப்பான் இனபேதமில்லாமல்
பொய்யுலகு விட்டு மெய்யுலகு சேர்ந்திட
நெய் அபிடேகம் செய்து அய்யன் பாதம் தொழுவோம்
சரஸ்வதிராசேந்திரன்
Boost this post to reach up to 293 more people if you

கள்வனும் அவனே கடவனும் அவனே

 கள்வனும் அவனே கடவனும் அவனே

களவொழுக்க நெறியோடு
காதலுள்ள தலைவனோ
இதயம் ஈர்த்தவளின்
இல்லம். தேடிவர
தலைவியோ எதிர்நின்ற
தோழியிடம் தன்நிலை
எடுத்துஅவனறிய. துரைத்த
இனிய. நல்லுரை
இதயம். முழுதும்
எனக்கே கொடுத்து
என்மனம் கவர்ந்த
கள்வனும் அவனே
நெஞ்சில் இனிக்கும்
நினைவுகள் தந்து
கொஞ்சிப் பேசியே
களவு கொண்டவன்
கடிதாய் வருவேனென
கூறிச் சென்றவன்
மறந்தானோ மங்கையெனை
காரிகை அவனை நம்பி
காவலின்றி ஏங்குகிறேனே
கன்னியின் நிலைஅறியானோ?
நலிந்தன. மென்தோள்கள்
நங்கையென் நிலைகண்டு
கலங்கிய வளையல்கள்
கழன்று விழுந்தன
பொலிவிழந்துப் பூத்தன
பாவையென் விழிகள்
என் நிலை அவன்பால்
யார் போய்உரைப்பார்?
சூளுரைத்தவன்அவன்
அதை காப்பாற்றுவதும்
அவன்கடமைஇல்லையா
அதை அவனேஅறிந்து
நான் படும் துன்பத்தைக்
கடக்க தெப்பம்ஆகவேண்டும்
கடிமணம் புரிய வேண்டும்
தோழியிடம்சொல்வதுபோல
துணைவனுக்குணர்த்தினாள்
கள்வனும் அவனே கடவனும் அவனே புணைவனும் அவனே
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

மஞ்சன நீராட வா

 மஞ்சன நீராட வா

வண்ண அழகிய நம்பி நாரணனே
என்னால் ஓடமுடியாது சொன்னால் கேள்
மஞ்சனம் நீராட வந்துவிடு மணிவண்ணா
பன்னீரும் சந்தனமும் பக்குவமாய் சேர்த்து
வென்னீர் கலந்து வைத்துள்ளேன் வாராய்
வெண்ணெய் அளைந்த கரமும் நீ
விளையாடிய தெருப் புழதியும் சேர்ந்து
உடலில் ஒருவித நாற்றம் வீசுகிறது
கட்டிலில் இரவு நீ படுத்துறங்க
உன்னை நான் அனுமதியேன் ஓடாதே
பாலில் வெல்லம் சேர்த்து உனக்குப்
பிடித்த அப்பம் சுட்டு வைத்திருக்கிறேன்
நன்னாளாம் நீ பிறந்த திருவோண
நந்நாளில் மஞ்சன நீராட வாராய்
நாரணா ஓடாதே கோகுல கண்ணா
ஆயர்பாடிக் கண்ணா ஓயாது உன்னை
ஆய்ச்சியரும் வெண்ணெய்க் குடத்தை உருட்டியதால்
புறம்பேசிச் சிரிக்கின்றனர் புரியவில்லையா உனக்கு
கன்றின் வாலைக்கட்டி கனிகளுதிர எறிந்து
பின் தொடர்ந்து பாம்பைபிடித்துக் கொண்டாட்டினாய்
காணப் பெரிதும் உவப்பாக இருந்தாலும்
கண்டவர் பழித்துக் கூறுவரே போதும் வா
மாணிக்கமே என் மரகதமே மஞ்சன நீராடாவா
சரஸ்வதிராசேந்திரன் See Less
May be an image of ‎text that says '‎இலக்கியப் பிருந்த ாவனம் இலக்கிய இன்பம் هیاد மஞ்சனம் வாராய் சிறப்புவெற்றியாளர் சர்ன்றிதழ சரஸ்வதி ராசேந்திரன் அவர்களுக்கு வழங்கி மகிழ்கி மகிழ்கிறோம் E () る‎'‎

திருவெம்பாவை

திருவெம்பாவை
வாழப் பிறந்த வளமார் உயிரினம்
வாழையடி வாழையாக உயர்வாக்கி வைக்கும்
உயர்ஞானப் பேறு அரிதென்று அடியார்கள்
உவந்து சிறந்தேஉண்ணாமலையானை தொழுது
இளமை பருவம் முதுமை இம்மூன்றும்
வளப்பம் காண வரமே வாய்ப்பாய்
வாதவூரார் அருளிய திருவெம்பாவை பாடுவது
பிறப்பழிய வித்தாக காட்டிய வழியாகும்
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி
அண்ணா மலையானை அதிகாலை எழுந்து
நீராடி நன்னீர ணிந்து தோழிமார்
நாங்கள் அவன் துதியைப் பாடும்
பாட்டொலி உன் செவியில் விழாதவாறு
பட்டுத்துணி போர்த்தி பாங்காய் உறங்குகிறாயே
ஈதென்ன பேருறக்கம் எழுவாய் என் தோழி
செவிப்பறையில் நுழைய வில்லையோ பாட்டு
எங்கள் பாட்டொலிக் கேட்டு வீதியில்
நடந்தவள் விம்மி அழுது வேண்டுகிறாள்
வீடு தேடிவரும் மகாதேவனைக் காண
விழையாது உறங்குவது நியாயமா எழுந்திரு
வாவியுள் நீராடி கூத்தனை வணங்குவோம்
என்னடி கேலி பேசுகிறீர் அயர்ந்திட்டேன்
அயர்ந்தாலும் கனவில் அந்த முக்கண்ணனை
உயர்ந்தே இருக்கும் சிவகாமி நாதனை’
இமைப் பொழுதும் நீங்கா சிவனை
இடையறாது நினைத்தே போற்றுகிற நானா
மறப்பேன் வாருங்கள் பாடிப் புகழ்வோம்
மார்கழி நீராடி உண்ணாமுலையை வணங்குவோம்
நோற்றிடும் நோன்புகள் நுட்பம் செயற்படுத்தும்
நற்றிறம் நன்மை தந்து வாழ்த்திடும்
இறைநெறி வாழ்க்கையில் எல்லாம் நிகழும்
அருட்பெரும் சோதியை அகமகிழப் பாடி
அவனது மலரடி போற்றிப் பாடேலோரெம்பாவாய்
சரஸ்வதிராசேந்திரன் See Less
May be an image of text that says 'ရင်တောင်အု််လ இச்ககிம்ப்பிருந் தவ்னம் காவியக் காவியக்களஞ்சிய களஞ்சியய் திருவெம்பாவை 16.12.2020 26.12.2020 சிறப்பு வெற்றியாளர் சான்றிதழ் கவிஞர் சரஸ்வதி ராசேந்திரன் அவர்களுக்குவழங்கிமகிழ்கிறோம் அவர்களுக்கு ளுக்கு வழங்கி மகிழ்கிறோம்'

சனி, 11 மார்ச், 2023

அகத்தியமும் அருந்தமிழும்

 அகத்தியமும் அருந்தமிழும்

ஏகமாய் நிற்கும் இனிதருள் ஆட்சி
ஆகும்நற் காட்சிக்கு அருந்தமிழே சாட்சி
ஆகமங்கள் கூறும் அருள்பூ மணங்கமழும்
அகத்தியமும் காப்பியமும் அருந்தமிழ் இலக்கணங்கள்
தேவாரத் திருத்தமிழ் தித்திக்கும் அருந்தமிழ்
மூவாத முத்தமிழ் மொழிகளுக்குள் மூத்தமொழி
அத்தனையும் அழகோசை அமுதமெனும் தமிழோசை
அமுதூறும் பாக்களினால் அருந்தமிழிலில் பாடுவமே
தமிழ்தெய்வம் தான்படைக்கும் தெய்வீக நூல்கள்
அமிழ்தம் பொழியும் இலக்கணச் சாரலழகை
முழுமையாய் சூழலகை ஆள்கின்ற மொழியாக்கி
செழுமை ஆக்குவதே செந்தமிழுக்கு சிறப்பு
சரஸ்வதிராசேந்திரன் See Less
No photo description available.
Boost this post to reach up to 408 more people if you spend ₹578.
Like
Comment
Share

தண்மழை தலையாகுக

 தண்மழை தலையாகுக

(எட்டுத்தொகை நூலில் ஒன்றான நல்ல. குறுந்தொகை நூலின்
378வது பாடல். _ பாடுபொருள்)
பொத்தி வளர்த்தவள் பொன்போன்று காத்தவள்
கண்ணின் இமையாக காத்து வைத்தவள்
கணமும் நினையாமல் காதல் வயப்பட்டு
தன்னைக் கொடுத்தவன் பின்னால் சென்றாளே
என்செய்வேன் நானினி முன்னிருக்கும் செவிலியிடம்
தன்னிலை எடுத்துரைத்து கண்கள் கலங்கினாள்
பெத்தவள் மனநிலை வெத்தலையாய் வாடி
பச்சைமண் போலே பெத்தமனசு தவிப்பதை
வாய்விட்டு சொல்ல வளர்த்தவளும் துயருற்றாள்
சென்ற இடம்தேடி சென்றாளே செவிலியும்
எங்கும் காணாது ஏங்கித் தவித்திருக்க
பாலைவழி சென்றதாக பார்த்தவர்கள் சொல்லிட
வளர்த்தவளும் வாடினாள்பெத்தவளிடம் சொல்லி
செவிலியின் சேதியை செவிவழி கேட்டத்தாய்
உய்யும் வழியின்றி உருகித் தவித்தாள்
நயனவிழியாள் பயணம் போகும் வழி
பாலை யென்றால் பாவையவள் நடப்பதெப்படி
வஞ்சியின் பாதங்கள் பஞ்சு போன்றது
வேகும் வெயிலில் வெந்துதான் போகும்
இயக்கிடும் வல்லமை இறைவன்கண் உண்டு
இயக்கிடு இறைவா இன்னல் வாராது
பாலையின் மண்ணெல்லாம் பசுமை ஆகிட
பொழிந்திடு மழையை வழி தோறும்
பைங்கிளிமேல் துன்பம் படராதிருக்க அருள்க
பிதற்றியே புலம்பித் தவித்தாள் பெற்றதாய்
சரஸ்வதிராசேந்திரன்
Comments
Kesavadhas Saraswathi Rajendran இயல்பான சொற்களால் கட்டியக் கவிதையிது!
இதில் சிறப்பு என்ன வெனில் அழைத்துச் சென்றவன் நல்லவனே எனச் சொல்லாமல் சொல்லும் தாயின் வரிகள்: தன்னைக் கொடுத்தவன் பின்னால் சென்றாளே
பைங்கிளி மீது துன்பம் படராதிருக்க பிதற்றிப் புலம்பும் நன்றாயின் வேண்டல் அழகாகச் சொல்லப் பட்டுள்ளது!
கவிதை பேரழகு வாழ்த்துகள்!
கவிஞரே!
No photo description available.

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் கொடிய அரக்கன் இரணியன் கயாதுக்கு அருந்தவப் புதல்வனாய் பிரகலாதன் பிறந்தான் தான் பெற்ற சாகா வரத்தால் இரணியன் சாக அடித்தான் மக்களை கொடும்ஆட்சியால் நானே கடவுள் தன்னையே வணங்க வேண்டும் தானெனும்அகந்தையால் தருக்கியே நடந்து ஆட்டுவித்தான் அனைவரையுமே நற்பேறாய் அவன் மைந்தன் கருவகத்தே நாரதர் நாராயண மந்திரம் ஓதிட பிள்ளையும் அதனைப் பின்பற்றி உருவேற்றினான் போதித்தார் சுக்கிராச்சாரியார் இரணியன்தான் கடவுளென்று பிரகலாதனோ நாராயணந்தான் மூலக் கடவுளென்றான் அரக்கன் சினத்தால் மகனை அடக்க. நினைக்க அரங்கனைப் பற்றிய பக்தியில் அடங்கவில்லைமகனும் மகனென்றும் பாராது மடமையால் மல்லுக்கு நின்றான் மடங்கவில்ல பிரகலாதன் அசரவில்லை தன் பக்தியால் கொல்லவும் துணிந்தான் இரணியன் மகனை வெல்லமுடியாமல் தோல்வியால் துவண்டுபோனான் தீராகோபத்தின் உச்சத்தில் நின்று கேட்டான் எங்கடா காட்டு உன் கடவுளையென்று கூற துணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் மகன் சொல்ல மதியிழந்த இரணியன் தூணைக் கதையால் பிளக்க உள்ளிருந்த நரசிம்மமூர்த்தி கடுங்கோபத்தால் இரணியன் பெற்ற சாகாவரங்கள் பலிக்காத வகையில் வதம் செய்தார் நாராயண மந்த்ரம் நாளும் நாமோதிட நாம் பெறுவோம் பேரின்பம் நன்மையுடன் சரஸ்வதிராசேந்திரன் Comments Kesavadhas Saraswathi Rajendran கவிதை மிகவும் அழகு! வாழ்த்துகள் கவிஞரே!

 தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

கொடிய அரக்கன் இரணியன் கயாதுக்கு அருந்தவப்
புதல்வனாய் பிரகலாதன் பிறந்தான்
தான் பெற்ற சாகா வரத்தால் இரணியன்
சாக அடித்தான் மக்களை கொடும்ஆட்சியால்
நானே கடவுள் தன்னையே வணங்க வேண்டும்
தானெனும்அகந்தையால்
தருக்கியே நடந்து
ஆட்டுவித்தான் அனைவரையுமே
நற்பேறாய் அவன் மைந்தன் கருவகத்தே
நாரதர் நாராயண மந்திரம் ஓதிட
பிள்ளையும் அதனைப் பின்பற்றி உருவேற்றினான்
போதித்தார் சுக்கிராச்சாரியார் இரணியன்தான் கடவுளென்று
பிரகலாதனோ நாராயணந்தான் மூலக் கடவுளென்றான்
அரக்கன் சினத்தால் மகனை அடக்க. நினைக்க
அரங்கனைப் பற்றிய பக்தியில் அடங்கவில்லைமகனும்
மகனென்றும் பாராது மடமையால்
மல்லுக்கு நின்றான்
மடங்கவில்ல பிரகலாதன் அசரவில்லை தன் பக்தியால்
கொல்லவும் துணிந்தான் இரணியன் மகனை
வெல்லமுடியாமல் தோல்வியால் துவண்டுபோனான்
தீராகோபத்தின் உச்சத்தில் நின்று கேட்டான்
எங்கடா காட்டு உன் கடவுளையென்று கூற
துணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்
மகன் சொல்ல மதியிழந்த இரணியன்
தூணைக் கதையால் பிளக்க உள்ளிருந்த
நரசிம்மமூர்த்தி கடுங்கோபத்தால் இரணியன் பெற்ற
சாகாவரங்கள் பலிக்காத வகையில் வதம் செய்தார்
நாராயண மந்த்ரம் நாளும் நாமோதிட
நாம் பெறுவோம் பேரின்பம் நன்மையுடன்
சரஸ்வதிராசேந்திரன்
Comments
Kesavadhas
Saraswathi Rajendran கவிதை மிகவும் அழகு!
வாழ்த்துகள் கவிஞரே!
No photo description available.

சிறுகோட்டுப் பெரும்பழம்

 சிறுகோட்டுப் பெரும்பழம்

தலைவனிடம் தலைவியின் தோழி உரைத்தாள்
வேரல் வேலி மலை நிலமங்கே
வேரின் தூரில் தொங்கும் பலா
சாரல்நாட நான் கூறல் கேளாய்
உன்மீது கொண்ட காதலால் தலைவி
உன்மத்தம் ஆகி உயிர்வதை படுகிறாள்
பெற்றவளின் காவலையும் மீறும் துணிவு
தருமந்த காதலுக்கே உண்டு அறிவீர்
உணர்ச்சிப் பிழம்பாக பூத்திட்ட மோகத்துள்/
புணர்ந்தன காதல் இதயங்கள் கலந்தன
உன்னிடத்தில் வைத்த உயிரை மீட்கமுடியாமல்
இதயம் முழுமையும் உனக்கே கொடுத்து
எப்பொழு துமுன் எண்ணமே மிகுந்து
உணர்ச்சிக் கூத்தில் உள்ளத்தை வரித்து
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நினைப்பில்
உருமாறி நிற்கின்றாள் உடல் வாடி
எண்ணத் தேனில் ஈயாய் விழுந்து
மோகக் கடலில் மூழ்கித் தவித்து
காம சுகத்தால் காலங் கழித்து
நரகில் விழுந்து நலமின்றித் தவிக்கின்றாள்
இதுவரை சொன்னேன் இன்னும் கேளாய்
வேரில் தொங்கும் கனியாய் அவளும்
அறுந்து விழுந்தால் அணுகுவர் பலரும்
அலரின் பழியும் அவளைக் கொல்லுமே
காதல் தலைவியைக் காப்பதுன் கடன்
எரிந்து கொண்டிருக்கும் தலைவியை அணைத்து
தாலியை கொடுத்து வேலியாய் நின்றிடுக
சரஸ்வதிராசேந்திரன்
Comments
No photo description available.
Boost this post to reach up to 408 more pe