வியாழன், 16 மார்ச், 2017

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில் 08/03/2017 நாள் நடந்த படப் போட்டியில்

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி யே. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்
08/03/2017 நாள் நடந்த படப் போட்டியில்
கவிதை எழுதிய
கவிஞர் [ சரஸ்வதி ராசேந்திரன்]
சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார் கவிதை எழுதிய அனைத்து பாவலர்களுக்கும் வாழ்த்துக்கள்
சிறப்பான கவிதைகளை தேர்வு
செய்த நடுவர் கவிஞர் சேகு இஸ்மாயில் முகம்மது அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தலைமை நிர் வாகி ந. பாண்டியராஜன் ***
படப்போட்டி சான்றிதழ் போட்டியாளர்
ஈன்ற கன்றுக்கு
ஈந்தளிக்கும் தாய்ப்பசு
தாய்ப்பால் இல்லாத குழந்தைக்கும்
தானமிடும் பசும்பாலை
புல்லு கொடுத்தா பால் கொடுக்கும்
மடி சுமக்கும் பாலை
மங்கையவள் கறப்பாள்
ஏர் ஒட்டவும் வண்டி இழுக்கவும்
எருதாகப் பயன்படுகிறது
கோமாதாவை குலமாதாவாக
கொண்டாடித் தொழுவோம்
தேவைக்குப் பால் கொடுக்கும்
தீதிலாச்செல்வத்தை தீதின்றி காப்போம்
ரத்தத்தை பாலாக்கி
பெத்தப் பிள்ளைக்கு
ஊட்டுவாள் தாய்
ரத்தத்தை கன்றுக்கும் கொடுத்து
மொத்தஊருக்கும்கொடுக்கும் பசு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக