புதன், 8 மார்ச், 2017

தமிழமுது கவிச்சாரல்---22=12-2016 வைத்தியம் வேண்டும் வைத்தியனுக்கு-

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
- பாவேந்தர்
வணக்கம் பாவலர்களே #கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்...
தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நேற்றைய 22--12--16 நாளாம் போட்டி கவிதையின் #தலைப்பு_வைத்தியம்_வேண்டும்_வைத்தியனுக்கு_பணமென்ற_மாயையில்
தொடங்கவும் (((((((((((((((((((
#பிணியில்லா_மனிதனாய்_பிறப்பதும்_வரமே...
முடிக்கவும்))))))))))))))))
வெற்றியாளர் #கவிஞர்_சரஸ்வதிராசேந்திரன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
#கவிஞர்_கவிச்சிகரம் _பெ .தி .சுகுமார் பங்கேற்று சிறப்பான கவிதையை தேர்வு செய்தமைக்கு அவருர்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வைத்தியம்_வேண்டும்_வைத்தியனுக்கு_பணமென்ற_மாயையில் தொடங்கவும் (((((((((((((((((((
***
பிணியில்லா_மனிதனாய்_பிறப்பதும்_வரமே முடிக்கவும்))))))))))))))))
வைத்தியம் வேண்டும் வைத்தியனுக்கு பணமென்ற மாயையில் மூழ்கி
மக்கள் சேவை மகேசன் சேவை என்பதை மறந்து தன்
மக்கள் நலனே பெரிதெனக் கொண்டு
புதுப் புது நோய்களைச் சொல்லி
பொருள் விலை பட்டியல் போட்டு
பிடுங்கும் வரை ஆதாயமாய் கொண்டு
தலைவலி என்று போனால் கூட
தலை முதல் கால்வரை பரிசீலனை
தான் வாங்கிய தொழி நுட்ப கருவிகளை பயன் படுத்த
பின் மளிகை பொருட்களாய் மருந்துகள் அட்டவணை
அதுவும் போதா தென்று வேறொரு
மருத்துவருக்கு சிபாரிசு கடிதம் தரகு பெற
மனிதாபிமான மில்லா மனிதரெல்லாம்
மருத்துவச் சேவைக்கு வந்தால் மக்கள் வாழ்வு என்னாகும் ?
விரல் விட் டெண்ணக் கூடிய ஒரு சிலர் இந்த
அணியில் சேராமல் மருத்துவ சேவை செய்கிறார்ஆனாலும் ;இன்று
பிணி இல்லா மனிதனாய் பிறப்பதும் வரமே
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக