
காதலாகிய கவிதை
அம்பு ஒன்று பட்டது
ஆதி அந்தம் சுட்டது
வட்டமிடும் சூரியன் போல்
வந்து வந்து தினம் சுற்றியது
கொட்டும் மழை போலவே
குமுறிவந்ததுஎண்ணங்கள்
ஆதி அந்தம் சுட்டது
வட்டமிடும் சூரியன் போல்
வந்து வந்து தினம் சுற்றியது
கொட்டும் மழை போலவே
குமுறிவந்ததுஎண்ணங்கள்
அலையில் வந்து அலைமோதும்
கலையில் புதுமை கலையாகும்
பாதம் தொடும் கொலுசுகள்
வேதமாய் ஓதியது காதலை
தென்பாண்டி முத்துச்சரம்
அவள்செவ்வாயில் சிந்தியது
கலையில் புதுமை கலையாகும்
பாதம் தொடும் கொலுசுகள்
வேதமாய் ஓதியது காதலை
தென்பாண்டி முத்துச்சரம்
அவள்செவ்வாயில் சிந்தியது
மங்கை அவள் கைபட்டதும்
மண்ணுகூட பொன்னாகியது
கன்னி அவள் கால்பட்டதும்
பாறைகூட பால் வார்த்தது
அரும்பிய மொட்டே
அழகான மலராகியது
விரும்பிய அவள் காதலே
விலகாது இன்றும் நின்றது
சிறகொடிந்து போனாலும்
துடி துடித்துச் சுற்றியது
மண்ணுகூட பொன்னாகியது
கன்னி அவள் கால்பட்டதும்
பாறைகூட பால் வார்த்தது
அரும்பிய மொட்டே
அழகான மலராகியது
விரும்பிய அவள் காதலே
விலகாது இன்றும் நின்றது
சிறகொடிந்து போனாலும்
துடி துடித்துச் சுற்றியது
எண்ணத்தில் காதல் இருந்தால்
எழுத்துக்கும் பஞ்சமில்லை
வண்ணமயமான காதல்
வரி வரியாய் செதுக்கியது
என்னுள் விளைந்த இனிய
காதலாகிய கவிதை இது
எழுத்துக்கும் பஞ்சமில்லை
வண்ணமயமான காதல்
வரி வரியாய் செதுக்கியது
என்னுள் விளைந்த இனிய
காதலாகிய கவிதை இது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக