வியாழன், 25 அக்டோபர், 2018

தமிழ்சேவை---28-9-2018

நெஞ்சுக்குள் நெருஞ்சியாய்த் தைப்பவளே

கஞ்சிக் கலையம் சுமந்து நீ நடக்கையிலே
விஞ்சி நிற்கும் உன் அழகில் மயங்கிப்போனேன்
அஞ்சி நீயும் தொடரும் என்னை பார்த்தபோதே
நெருஞ்சி முள்ளும் நெஞ்சுக்குள்ளே தைத்தடி

நெஞ்சுக்குள் நெருஞ்சியாய்த் தைப்பவளே
வஞ்சியுன் நினைவாலென்னை வதைப்பவளே
கொஞ்சமும் என்மேல் இரக்கம் இல்லையா
தஞ்சம் அடைந்த பின்னும் தயவில்லையா

தைச்ச முள்ளை எடுத்துப்போடமுடியவில்லை
மச்சக்காளை என் இரவும் நீயின்றி விடியவேயில்லை
உச்சத்திலே நானும் மயங்கி உளறிக்கொட்டுறேன்
துச்சமாக என்னை நீயும் நினைக்க வேண்டாம்

அச்சம் வேண்டாம் வஞ்சி நீயும் வந்துவிடடி
சொச்சக் காலமாவது தவிக்க விடாம வாழவிடடி ஊர்
மெச்ச தாலிகட்டி உன்னை வாழ வைப்பேண்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக