வெள்ளி, 26 அக்டோபர், 2018

நதியோர நாணல்கள்

No automatic alt text available.செம்பருத்தி பூத்திருக்கு அக்கா மவளே
செவத்த முகம் போலிருக்குஅக்கா மவளே
ஒசந்த ஓவியமா அக்கா மவளே
ஒய்யார செலயா நீ அக்கா மவளே
உன் கன்னக்குழி அழகில் அக்கா மவளே
என்னையே நான் இழந்துட்டேன் அக்கா மவளே
உள்ளங் கையால் உன்னைத் தாங்குவேனடி
உன்னைக் காக்கவே மண்ணில் வாழுவேனடி
ஊதகாத்து வீசுதடி அக்காமவளே
கூதலதான் கேட்குதடி அக்கா மவளே
வெரசா நீயும் வாடி என் அக்கா மவளே
உசிரே நீதாண்டி என் அக்கா மவளே
மாலையோடு நான் வருவேன் அக்கா மவளே
மஞ்சத்தாலியும் கொண்டுவாரேன் அக்கா மவளே
சேலைகூட வாங்கி வருவேன் அக்கா மவளே
சேர்த்தணைக்க நாள் குறிப்பேன் அக்கா மவளே
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக