வியாழன், 25 அக்டோபர், 2018

தமிழ்சேவை--24-9-2018

ஆடும் வரை ஆட்டம்
கோடிகளைச் சோ்ப்பதிலே நாட்டம்
கூடி நிற்கும் உறவுகளின் கூட்டம்
தேடியவை கரைந்து விட்டால். வாட்டம்
ஓடிவிடும் உறவுகளின் பாசவட்டம்
ஆண்டவன் படைத்தான் நல் அறிவோடு
ஆணவத்தில் மிதக்கிறான் மனிதன்
செறிவோடு
இருப்பது சிலநாள் இதற்குள் ஏனிந்தஆட்டம்
விருப்பப்படி ஆடுகிறது மனிதகூட்டம்
ஆடும் வரை ஆட்டம்ஆடியபின்
ஆறடி நிலத்தில் அடக்கம்
ஆட்டுவிப்பவன் அந்த பரமன்
ஆடி. களைப்பவன்இந்த பாமரன்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக