வெள்ளி, 26 அக்டோபர், 2018

பன்னீர்பூக்கள் மின்னிதழ்

காசாசைச் சூதாட்டம்
காலத்தை வீணாக்கும்
நாசமாக்கும் வாழ்வை
நாளும் சிதைக்கும்
பேராசை என்றுமே
பேரழிவைத் தரும்
ஏசப்படாமல் வாழ்வதே
ஏற்றத்தைத் தரும்
நாசம் விளைவிக்கும்
நஞ்சுச் செயல்களை
வீசி எறிந்துவிடு
விவேகத்தோடு வாழ்ந்திடு
அசலாகி வாழ்தலே
ஆக்கம் அளிக்கும்
நிசமான உழைப்பே
நன்மை செய்யும்
அறிவாய் இருத்தல்
அனைவருக்கு மழகே
– சரஸ்வதி ராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக