வெள்ளி, 26 அக்டோபர், 2018

வேட்டை அக்டோபர் 30

யாதொன்றும் இல்லாமல் எதுவும் தெரியாமல்
இருந்திட்ட என்னை காந்தம்போல் ஈர்த்தாய்
விழிகளில் வித்தைக் காட்டி விளையாடுகிறாய்
பொழியும் அன்பினால் போதைகொள்ளச்செய்கிறாய்
அமுத சுரபியில் அன்னத்தைஅள்ளிக் கொடுத்து
அரும்பசியை மணிமேகலைத் தீர்த்ததுபோல்
தேடியே வந்து அன்பினை அள்ளித்தெளித்து
கூடிய செல்வங்கள் கூட்டும் நிறைவினைத் தந்திடு
வானம் விரிந்ததுபோல் வாழ்வை விரிவாக்கி
மானமுடன் என்னையும் வாழ வழி வகுப்பாய்
அரும்பிய மொட்டே அழகிய பூக்களாகும்
விரும்பியே வாழ்வேன் உன்னுடன் நானும்
வாழ்வை விரிவாக்கு(கலை இலக்கியம் -கவிதைகள்)
October 20, 2018 · by Vettai Galhinna · 0Image may contain: cloud, sky, ocean, text and outdoor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக